திங்கள், 15 அக்டோபர், 2012

அஷ்டவர்க்க பரல்கள் ஜாதக பலனை நிர்ணயம் செய்யுமா ?



குருவிற்கு
மிக அருமையான விளக்கம். மேலும் சில வினாக்கள். கேள்விகளில் தவறு இருப்பின் மன்னிக்கவும் ஐயா.

பாதக ஸ்தானத்தில் அஷ்டவர்க்க படி அதிக பரல்கள் இருந்தால் மிக அதிக தீமை என்று எடுத்து கொள்ளலாமா?
 
பாவகங்களின் வலிமையை அஷ்டவர்க்கம் வைத்து முடிவு செய்யலாமா?


பதில் :

இரண்டுமே தவறான ஜோதிட கணித முறை அன்பரே ! காரணம் இந்த அஷ்ட வர்க்கத்தை வைத்து பலன் சொல்லுவது என்பது நிச்சயம் சரியான பலனை சொல்ல இயலாது என்பதே எனது கருத்து , மேலும் இதை பற்றி தெளிவாக ஆராய்சி செய்து பார்த்தாகி விட்டது , பலன்கள் சரியாக வரவில்லை .

ஒரு உபய இலக்கின ஜாதகருக்கு லாப ஸ்தானத்தின் பலன் நடக்கின்ற பொழுது லாப ஸ்தானத்தில் குறைவான பரல்கலையே பெற்றிருந்தும் மிகுந்த யோக அமைப்பையே தந்து இருக்கிறது , பாதக ஸ்தான பலனை நடத்தும் பொழுது பாதக ஸ்தானத்தில் குறைவான பரல்களை பெற்றிருந்தும் , ஜாதகர் கடுமையான தீய பலன்களையே அனுபவிக்க வேண்டி இருந்தது , எனவே அஷ்ட வர்க்க பரல்களை வைத்து பலன் நிர்ணயம் செய்வது என்பது நிச்சயம் ஜாதக பலன்களை சொல்ல இயலாது  என்பதே  எமது கருத்து .

போலி ஜோதிடர்கள் சொல்வது போல் வீடு கொடுத்தவன் , வீடு வாங்கியவன் , வீடு விற்றவன் என்று கதை அளப்பவர்களுக்கு  மட்டுமே இந்த அஷ்ட வர்க்க அமைப்பு  பயன் படும் நமது தெளிவான சரியான ஜோதிட பலன்களுக்கு இந்த அஷ்ட  வர்க்க கணிதம் நிச்சயம் உதவவில்லை என்பதே உண்மை .

ஒரு பாவகத்தின் வலிமையை , அந்த பாவகம் தொடர்பு பெறும் வீட்டின் நிலையில்  இருந்து மட்டுமே தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , லக்கினம்  ஒருவருக்கு பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெரும் பொழுது லக்கினத்தில் எத்தனை பரல்கள் இருந்தாலும் ஜாதகரை காப்பாற்ற இயலாது , பாதக ஸ்தானத்தில்  எத்தனை பரல்கள் இருந்தாலும் காப்பாற்ற இயலாது , காரணம் தொடர்பு  பெறுவது பாதக ஸ்தானதுடன் எனவே லக்கினத்திற்கு எவ்வித தடையும்  இன்றி 200 மடங்கு தீமையான பலனை மட்டுமே சரியாக செய்யும் .

இதுவே மாறி லக்கினம்  லாப ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று லக்கினம் உபய ராசியாக இருந்தால் லக்கனத்தில் குறைவான பரல்கள் இருந்தாலும் , லாப ஸ்தானத்தில் குறைவான பரல்கள் இருந்தாலும் ஜாதகரின் அதிர்ஷ்ட வாழ்க்கையை  யாராலும் தடுக்க இயலாது , 100 மடங்கு நன்மையான பலனை ஜாதகருக்கு  குறிப்பிட்ட காலகட்டத்தில் வாரி வழங்கி விடும் ,இதில் எவ்வித சந்தேகமும்  இல்லை அன்பரே ! எனவே  இந்த அஷ்ட வர்க்க பரல்களை கொண்டு  எம்மால் நிச்சயம் சரியான ஜாதக பலனை நிர்ணயம் செய்ய முடியாது , மேலும் ஒரு பாவக பலனை நிர்ணயம் செய்ய அந்த பாவகம் எந்த வீட்டுடன்  தொடர்பு பெறுகிறது என்பதை வைத்தே சரியாக  துல்லியமாக நிர்ணயம்  செய்ய இயலும் .

நீங்கள் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் உண்டான ஒரே பதில் அஷ்ட வர்க்க பரல்களை  வைத்து ஜாதக பலனை நிச்சயம் சரியாக சொல்ல முடியாது என்பதே  உண்மை .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக