செவ்வாய், 5 ஜூன், 2018

வரனின் ஜாதகம் யோகம் மிக்கதா ? இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையுமா ?


 சுய ஜாதகம் வலிமை மிக்க வாழ்க்கை துணையை நாம் தேர்வு செய்யும் பொழுது நமது இல்லற வாழ்க்கை மென்மேலும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, பெண்களுக்கு நல்ல வரன் அமைவது என்பது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் அமைப்பாகும், தாங்கள் அனுப்பி உள்ள வரனின் ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றியும், தாங்கள் இந்த வரனை வாழ்க்கை துணையாக தேர்வு செய்யும் பட்சத்தில் அதன் மூலம் தாங்கள் பெரும் யோக அவயோகம் பற்றியும் இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் சகோதரி, வரனின் ஜாதகம் யோகம் மிக்கதா ? இந்த வரனை தங்களின் வாழ்க்கை துணையாக தேர்வு செய்யும் பொழுது தங்களின் இல்லற வாழ்க்கை மேன்மை பெறுமா என்பதை " ஜோதிடதீபம் " வழங்கும் ஆலோசனையுடன் தங்களின் இல்லற வாழ்க்கையை துவங்குங்கள்..


லக்கினம் : சிம்மம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 1ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,2,3,5,6,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து சிறப்பான வளரும் சூழ்நிலையையும், தெளிந்த நல்லறிவையும், சமயோசித அறிவு திறனையும், ஆன்மீகத்தில் ஆர்வத்தையும், சிறந்த உடல் நலத்தையும், நீண்ட ஆயுள், புகழ், வெற்றி, கீர்த்தியுடன் சுபயோக வாழ்க்கையை நல்கும், 2ம் பாவக வழியில் இருந்து நிறைவான வருமானம், குடும்பத்தில் மகிழ்ச்சி, இனிமையான பேச்சு, தொழில் வழியிலான தன சேர்க்கை, தெய்வீக அனுகிரகம், பொருளாதார தன்னிறைவு என்ற வகையில் சிறப்புகளை தரும், 3ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், சகல சௌபாக்கியம், முயற்சிக்கும் காரியங்கள் வெற்றி, வீரியமிக்க செயல் திறன், சகோதர வழி ஆதரவு, தைரியம், தன்னம்பிக்கை, ஏஜென்சி துறையில் வெற்றி என்ற வகையில் யோகத்தை தரும்.

5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம், தனது அதீத புத்திசாலித்தனத்தால் ஆதாயம், தெய்வீக அனுக்கிரகம், புதிய முயற்சிகள் மூலம் வெற்றி ஆராய்ச்சி, கலைத்துறையில் வெற்றி, குழந்தைகள் மூலம் லாபம் என்ற வகையிலும், 6ம் பாவக வழியில் இருந்து எதிரிகளால் நன்மை, கடன் சார்ந்த விஷயங்களில் இருந்து வரும் லாபம், குறுகிய காலத்தில் பெருளாதார தன்னிறைவு, எதிர்ப்புகள் அனைத்தும் வெற்றியாக மாறுதல், பொருளாதர தன்னிறைவு என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள் போனஸ், கிராஜுவிட்டி, பங்கு மூலம் லாபம், இன்சூரன்ஸ் துறையில் நல்ல முன்னேற்றம், பரம்பரை சொத்து, செல்வம் போன்றவை மூலம் லாபம் பெறுதல், மருத்துவ துறையில் நிறைந்த லாபம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் என்ற வகையில் சிறப்புகளை தரும், 11ம் பாவக வழியில் இருந்து நல்ல குணம், நீடித்த அதிர்ஷ்டம், தெய்வீக அனுக்கிரகம், புதிய சூழ்நிலைகளில் நல்ல வெற்றியை பெரும் யோகம், முற்போக்கு  சிந்தனை, சுய தேடுதல் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியிலான முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும், ஜாதகரின் திருமணத்திற்கு பிறகான முன்னேற்றம் என்பது வியக்கத்தக்க வகையில் அமையும், எதிர்பாராத அதிர்ஷ்டம், வெளிநாடுகளில் இருந்து வரும் யோகம், பொதுமக்களிடம் மதிப்பு மரியாதை, அரசு கவுரவம், பெரிய பதவிகள், நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள், கூட்டு தொழில் வழியிலான அதிர்ஷ்டம் என்ற வகையில் சிறப்புகளை  வாரி வழங்கும், வாழ்க்கை துணையினால் ஜாதகருக்கும், ஜாதகரால் வாழ்க்கை துணைக்கும் மிகுந்த நன்மைகளையும் அதிர்ஷ்டங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் அமையும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு வீடு வண்டி வாகனம் மற்றும் சொத்து சுக சேர்க்கை சுய உழைப்பின் மூலம் பெறுவதற்கான வாய்ப்பை பெறுவார், சுக போகங்களுக்கு குறைவு இருக்காது, பல தொழில் செய்வதற்க்கான வாய்ப்புகள் உண்டாகும், நல்லோர் சேர்க்கை, சிறந்த நல்ல குணம், பெருந்தன்மையான மனம் போன்றவை ஜாதகரின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிலையான தொழில், கவுரவம், அந்தஸ்து உண்டாகும், சுய தொழில் அல்லது பணியில் தன்னிறைவான யோகங்களை பெரும் அமைப்பு, பொது வாழ்வில் மதிப்பு மரியாதை, கம்பீரம் மிக்க செயல்பாடுகள், தொழில் வெற்றி என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் 9ம் பாவக வழியில் இருந்து கடுமையான பித்ரு தோஷம் உண்டாவதால், சுபாகரியங்கள் யாவும் தடை தாமாதமாக நடைபெறும், ஆன்மீக வெற்றி பெற ஜாதகர் சற்று சிரமங்களை சந்திக்க நேரலாம், பெரிய மனிதர்கள், ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெற மிகுந்த தடைகளை தாண்டி பயணிக்கும் சூழ்நிலையை தரும், சில நேரங்களில் ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு பெருத்த சேதம்உண்டாக கூடும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதீத மனஅழுத்தம், போராட்டம் போன்றவற்றை அனுபவிக்கும் நிலையை தரும், நிம்மதி குறைவு, நல்ல உறக்கமின்மை போன்றவை ஜாதகரின் செயல்பாடுகளை முடக்கி வைக்கும், உடல் நல பாதிப்பு அல்லது சோர்வு ஜாதகரை பாதிக்க கூடும், மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகருக்கு பெரும் மனவேதனையை தரக்கூடும்.

நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோகங்களையும், 9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் தருவது கவனிக்கத்தக்கது, ராகு திசையில் சுக்கிரன் புத்தி ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோகங்களை தருவது ஜாதகருக்கு சொத்து சுக சேர்க்கை மற்றும் தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும் என்பது சிறப்பு அம்சமாகும்.

எதிர் வரும் குரு திசை ஜாதகருக்கு 11ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோகங்களை நல்குவது ஜாதகருக்கு 11்ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், குழந்தைகள் மூலம் யோகம், நல்ல  வாரிசு, தனது கல்வியின் மூலம் உயர் பதவிகளை அலங்கரிக்கும் யோகம், கலைத்துறையில் வெற்றி, முன்னேற்றம் என்பது அபரிவிதமான அமைப்பில் ஜாதகருக்கு தேடிவரும், குரு திசை ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

சகோதரி தங்களுக்கு வந்துள்ள வரனின் ஜாதகம், தங்களது ஜாதகத்தின் வலிமையை விட 200% விகிதம் சிறப்பாக உள்ளதால், தாங்கள் இந்த வரனை வாழ்க்கை துணையாக தேர்வு செய்து யோகமிக்க இல்லற வாழ்க்கையை பெற " ஜோதிடதீபம் " ஆலோசணையை வாரி வழங்குகிறது, தங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை இவரே என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, வாழ்த்துக்கள்.....


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக