செவ்வாய், 31 ஜனவரி, 2012

தமிழக முக்கிய நபர்கள் சிலரை செயல் இழக்க வைத்த கதைகள் நிறைய உண்டு.


 கேள்வி :

 அதனால் அவர்களுக்கு என்ன லாபம் ?
(எதிரிகள் தொந்தரவு ஏற்படும் என்று பயமா ?)
விளக்கவும்
அய்யா பழைய பாடல்களில் ஜோதிட குறிப்பு இல்லையா?
பரிஹர்ரம் இல்லையா ?
சித்தர்களின் பாடல்கள் மற்றும் புலிபானி அவர்களின் பாடல்கள் நிறைய ஜோதிட குறிப்புகள் கொடுத்துள்ளனர் ?? விளக்கவும்.

 பதில் : 
முக்கிய நபர்களின் ஜாதகங்கள், தீய எண்ணம் கொண்ட மற்றவர்களுக்கு கிடைக்கும் பொழுது, அவர்கள் ஜாதகரை பல வழிகளில் செயல் இழக்க வைக்க முடியும், அஷ்டம சித்து எனும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களால் இக்காரியங்களை சரியாக செய்யும் ஆற்றல் படைத்தவர்கள். 

எனவே அவர்களது ஜாதகங்கள் மறைக்கப்படுகின்றது,
இக்கலையினை பயன்படுத்தி தமிழக முக்கிய நபர்கள் சிலரை செயல் இழக்க வைத்த கதைகள் நிறைய உண்டு.

இதில் அதிகம் பாதிக்க பட்டவர்கள் தமிழகத்தில் சிறந்த அரசியல் வாதிகள், கலை துறையை சேர்ந்தவர்கள், தொழில் அதிபர்கள் என பட்டியல் நீளுகிறது, 

ஒருவருடை உண்மையான ஜாதகம் இருந்தால் அவரை உலகின் சிறந்த மனிதராகவும் மாற்ற முடியும் அல்லது உலகின் கடை கோடியிலும் நிறுத்த முடியும்( இது அவருக்கு தெரியாமலே ), இந்த அஷ்டம சித்துவின் மூலம். இதை துரியம் நன்றாக செயல் படுபவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்

பழைய பாடல்களில் பரிகாரங்கள் மறை முகமாகவே உணர்த்தப்படுகிறது , ஒரு பாடலுக்கு ஒன்பது விளக்கங்கள் உண்டு, என்பதினை தமிழ் பழைய பாடல்கள் ஆராய்ச்சி செய்பவர்கள் தமிழ் ஆர்வலர்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம், 

மேலும் பரிகாரம் என்பது ஜாதகரே செய்யும் அமைப்பில் மட்டுமே உள்ளது எடுத்துக்காட்டாக ஒருவருக்கு பத்தாம் வீடு என்பது ஜீவனம் மற்றும் தகப்பனார் வகை காரக பலன்களை வழங்கும்,
( பாரம்பரிய முறையில் ஒன்பதாம் வீடு தகப்பனார் ஸ்தானம் என்பார்கள் )

இந்த பத்தாம் வீடு ஒருவருக்கு பாதிப்படைந்தால், அந்த ஜாதகருக்கு தக்கப்பனார் வழியில் பதிப்பு இருந்து கொண்டே இருக்கும் அதற்க்கு ஜாதகர் அவரது தகப்பனார் மூலம் எவ்வித துன்பம் ஏற்ப்பட்டாலும் அதை ஏற்றுக்கொண்டு, அந்த காரக கர்ம வினை பத்தி வினை கழித்துக்கொள்ள வேண்டும், இதுவே சரியான பரிகாரம், ஏனெனில் அவர் கடந்த பிறவியில் இந்த காரக சம்பந்தபட்ட பாவ வினையினை செய்திருப்பார்.

சித்தர்கள் எப்பொழுதுமே தீர்க்க  தரிசிகள், அவர்களது பாடல்களில் ஜோதிட குறிப்புகளை நாம் அறிந்து கொள்ள சுழி முனையில் நின்று மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும், இதற்க்கு கடுமையான பயிற்ச்சிகள் தேவை, மேலும் அவர்களது அருளாசி கண்டிப்பாக தேவை.
   
மேலும் வரும் ...
ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 

2 கருத்துகள்:

  1. உங்கள் நீண்ட பதிவிற்கு நன்றி. நல்ல விளக்கம்.

    //மேலும் வரும் ...//

    எதிர்பார்த்து கொண்டுரிகிறேன்

    பதிலளிநீக்கு
  2. //பழைய பாடல்களில் பரிகாரங்கள் மறை முகமாகவே உணர்த்தப்படுகிறது , ஒரு பாடலுக்கு ஒன்பது விளக்கங்கள் உண்டு, என்பதினை தமிழ் பழைய பாடல்கள் ஆராய்ச்சி செய்பவர்கள் தமிழ் ஆர்வலர்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம், //

    என்னுடைய வைத்திய நண்பர் ஒருவர் ஒருபாடல் கூறி அதற்கான அர்த்தம் கேட்டார். நான் எனக்கு தெரிந்த அர்த்தத்தை கூறினேன். அப்போது அவர் மறை பொருள் விளக்கத்தை கூறினார்.. அதில் முன்று அர்த்தம் இருந்தது... முறயாக கற்காமல் பாடல் பார்த்தல் புரியாது. நீங்கள் கூறுவது உண்மை

    //சித்தர்கள் எப்பொழுதுமே தீர்க்க தரிசிகள், அவர்களது பாடல்களில் ஜோதிட குறிப்புகளை நாம் அறிந்து கொள்ள சுழி முனையில் நின்று மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும், இதற்க்கு கடுமையான பயிற்ச்சிகள் தேவை, மேலும் அவர்களது அருளாசி கண்டிப்பாக தேவை.//

    முற்றிலும் உண்மை.. அவர்கள் ஆசி இருந்தால் கற்கலாம்

    //அவர்கள் ஜாதகரை பல வழிகளில் செயல் இழக்க வைக்க முடியும்,//

    உண்மை. நான் கேள்விப்பட்டவரை ஒருவருடைய போட்டோ, பிறந்த தேதி விவரம் ரகசியமாக வைத்துகொள்ளவும். தீயவரிடம் சேரகூடாது.

    இன்றுகூட பாம்பாட்டி சித்தரை தரிசித்து வந்தேன்.. பதிவும் சித்தரை பற்றி.. என்ன ஒற்றுமை..நன்றி

    பதிலளிநீக்கு