வியாழன், 25 அக்டோபர், 2012

ஜோதிட ஆலோசனை : அதிர்ஷ்டம் மற்றும் யோக ஜாதக அமைப்பு



ஜாதக பொது பலன் 


லக்கினம் : மீனம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : பரணி 1 ம் பாதம் 

ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

லக்கினம் மற்றும் இரண்டாம் வீடுகள் , குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகர் அளவற்ற தனலாபத்தை பெற்று தரும் , நிலையான தொழில் அமைப்பையும் , அரசு துறையில் ஆதரவினையும் , அளவற்ற வருமானத்தையும் , தொழில் முறையில் எதிர்பாராத முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் , ஜாதகரின் இனிமையான பேச்சும் செயல்பாடுகளும் மக்களை கவரும் வண்ணத்தில் இருக்கும் , கை நிறைய வருமானத்தை தரும் தொழில்கள் யாவும் ஜாதகருக்கு கைவர பெறும் யோகம் உண்டாகும் , அபரிவிதமான பேச்சு ஆற்றலும் , அமைதியான குடும்ப வாழ்க்கையும் ஜாதகருக்கு நிச்சயம் அமையும் .

4 ம் வீடு சுக ஸ்தானம் எனும் நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நிறைய சொத்து , சொகுசு வண்டி வாகனம் , அனைத்து வசதியும் கொண்ட சொந்த வீடு , சொந்த ஊரில்  இருக்க விருப்பம் , கல்வி நிறுவனங்கள் , தொழில் நிறுவனங்கள் நடத்தும் யோகம் , வண்டி வாகன தொழில்களில் சிறப்பான முனேற்றம் , நிலம்  வீடு வாங்கி விற்பதால் அதிக லாபம் , தனது சுய உழைப்பால் சகல சொத்து சுகத்தினையும் பெரும் யோகம் , என ஜாதகரை பல வகையில் முன்னேற்றத்திற்கு எடுத்து செல்லும் இந்த நான்காம் பாவகம் , இதற்க்கு காரணம் ஜாதகரின் தாய் என்பதில் சந்தேகம் இல்லை காலம் முழுவது தனது தாயிக்கு ஜாதகர் கட்டுபட்டு இருப்பது அவசியம் , மேலும் அவர்கள் மனம் நோகாமல் நடந்து கொள்வது அவசியம் , தங்களது தாயாரின் பாக்கியத்தால் நிறைய செல்வ வளங்களை தாங்கள் நிச்சயம் பெறுவீர்கள் அன்பரே ! வாழ்த்துகள் .

குறிப்பு : எக்காரணத்தை கொண்டும் தாங்கள் வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருப்பது அவசியம் , ஏனெனில் அப்படி குடியிருந்தால் மட்டுமே தாங்கள் ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை முழுவதும் பெற முடியும் .

5 பாவகம் லக்கினத்துடன் சம்பந்தம் பெறுவது , தங்களது பூர்வீகத்தில் குடியிருப்பதால் சகல யோகமும் பெரும் அமைப்பை பெறுவீர்கள் , தங்களது ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருப்பது 100 சதவிகித நன்மைகளை வாரி வழங்கும் , குல தேவதையின் அருளாற்றல் தங்களுக்கு எப்பொழுதும் நிறைந்து நிற்கும் , எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பாட்டாலும்  அவற்றில் இருந்து தங்களுக்கு நன்மையே நடக்கும் , நல்ல ஆரோக்கியமும் , குழந்தை மற்றும் வாரிசு அமைப்பில் நல்ல பலனும் , கலை ஆர்வமும் , தோட்டம் சொத்து வண்டி வாகனம் மூலம் யோகமும் , கடவுள் வழிபாட்டில் ஆர்வமும் , இறைநிலையின் கருணையை பெறும் யோகமும் உண்டாகும், ஆக தாங்கள் பூர்வ புண்ணிய அமைப்பில் இருந்து யோக பலன்களையே அனுபவிக்கும் தன்மை உண்டாகும் .

8 ,11 ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , மிகுந்த அதிர்ஷ்ட அமைப்பை பெற்று தரும் , மேலும் தங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி என்பது இதன் மூலம் உறுதியாகிறது , இதில் எட்டாம் வீடு லாபத்துடன் சம்பந்தம் பெறுவது திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்க்கையில் வெற்றியை நிச்சயம் தரும் , பூமியில் மனிதன் வாழ்வதற்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெற்று தரும் யோகம் உண்டாகும் , வாழ்நாள் முழுவதும் ஜாதகர் அதிர்ஷ்டத்தின் அமைப்புகளை நிலையாக அனுபவித்து கொண்டே இருக்கும் யோகம் உண்டு , ஜாதகரின் நல்ல குணம் ஜாதகரை எப்பொழுதும் நல்ல நிலைக்கே எடுத்து செல்லும் , தன்னம்பிக்கை அதிகமாகும் , ஜாதக அமைப்பிலேயே மிகவும் யோக அமைப்பாக இதை கருதலாம் எனவே வாழ்க்கையில் சகல யோகத்தையும் நிச்சயம் வாரி வழங்கும் .

10 ம் வீடு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , இயல் இசை நாடகம் , திரைப்பட துறையில் சகல யோகமும் , தொழில் முறையில் அதிக வருமானத்தையும், விளையாட்டு துறையில் அபரிவிதமான முன்னேற்றத்தையும் , வியாபாரம் சுய தொழில் செய்வதால் அளவில்லா முன்னேற்றத்தை வாரி வழங்கும் , குறிப்பாக ஜாதகர் முயற்ச்சி செய்தால் அதிர்ஷ்டத்தின் மூலம் திரை துறையில் அளவில்லா முன்னேற்றத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் :

3 ,6 ,9 ,12 ம் வீடுகள் விரைய ஸ்தானம் எனும் 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் சில நேரங்களில் தோல்வியை தர கூடும் , மன கவலைகளால் உடல் நிலை சிறிது பாதிக்க கூடும் , கவனமாக இல்லாவிட்டால் தங்களுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட கூடும் , அதிக மன உளைச்சல்களையும் , அதிகமான மன போராட்டத்தையும் தர கூடும் , இது தன்னம்பிக்கையை அதிகம் குறைக்கும் , சில நேரங்களில் முன்னேறத்தை தடுக்க கூடும் , அதிக முதலீடுகளை மற்றவர்களை நம்பி செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் இல்லையெனில் அதிக இன்னல்களை சந்திக்க கூடும் , எனவே மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து தாங்கள் அதிக சிரமங்களை அனுபவிக்க வேண்டி வருவதால் நாங்கள் பரிந்துரை செய்யும் பரிகாரங்களை தாங்களே செய்து நன்மை பெருக .

7 ம் வீடு பாதக ஸ்தானம் எனும் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , தங்களது ஜாதக அமைப்பிலேயே அதிக கெடுதலை செய்யும்,  மேற்க்கண்ட பாவக அமைப்பில் இருந்து தங்களுக்கு எதிர்பாராத இன்னல்கள் வர கூடும் , குறிப்பாக வாழ்க்கை துணை , நண்பர்கள் , பொது மக்கள் போன்ற அமைப்புகளில் 200 சதவிகிதம் கெடுதலை செய்ய கூடும் , தான்கள் திருமணம் செய்து கொள்ளும் முன் பெண்ணின் ஜாதகத்தில் களத்திர பாவகம் மற்றும் குடும்ப ஸ்தானம் என்ற பாவகங்கள் நல்ல நிலையில் இருக்கும் சாதகமாக தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வது திருமண வாழ்க்கையில் அதிக இன்னல்களை தராமல் , தங்களுக்கு நன்மையை தரும் , ஒரு வேலை தங்களது வாழ்க்கை துணையின் வழியில் சில சிரமங்கள் ஏற்படின் அதை மனம் உவந்து ஏற்றுக்கொண்டு , தங்களது வாழ்க்கை துணைக்கு நன்மை மட்டுமே செய்து வாருங்கள் , காரணம் தங்களது ஜாதக அமைப்பிலேயே களத்திர ஸ்தானம் அதிகம் பாதிக்க பட்டு இருக்கிறது .

நடக்கும் திசை தரும் பலன்கள் :( சந்திரன் திசை 14 /10 /2011 முதல் 14 /10 /2021 வரை )

5 பாவகம் லக்கினத்துடன் சம்பந்தம் பெற்று சந்திரன் திசை லக்கினத்தின் பலனை செய்கிறது , லக்கினம் என்பது உபய ராசியாக இருப்பதால் 40 சதவிகிதம் மட்டுமே நன்மையான பலன்களை ஐந்தாம் பாவக அமைப்பில் இருந்தும் , இலக்கின அமைப்பில் இருந்தும் வழங்கும் , இந்த கால அமைப்பில் உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது அதிக நன்மையை தரும் .
 
தற்பொழுது நடக்கும் சந்திரன் திசை செவ்வாய் புத்தி 4 ம் வீடு சுக ஸ்தானம் எனும் நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சொத்து சுகம் , வண்டி வாகனம் , உயர் கல்வி போன்ற விஷயங்களில் நன்மைகளை வாரி வழங்கும்.

அடுத்து வரும் ராகு புத்தி  7 ம் வீடு பாதக ஸ்தானம் எனும் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கெடுதலும் , 5 பாவகம் லக்கினத்துடன் சம்பந்தம் பெறுவது அதிக நன்மைகளையும் , கலந்து தரும் , திருமணம் சம்பந்தபட்ட விஷயங்களை இந்த ராகு புத்தியில் தவிர்ப்பது அவசியம் .

மேலும் விரிவான ஜாதக பலன்களை அலைபேசி அல்லது தொலை பேசி மூலம் தெரிந்து கொள்ளுங்கள் அன்பரே !



பரிகாரம் :

1  ) தினமும் சூரிய நமஸ்காரம் காலை 5 மணிக்கே எழுந்து செய்து வரவும் .
2 ) திருவக்கரை சென்று குரு பகவானுக்கு வக்கரக நிவர்த்தி செய்வது சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும் .
3 ) திருப்பதி வருடம் ஒரு முறை வளர் பிறை திங்கள் அன்று சென்று ஸ்ரீ வாரி தீர்த்தத்தில் நீராடி பெருமாளை தரிசித்து வருவது அதிக நன்மைகளை தரும் .
4 ) களத்திர ஸ்தானம் சம்பந்த பட்ட விஷயங்களில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க தனி மின்னஞ்சல் மூலம், செய்ய வேண்டி பரிகாரத்தை அனுப்பி வைக்கிறோம் .
5 ) இரத்தின பரிந்துரையினையும் தனி மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கிறோம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696
jothidadeepam@gmail.com  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக