சனி, 20 அக்டோபர், 2012

புத்திர தோஷம் எனும் குழந்தை பாக்கியம் அற்ற நிலையை எப்படி நிர்ணயம் செய்வது ?



ஐயா வணக்கம்,

கேள்வி :

1.ஒரு ஜாதகரின் குழந்தைகளை நிர்ணயிப்பதற்கு ஒருவர் ஜாதகம் மட்டுமே போதுமா?அல்லது கணவன்,மனைவி இருவர் ஜாதகமும் சேர்த்து பார்த்தால்தான் முடிவுசெய்யமுடியுமா?


பதில் : 

நிச்சயமாக தம்பதியர் இருவரின் ஜாதகமும் தேவை , இவருடைய ஜாதக அமைப்பை வைத்து மட்டுமே குழந்தை பாக்கியம் என்ற பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் தன்மையை நிர்ணயம்  செய்ய முடியும் , அதன் அடிப்படையிலேயே குழந்தை பாக்கியம் உண்டா ? இல்லையா என்று தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் . ஒருவரின் ஜாதக அமைப்பை மட்டும் வைத்து குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்வது என்பது ஒரு  கை ஓசைக்கு சமமானது அன்பரே ! மேலும் தம்பதியரின் சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்க பட்டு இருந்தாலும் , ஒருவருக்கு வலிமையுடன் இருந்தால் நிச்சயம் பெண் குழந்தைக்கு கிடைப்பதற்கு  உண்டான வாய்ப்பு நிச்சயம் உண்டு . இதிலிருந்து ஒருவருக்காவது  புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் . இருவருக்கும் புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து ஆண் குழந்தை இல்லத்திற்கு காரணம் தம்பதியர் தங்களுக்கு உகந்த திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருக்காமல் , பாதகத்தை தரும் வாயிர்ப்படி கொண்ட வீடுகளில் குடியிருப்பது மட்டுமே காரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு ஆண்குழந்தைகளே பிறக்கின்றன.

பதில் : 
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் சர ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் சர ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் ஆண் குழந்தைகளாக பிறக்கும் . மேற்கண்ட அமைப்பில் இருந்து அதாவது  ஜாதகர் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருந்து, தனது பூர்விகத்தை விட்டு வெளியே சென்று குடியிருந்தால் , ஜாதகருக்கு பெண் குழந்தைகளாகவே பிறக்க கூடும் , தனது பூர்வீகத்திற்கு திரும்ப வந்தவுடன் ஆண் வாரிசு நிச்சயம் அமையும் , இதையெல்லாம்  சுய ஜாதகம் கொண்டே பலன் நிர்ணயம் செய்ய முடியும் .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு பெண் குழந்தைகளே பிறக்கின்றன.

பதில் :
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் உபய ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் உபய  ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் பெண்  குழந்தைகளாக பிறக்கும் .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு இரண்டுமே பிறக்கின்றன.

பதில் : 
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் ஸ்திர  ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் ஸ்திர  ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , ஆண் பெண் என்று இரண்டு விதமான குழந்தைகளையும் பெரும் யோகம் உண்டாகும் .

கேள்வி :
சில தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன.

பதில் :
இது மேற்கண்ட அமைப்பில் புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து , கருத்தரித்த நேரமும் , இடமும் இரட்டை குழந்தைகளுக்கு உண்டான அமைப்பை நிர்ணயம் செய்யும் .

கேள்வி :
சிலபேருக்கு குழந்தைகளே இல்லை.

பதில் :
இதற்க்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும் ,  தம்பதியரின் ஜாதக அமைப்பில் இவருடைய பூர்வ புண்ணியம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் , பூர்வ புண்ணியம் எனும் பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகனுக்கு இப்பிறவியில் தத்து புத்திர யோகம் மட்டுமே உண்டு அதுவும் ஜாதகர் செய்யும் குல தேவதை வழிபாட்டை பொறுத்து அமையும் .

கேள்வி :
இதை ஒரு ஜாதகரின் அல்லது தம்பதியின் ஜாதகங்களை வைக்து சரியாக அதாவது மிகச்சரியாக தெரிந்துகொள்ளமுடியுமா?உங்கள் அனுபவத்தை வைத்து பதிலை ஜோதிடதீபத்தில் அளிக்கவும்.

பதில் :
நிச்சயம் தம்பதியர் இருவரின்  ஜாதகத்தை வைத்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் , ஒருவரின் ஜாதக அமைப்பை வைத்து நிர்ணயம் செய்வது என்பது மிகவும் கடினம். மேலும் இதை எல்லாம்  அனுபவத்தை வைத்து சொல்ல இயலாது ஜோதிட கணிதத்தை வைத்து சரியாக சொல்லிவிட முடியும் அன்பரே ! ஜோதிடத்தில் கணிதம் மட்டுமே உண்டு அனுபவம் என்பது ஏது ?


கேள்வி :
கிராமவாசிகள் ஜோதிடரிடம் இந்த ஜாதகருக்கு எத்தன வாரிசு பிறக்கும்?அதுல ஆண் எத்தன பெண் எத்தன?மூத்தது ஆணா?பெண்ணா? இப்படியெல்லாம் கேட்கிறார்களே. இதற்கெல்லாம் உண்மையிலேயே மிகச்சரியான பதிலை ஜோதிடத்தின் மூலம் கூறமுடியுமா? முடியும் எனில் உங்கள் அனுபவத்தில் பார்த்த ஒரு உதாரண ஜாதகம் மூலம் விளக்கமுடியுமா?

பதில் :
கிராம வாசிகள் என்ன ? நகர வாசிகள் என்ன ? எல்லோருக்கும் ஒன்றேதான் , பாரம்பரிய ஜோதிட முறையில் பல ஜோதிடர்கள் பச்சிலை என்ற ( அதாவது மனோ தத்துவம் அல்லது மனோ ரீதியான அணுகு முறை பிறந்த ஜாதகத்தில் சில எழுத்துகள் மூலம் உடன் பிறப்பு பற்றி சொல்லும் தன்மை  ) ஒரு முறையை கடை பிடிக்கிறார்கள் , இதை வைத்து கொண்டுதான் பல அரை குறை ஜோதிடர்களின் பிழைப்பே ஓடுகிறது , நமது அமைப்பில் ஆருடம் மூலம் பிறப்பது ஆண் குழந்தைய அல்லது பெண் குழந்தையா என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , மேலும் இதை பற்றி நான் அதிகம் சொல்ல விரும்ப வில்லை .

கேள்வி :
புத்திர தோஷம் என ஜோதிடம் ஆண் வாரிசை மட்டுமே குறிக்கிறது.புத்திரி தோஷம் என் பெண் பாலை குறிக்கவில்லை.எனவே ஒருவருக்கு ஏற்ப்படும் பெண் வாரிசை பற்றி அவர் ஜாதகம் மூலம் அறியமுடியாதா?முடியும் எனில் எப்படி?

பதில்:
புத்திர தோஷம் என்பதே பொதுவான ஒரு வார்த்தைதான் , இதில் ஆண் பெண் வேறுபாடுகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை , மேலும் புத்திரன் தோஷம் என்று இருந்திருந்தால் மட்டுமே உங்களின் கேள்வி சரியானதாக இருந்திருக்கும் என்பது எமது கருத்து , மேலும் ஜாதகருக்கு பெண் குழந்தை உண்டா என்பதை நிர்ணயம் செய்ய நிச்சயம் முடியும் , எப்படி எனில் இதற்க்கு தாங்கள் ஜோதிடத்தை நல்ல குரு மூலம் தெளிவாக  இருந்து கற்றுகொள்ள வேண்டும் .

கேள்வி :
புத்திர தோஷம் என்றால் என்ன? குழந்தைகளே இல்லாத நிலையா? ஆண் குழந்தைகளே இல்லாத நிலையா?

பதில் :
குழந்தைகளே இல்லாத நிலையையே புத்திர தோஷம் என்று சொல்ல இயலும் ,

கேள்வி :
ஆண்,பெண் குழந்தைகள் பிறந்தும் அந்த குழந்தை சில வருடங்கலில் அதாவது திருமணம்,வேலை போன்றவற்றிற்கு முன்பே அந்த வாரிசு அகால மரணம் அடைவது அல்லது மரணத்திற்கு ஒப்பான நிலை,அல்லது பெற்றோருக்கு உபயொகமில்லாமல் போவது. அந்த வாரிசால் பெற்றோர் அவமானம் அடைதல் புத்திர தோஷம் இதில் எது அடங்கும்? இதற்கான விரிவான பதிலை ஜோதிட தீபத்தில் எதிர்பார்க்கிறேன்

நன்றிகளுடன்,
ஜோதிட பித்தன்.

பதில் :
ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் , எதிரி ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, ஆறாம் பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகனுக்கு பிறக்கும் குழந்தையால் ஜாதகன் அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் .

ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் , ஆயுள் ஸ்தானம் மற்றும் திடீர் இழப்பு  எனும் எட்டாம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று எட்டாம்  பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகன் தனது குழந்தையை இழக்கும் தன்மையையோ அல்லது நிரந்தரமாக பிரியும் தன்மையையோ பெற கூடும் .

ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ,விரைய ஸ்தானம் எனும் 12 ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று எட்டாம்  பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகன் தனது குழந்தையின் அமைப்பில் இருந்து அதிக வீண் விரயங்களையும் , மன நிம்மதி இழப்பினையும்  சந்திக்க வேண்டி வரும் .

மேற்கண்ட பலன்கள் எல்லாம் சுய ஜாதக அமைப்பை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும் , புத்திர ஸ்தானம் எனும் ஒருபாவகத்தை வைத்து மட்டுமே நிர்ணயம் செய்து விட முடியாது .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக