கேள்வி :
சுய ஜாதக அமைப்பில் ஒரு ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும், 5 ம் வீடு வலு விழந்து இருந்தால், ஜாதகர் என்ன செய்ய வேண்டும் ?
பதில் :
ஜாதகர் தனது பூர்விகம் எதுவோ அந்த ஊரை விட்டு 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சென்று ஜீவனம் மற்றும் குடும்பம் நடத்துவது சகல நலம் தரும்.
பாதிக்கப்பட்ட பூர்வ புண்ணியம் சர ராசியாக இருந்தால் ஜாதகர் நிலை மிகவும் மோசமான பதிப்புக்களை சந்திப்பவராக இருப்பார்.
ஜாதகரின் முன்னேற்றம் என்பது 100 சதவிகிதம் பாதிக்கப்படும்.
கல்வியை நிறைவு செய்ய முடியாத தன்மை, சரியான தொழில் அமைவதில் சிக்கல் , திருமண தாமதம் , பொருளாதார முன்னேற்றம் இல்லாத வாழ்க்கை முறை , உடல்நிலை பாதிப்பு , தனது உடலை தானே கெடுத்துக்கொல்லுதல், போதைக்கு அடிமை , மன நிம்மதி இல்லாத வாழ்க்கை , மற்றவரை சார்ந்து வாழ்க்கை நடத்துதல்
மேலும் புத்திர பாக்கியம் இல்லாத நிலை , மற்றவர்களுடனும் உறவினருடனும் , நல்ல தொடர்புகளை வளர்த்துக்கொள்ள முடியாத நிலை , உளவியல் ரீதியான பிரச்சனைகள் , சட்ட ரீதியான பிரச்சனைகள் என ஜாதகரை ஒரு வழி செய்துவிடும் இந்த பூர்வ புண்ணியம் பாதிக்கப்பட்டால் .
இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட ஜாதகர் செய்ய வேண்டியது தனது பூர்வீகத்தை விட்டு எல்லை தாண்டி சென்றுவிடுவது ஜாதகத்தில் இருக்கும் இந்த பாதிப்புக்களை 70 சதவிகிதம் குறைத்துவிடும் , மேலும் ஜாதகர் தனது குல தெய்வ வழிபாட்டினை தவறாமல் செய்தால் ஜாதகரின் வாழ்க்கையில் 100 சதவிகிதம் நன்மையான பலன்களை அனுபவிக்க முடியும் .
ஒரு வேலை ஜாதகருக்கு இந்த பூர்வ புண்ணியம் நன்றாக இருந்து ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சென்றுவிட்டால் , ஜாதகத்தில் உள்ள அனைத்து யோக பலன்களும் பாழ்பட்டுவிடும் மேலும் எந்தவிதமான நன்மையான பலன்களையும் ஜாதகர் அனுபவிக்க இயலாது .
பூர்விகம் பாதிக்க பட்டவர்கள் மட்டுமே பூர்விகம் எதுவோ அந்த ஊரை விட்டு 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சென்று ஜீவனம் செய்வது நலம் தரும் .
குறிப்பாக பூர்வபுண்ணியம் பாதிப்படைந்து இருந்தால் அந்த பாவகத்தை எளிதில் வலு பெற செய்துவிட முடியும் என்பது அனுபவரீதியாக கண்ட உண்மை .
இந்த அமைப்பால் பாதிக்க பட்டவர்கள் எங்களை தொடர்புகொண்டு நன்மை அடையுங்கள் .
ஜோதிடன் வர்ஷன்
9842421435
9443355696
sir my dob 24.12.69,place tiruvannamalai (n.arcot)time 6.30 am, when my kadan theerum,panam eppo varum,pl
பதிலளிநீக்கு