சனி, 6 அக்டோபர், 2012

நட்சத்திர பொருத்தத்தில் ரச்சு பொருத்தம் இல்லை எனில் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?




அய்யா வணக்கம்  எனது பெற்றோர்கள்  எனக்கும் , எனது முறை பெண்ணிற்கும் ( மாமன் மகள் ) திருமணம் செய்யலாம் என முடிவு எடுத்து பொருத்தம் பார்த்தனர் , இதில் நட்சத்திர பொருத்ததில் ரச்சு பொருத்தம் ( கயிற்று பொருத்தம் ) இல்லை எனவும் திருமணம் செய்தால் , கணவனை இழக்க வேண்டி வரும் எனவும் ,நாங்கள் பார்த்த அனைத்து ஜோதிடர்களும் சொல்லுகின்றனர் , மேலும் பெண்ணிற்கு சர்ப்ப தோஷம் இருக்கிறது , பையனுக்கு சர்ப்ப தோஷம் இல்லை எனவும் இது திருமண வாழ்க்கையில் பிரிவை ஏற்ப்படுத்தும் என்று சொல்வதாலும் , எனது பெற்றோரும், மாமாவும் மிகவும் கவலை அடைந்துள்ளனர் , எங்களது இருவரது ஜாதகத்தையும் அனுப்பி வைத்துள்ளோம் தாங்கள் ஜாதகத்தில் உள்ள சரியான பலனை சொல்லவும் , உண்மையில் எனது மாமன் மகளும் நானும் மனதார விரும்புகிறோம் , நல்ல பதிலை தருவீர்கள் என்று நம்புகிறோம் .

அன்பு தம்பிக்கு ,

தங்களது இருவரது ஜாதக அமைப்பை வைத்து பார்க்கும் பொழுது , நட்சத்திர பொருத்ததில் மட்டுமே குறை உள்ளது ( அதாவது ரச்சு பொருத்தம் இல்லை ) இதை தாங்களும் தங்களது குடும்பத்தாரும் பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை , இதனால் தங்கள் உயிருக்கு எவ்வித பாதிப்பும் நிச்சயம் வராது , காரணம் தங்களது ஜாதகம் மிகவும் வலிமையாக காணப்படுகிறது , குறிப்பாக ஆயுள் பாவகம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கிறது , மேலும் திருமண செய்ய பொருத்தம் பார்க்கும் பொழுது நட்சத்திர பொருத்தத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு திருமணம் செய்வது தவறான அணுகு முறை , மேலும் சர்ப்ப தோஷம் , நாக தோஷம் , செவ்வாய் தோஷம் என்று சொல்வதெல்லாம் ஜோதிடத்தை பற்றி சரியான  புரிதல் இல்லாதவர்களும் ஜோதிடத்தில் அடிப்படை அறிவு அற்றவர்களும் , கற்று குட்டிகளும் , அரை குறை ஜோதிடர்களும் சொல்லும் வாய் ஜாலமே அன்றி வேறில்லை , இதையெல்லாம் மக்கள் நம்பிக்கொண்டு தனது அருமை மகள் மகனின்  வாழ்க்கை பாதிக்க பெற்றோர்களே காரணமாக அமைந்து விடுகின்றனர் , எனவே இதில் இந்த பதிவை காணும் பெற்றோர்களாவது இனி விழிப்புணர்வுடன் இருப்பார்கள் என்று நம்புவோம் .

திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஆண் பெண் இருவரின் ஜாதக அமைப்பிலும் நல்ல நிலையில் இருக்க வேண்டிய பாவகங்கள் மொத்தம் நான்கு அவையாவன :

1 ) குடும்ப ஸ்தானம் 2 ) பூர்வ புண்ணியம்  3 ) களத்திர ஸ்தானம் 4 ) ஆயுள் பாவகம் 

மேற்கண்ட பாவகங்கள் நல்ல நிலையில் இருவருக்கும் இருந்தால் நிச்சயம் அவர்களின் திருமண வாழ்க்கையில் எவ்வித சிக்கலையும் தராது திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்து விடும் , இதில் குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது ஜாதகரின் வருமானம் ,பேச்சு, மனைவியுடன் சந்தோஷமாக வாழும் தன்மையை நிர்ணயம் செய்யும் , பூர்வ புண்ணியம்  ஜாதகருக்கு கிடைக்கும் வாரிசு அமைப்பையும் , இறை அருளின் கருணையினால் வாழ்க்கையில் ஏற்ப்படும் முன்னேற்றத்தையும் வழங்கும் , களத்திர பாவகம் தம்பதியரின் ஒற்றுமையும் , களத்திர வாழ்க்கையில் பெரும் சந்தோஷத்தையும் , சமுதாயத்தில் கிடைக்கும் மதிப்பு மரியாதையையும் குறிக்கும் , ஆயுள் பாவகம் வாழ்க்கையை துணையின் வழியில் இருந்து பெரும் நன்மைகளையும் , நீண்ட ஆயுளையும் , ஒருவொருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்லும் மனப்பான்மையையும் நிர்ணயம் செய்யும் .

எனவே மேற்கண்ட பாவகங்கள் நல்ல நிலையில் இருந்தால் நட்சத்திர பொருத்தம் எதுவும் தேவையில்லை , தாரளமாக திருமணம் செய்யலாம் எவ்வித பாதிப்பும் நிச்சயம் வர வாய்ப்பில்லை , ஒருவேளை நட்சத்திர பொருத்தம் 10 க்கு 10 இருந்தாலும் , மேற்கண்ட பாவகங்கள் 6 ,8,12 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று இருந்தாலும் , பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருந்தால் மட்டுமே  திருமண வாழ்க்கை மூன்று மாதங்கள் கூட நிலைக்காது இதற்க்கு பல எடுத்துகாட்டுக்கள் நம்மிடம் உண்டு  .

ஆனால் தங்களது ஜாதக நிலையிலும் , தங்களது மாமன் மகள் அவர்களின் ஜாதக நிலையிலும் மேற்கண்ட வீடுகள் மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றது , உண்மையில் தங்களது மாமன் மகளின் ஜாதக நிலையில் குடும்ப ஸ்தானத்தையும் , ஆயுள் ஸ்தானத்தையும் வலிமையுடன் வைத்திருக்க காரனகர்த்தவே இந்த ராகுவும் கேதுவும்தான் . அப்படி இருக்கையில் தங்களது மாமன் மகளின் ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் என்று எந்த ஜோதிடர் சொன்னார் என்று எங்களுக்கு தெரியவில்லை, ராகு கேது என்றாலே கெடுதல்தான் செய்யும் என்பதின் வெளிப்பாடாகவே கருத வேண்டி இருக்கிறது , மேலும் பூர்வ புண்ணிய ஸ்தானம் தங்களது இருவரது ஜாதக அமைப்பிலும் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் , திருமணம் ஆனா சில மாதங்களிலேயே நல்ல யோகமான ஆண் வாரிசு கிடைக்கும் . 

தாங்கள் தங்களின் மாமன் மகளை திருமணம் செய்துகொள்வதால் தங்களுக்கு எவ்வித துன்பமும் வர வாய்ப்பில்லை என்பது உறுதி , மேலும் வாழ்க்கையில் சகல முன்னேற்றமே ஏற்ப்படும் , தொழில் , குடும்பம் , வாரிசு , தம்பதியர் ஒற்றுமை , மகிழ்வான இல்லற வாழ்க்கை என அனைத்துமே சிறப்பாக இருக்கும் , இதில் இந்த ரச்சு பொருத்தம் வந்து எந்த வித தொந்தரவும் தராது என்பது எமது தெளிவான பதில் , எனவே விரைவில் நல்ல முகூர்த்தம் பார்த்து திருமணம் செய்துகொண்டு நலமாக வாழ ஜோதிட தீபம் தங்களை வாழ்த்துகிறது இறை அருளின் கருணையினால் 16  வகை  செல்வமும் பெற்று புகழோடு வாழ்க வளமுடன் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com
  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக