திங்கள், 29 அக்டோபர், 2012

ஏழரை,அஷ்டம,அர்த்தாஷ்டமச் சனி மற்றும் ராகுகேது பெயர்ச்சி,குரு பெயர்ச்சி சுய ஜாதகத்தில் தரும் பலாபலன்கள் !




அண்ணா,
     
ஜோதீட தீபத்தின் கருத்துக்கு எதிர்க் கருத்தை முன்மொழிபவனில்லை. நிச்சயம் உண்மையான கருத்துக்கள் தான்.ஒரு ஜாதகத்தில் கிரகப்பெயர்ச்சிகளைப் பலன் சொல்வதற்கு எந்தளவுக்குப் பயன்படுத்துவது ?. ஏழரை,அஷ்டம,அர்த்தாஷ்டமச் சனி மற்றும் ராகு,கேதுப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சியைவைத்துப் பல ஜோதிடர்கள் பலன் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். இது எந்தளவுக்கு சுய ஜாதகத்தைக் கட்டுப்படுத்துகிறது. நான் கருதுவது கிரகப்பெயர்ச்சி என்பது மனரீதியான பாதிப்புகளைத்தான் உண்டாக்குகிறது என நினைக்கிறேன். மேற்சொன்ன கருத்துக்கள் பற்றிய தாங்களின் நிலைப்பாடு என்ன?.

அன்பு தம்பி தங்களின் கருத்திற்கு  நன்றி !

 தாங்கள் கிரக பெயர்ச்சி பலன்கள் என்று சொல்வது சந்திரன் இருக்கும் இடத்தை அடிப்படையாக வைத்து ( அதாவது ராசியை ) சொல்லப்படும் கோட்சார பலன்களை பற்றியதாக இருக்கும் என்று நம்புகிறேன் , பொதுவாக பல ஜோதிடர்கள் ஒருவருடைய ஜாதக அமைப்பில் பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது , சந்திர ராசிக்கு சனி , குரு , ராகு கேது கிரகங்கள் , கோட்சார ரீதியாக சம்பந்தம் பெரும் அமைப்பை வைத்து பலன் காணுகின்றனர் , இதில் சனி பகவான் சந்திரன் இருக்கும்  ராசிக்கு கோச்சார ரீதியாக 12 ல் வரும் பொழுது விரைய சனி என்றும், சந்திரன் இருக்கும் ராசியில் சஞ்சாரம் செய்யும் பொழுது ஜென்ம சனி என்றும் ,சந்திரன் இருக்கும் ராசிக்கு 2 ல் வரும் பொழுது குடும்ப சனி என்றும் பலன் காணுகின்றனர் , மேலும் மேற்கண்ட அமைப்பில் சந்திரன் இருக்கும் ராசியிலும் , முன் பின் ராசியிலும் சனிபகவான் சஞ்சாரம் செய்யும் ஒவ்வொரு இரண்டரை ஆண்டு காலத்தை ஏழரை சனியாக கொண்டு பலன் காணுகின்றனர்.

 மேலும் இந்த ஏழரை காலகட்டமும் ஜாதகருக்கு அதிக இன்னல்களை தரும் என்றும் , இந்த காலகட்டங்களில் ஜாதகர் எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பது நலம் என்றும் , எச்சரிக்கை செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்று யாரும் ஆய்வு செய்வதில்லை , மேலும் ஏழரை சனி என்றாலே ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை தரும் , விபத்தை தரும் , இழப்பை தரும் என்றும் , எழரை சனி காலத்தில் ஜாதகர் திருமணம் செய்வது அதிக இன்னல்களையும் , பிரிவை தரும் என்று சொல்பவர்களும் உண்டு , இதை போன்றே அஷ்டம,அர்த்தாஷ்டமச் சனி மற்றும் ராகு,கேதுப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சியை அடிப்படையாக வைத்துப் பல ஜோதிடர்கள் பலன் சொல்வதும் உண்டு , இதில் எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி நாம் இந்த பதிவில் நாம் காண்போம் .

மேற்கண்ட அமைப்பில் பலன் காணும் முறையெல்லாம் ஒருவருடைய ஜாதகத்தில்,சரியான பலன் காண சிறிதும் உதவாது என்பதே ஜோதிட தீபத்தின் கருத்து .


மேலும் கோட்சார கிரகங்கள் மன ரீதியான பாதிப்பை மற்றுமே தரும் என்பதும் தவறான அணுகு முறை என்பதும் ஜோதிட தீபத்தின் கருத்து , காரணம் கோட்சார கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சாரம் செய்யும் பொழுதும் , சம்பந்த பட்ட ராசி என்ன தத்துவமோ , அதற்க்கு தகுந்தார் போல் நன்மை தீமை பலன்களை வழங்கும் என்பதே உண்மை , எடுத்துகாட்டாக சர ராசியுடன் சம்பந்தம் பெரும் பொழுது , விரைவான பலன்களையும் , ஸ்திர ராசியுடன் சம்பந்தம் பெரும் பொழுது நிலையான தொடர் பலன்களையும் , உபய ராசியுடன் சம்பந்தம் பெரும்பொழுது சிறு சிறு நன்மை தீமை பலன்களையும் தரும் .

 மேலும் நெருப்பு ராசியில் ஜாதகரின் செயல்பாடுகளையும் , நில ராசியில் ஜாதகரின் உடல் , சொத்து சுக அமைப்பிலும் , காற்று ராசியில் ஜாதகரின் அறிவாற்றல் சம்பந்தபட்ட அமைப்பிலும் , நீர் ராசியில் ஜாதகரின் மன நிலையை கொண்டும் நன்மை தீமை பலன்களை தரும் , மேற்கண்ட ராசி நிலைகளை தொடர்பு படுத்தி பலன் காணுவது , கோட்சார பலன்களை சரியாக சொல்ல உதவும் என்பதே உண்மை , தாங்கள் சொல்வது போல் மன ரீதியான பாதிப்பை மட்டுமே செய்யும் எனில் கோட்சார கிரகங்கள் நீர் ராசியுடன் சம்பந்தம் பெற்று நன்மை தீமை பலனை செய்தால் மட்டுமே மன ரீதியான பாதிப்பை தரும் என்று ஏற்றுகொள்ள இயலும் .


கோட்சார கிரகங்கள் தரும் பலனை சரியாக நிர்ணயம் செய்ய, ஜாதக ரீதியாக கடை பிடிக்க வேண்டிய விதிகளை இனி பார்ப்போம் :

1 ) நடக்கும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை நடத்துகிறது .
2 ) அந்த பாவகம் சுய ஜாதகத்தில் எப்படி பட்ட நிலையில் இருக்கிறது , அதாவது நல்ல நிலையில் இருக்கிறதா ? பாதிக்கபட்டு இருக்கிறதா ?
3 ) அந்த பாவகத்துடன் தற்பொழுது நவகிரகங்கள் கோட்சார ரீதியாக சம்பந்தம் பெறுகிறதா ?
4 ) அப்படி சம்பந்தம் பெறும் கோட்சார கிரகங்கள் சம்பந்த பட்ட பாவகத்திற்க்கு நன்மை தருகிறதா? தீமையை தருகிறதா ?

மேற்கண்ட விதிகளை கடைப்பிடித்து , துல்லியமான ஜோதிட கணிதம் கொண்டு நவ கிரகங்களை நிலையை தெளிவாக தெரிந்து கொண்டு ஜாதக பலன்களை நிர்ணயம் செய்து சொல்லும் பொழுது , நிச்சயம் ஜாதக பலன்கள் துல்லியமாக வரும் என்பதில் சந்தேகம் இல்லை . மேற்கண்ட அமைப்பு மட்டுமே ஜாதக பலன்களை சரியாக சொல்ல உதவும் தம்பி .


இதை விடுத்து சந்திர ராசியை வைத்து பலன் காணுவது என்பது நிச்சயம் சரியான பலன் சொல்ல முடியாது என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து . 



எடுத்துகாட்டாக :

மேற்கண்ட சிம்ம லக்கின , துலாம் ராசி ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் குரு திசை , 1 ,3 ,5 ,9 ,11 ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலன்களை மட்டுமே செய்து கொண்டு இருக்கிறது , மற்ற ஜோதிடர்கள் துலாம் ராசியை வைத்து எழரை சனி நடக்கிறது என்று சொல்லி , சனிபகவானால் நடக்கும் அத்தனை தீமையும் தங்களுக்கு வரும் என்று எச்சரிக்கை செய்வார்கள் .

 ஆனால் உண்மையில் இந்த சிம்ம லக்கின ஜாதகருக்கு நடக்கும் குரு திசை மூன்றாம் பாவக  பலனை நடத்தினால் மட்டுமே , ஜாதகருக்கு தற்பொழுது கோட்சார கிரகமாக இருக்கும் சனிபகவானால் நன்மை தீமை பலன்கள் நடை பெரும் , ஆனால் குருதிசை 11 ம் பாவக பலனை செய்வதால் , இந்த 11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் கோட்சார கிரகங்கள் நன்மை செய்கிறதா ? தீமையை செய்கிறதா ? என்று பார்த்தால் மட்டுமே போதும்.

இங்கே  ராசிக்கு கோட்சார ரீதியாக வரும் ஏழரைசனி எவ்வித பலனையும் தராது ,  எட்டில் இருக்கும் குருவும் எவ்வித பலனையும் தராது , 4 மற்றும் 10 ல் இருக்கும் ராகு கேது கிரகமும் எவ்வித பலனையும் தராது , ஏனெனில் இந்த சிம்ம லக்கின , துலாம் ராசிக்கு நடக்கும் குரு திசை  11 ம் பாவக பலனை மட்டுமே நடத்துகிறது, என்பதால் மேற்கண்ட கிரகங்கள் 11 ம் பாவகத்துடன் எவ்வித சம்பந்தம் பெறாத காரணத்தினால் , சனி , குரு , ராகு கேது கிரக நிலையை பற்றி நாம் எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை , மேலும் தற்பொழுது நடக்கும் குரு திசை 11 ம் பாவக பலனை நடத்துவதால் குரு திசை அதிக நன்மையான பலன்களை வாரி வழங்கும் என்பதே உண்மை .

ஆக சந்திரன் நிற்கும் இடத்தை ( அதாவது ராசியை வைத்து ) பலன் காணுவது என்பது , குத்து மதிப்பாக சொல்லும் ஜாதக பலனாகவே இருக்கும் என்பதும் , இதை நம்பி செய்யும் காரியங்கள் ஜாதகருக்கு அதிக பாதிப்பை தரும் என்பதே உண்மை , இதை வைத்து தனது வாழ்க்கை பாதையை ஜாதகர் சரியாக அமைத்து கொள்வது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதை ஆகிவிடும் என்பதே உண்மை .


சரியான ஜோதிடரை கண்டு , சரியான ஜோதிட ஆலோசனை பெற்று வாழ்க்கையில் நலம் பெறுங்கள் அன்பர்களே .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969
jothidadeepam@gmail.com  

2 கருத்துகள்:

  1. குருவிற்கு....

    எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறக் கூடாது என்று தாங்கள் அடிக்கடி வலியுறுத்தி வருகிறீர்கள். மேலும் ராகு கேது கிரகங்கள் எந்த ஒரு வீட்டில் இருக்கின்றார்களோ அந்த வீட்டின் பலன்களை முழுமையாக செயல்படுத்துவார்கள் என்று தாங்கள் சொல்லியுள்ளீர்கள்.

    எனது சந்தேகம் என்னவெனில்....ராகு கேது கிரகங்கள் மிகுந்த நன்மை அளிக்கும் அமைப்பில் ஒரு வீட்டில் அமர்ந்து இருக்கும் போது அந்த வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் அந்த வீட்டின் பலனை எவ்வாறு கண்டறிவது? பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றதால் தீமை அளிக்கும் என்பதா? அல்லது ராகு கேது கிரகங்கள் மிகுந்த நன்மை அளிக்கும் அமைப்பில் இருப்பதால் நன்மை என்று கொள்வதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பருக்கு வணக்கம் , ஒரு பாவகதில் ராகு கேது அமரும் பொழுது ராகு கேது அமர்ந்ததிர்க்கு உண்டான பலனே நடை முறைக்கு வரும் , இங்கே அந்த பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவதை பற்றி நாம் எவ்வித கவலையும் பட தேவையில்லை , ராகு கேது மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்கள் எங்கு அமருகிரார்களோ அந்த பாவக பலனை ஏற்றுக்கொண்டு , நன்மையோ தீமையோ நிச்சயம் செய்வார்கள் .

      நீக்கு