திங்கள், 29 அக்டோபர், 2012

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதை போன்று, சுய ஜாதகத்தில் யோகம் இருந்தும் அனுபவிக்க முடியாத ஜாதக நிலை !






மேற்கண்ட ஜாதகத்தில் லக்கினம் , சுகம் , களத்திரம் , ஜீவனம் எனும் நான்கு வீடுகளும் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகத்தில் ஒரு சிறப்பான யோக நிலை , மேலும் இந்த நான்கு வீடுகளும் ஜீவன ஸ்தானமான சர மகர ராசியுடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த யோக பலனை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை , குறிப்பாக லக்கினம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரின் உடல் மனம் இரண்டு அமைப்பிலும் நன்மைகளை வாரி வழங்கும், நீண்ட ஆயுள் , நல்ல வளரும் சூழ்நிலை , நேர்மையான குணம் , பெரியோர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்படும் தன்மை , சுய கட்டுபாடு , ஒழுக்கம் போன்ற விஷயங்களில் சிறப்பான பலன்களை வழங்கும் .

சுக ஸ்தானம் எனும் நான்காம் பாவகம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது , ஜாதகருக்கு தாயின் வழியில் ஆதரவும் , தனது அம்மாவிற்கு நன்மைகளையும் , தாய் பாசமுடன் வளரும் தன்மையும் , நல்ல வண்டி வாகன யோகமும் , வசதி மிக்க வீடு , சிறப்பான கல்வி , உயர் கல்வி , பட்டபடிப்பு , கல்விகாலங்களில் சிறந்து விளங்கும் தன்மை , தனது சுய உழைப்பால் வண்டி வாகனம் , சொத்து சுகம் , போன்றவைகளை வாங்கும் யோகம் என நான்காம் பாவக அமைப்பில் இறுதி நன்மைகளை வாரி வழங்கும் .

களத்திர ஸ்தானம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகருக்கு நல்ல நண்பர்கள் சேர்க்கையும் , சமுதாயத்தில் சிறப்பான நற்பெயரும் , பொது மக்கள் செல்வாக்கும் , பெண் நண்பர்கள் மூலம் அளவில்லா நன்மைகளும் , வெளிநாடுகளில் இருந்து அளவில்லா செல்வ வளமும் , வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றமும்  உண்டாகும் . மேலும் ஜாதகரின் கூட்டாளிகள் மூலம் சிறப்பான எதிர்காலம் கிடைக்கும் , வாழ்க்கை துணை வழியில் இருந்து சகல யோகமும் நிச்சயம் உண்டாகும் , தன்னம்பிக்கை அதிகரிக்கும் , விரைவான சுறுசுறுப்பான செயல் திறன் கொண்டவராக இருப்பார் .

பத்தாம் வீடு ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது , செய்யும் தொழில்களில் எல்லாம் வெற்றிமேல் வெற்றி உண்டாகும் , தனது தகப்பனாருக்கு சொத்து சுக சேர்க்கையும் , ஜீவன மேன்மையும் வாரி வழங்கும் , குறிப்பாக ஜாதகர் செய்யும் தொழில்கள் எல்லாம் 100 சதவிகிதம் வெற்றி பெரும் மருத்துவம் சார்ந்த தொழில்களில் கொடி கட்டி பறக்கும் அளவிற்கு முன்னேற்றம் உண்டாகும் , நல்ல கைராசி , மக்கள் செல்வாக்கு , கூட்டு தொழில் செய்வதால் முன்னேற்றம் மற்றும் அளவில்லா வருமானம் , சுயமாக சிந்தனை செய்து வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம் என ஜீவன வழியில் வெற்றியை தரும் .

மேற்கண்ட  நன்மையான பலன்கள் எல்லாம் ஜாதகருக்கு சூரியன் மற்றும் செவ்வாய் திசையில்,சூரியன் மற்றும் செவ்வாய் புத்திசூரியன் மற்றும் செவ்வாய் அந்தரம்,சூரியன் மற்றும் செவ்வாய் சூட்சமம் போன்ற அமைப்பில் மட்டுமே நடை பெறுகிறது , தற்பொழுது நடக்கும் சூரியன் திசை மேற்கண்ட வீடுகளின் பலனை நடத்துவது நன்மையை தரும் , அடுத்து வரும் சந்திரன் திசை பாதக ஸ்தான பலனை செய்கிறது , அதற்க்கு அடுத்து வரும் செவ்வாய் திசை மேற்கண்ட வீடுகளின் பலனை நடத்துவது நன்மையை தரும் , ஆனால் இதற்க்கு பிறகு வரும் அனைத்து திசைகளும் முறையே ராகு திசை விரைய ஸ்தான பலனையும் , குரு திசை பாதக ஸ்தான பலனையும் ,சனி திசை எட்டாம் வீட்டு பலனை செய்வதும் ஜாதகருக்கு 200 சதவிகிதம் மிகுந்த பாதிப்பையே வாரி வழங்கும் , நன்மையான பலன்கள் இந்த திசைகளில் நடப்பது என்பது மிகவும் குறைவே .

எனவே மேற்கண்ட ஜாதக அமைப்பில் சூரியன் திசையும் , செவ்வாய் திசையும் சிறு வயதிலேயே ஜாதகத்தில் நடைமுறைக்கு வந்துவிடுவதால் , ஜாதகர் அதிக நன்மைகளை பெற  முடியாது , ஏனெனில் அது ஜாதகரின் குழந்தை பருவம் மற்றும் கல்வி காலம் என்பதால் , உடல் நிலை , வளரும் சூழ்நிலை ,கல்வியில் மட்டுமே யோக நிலை நன்மையை செய்யும் , தொழில் , திருமணம் , வாழ்க்கையில் முன்னேற்றம் போன்றவைகள் நடை பெரும் காலமான 23 வயது முதல் 60 வயது வரை நடக்கும் திசையாவும் தீமையான பலனையே வாரி வழங்குவதால் , ஜாதகத்தில் வலிமை பெரும் பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் எவ்வித நன்மையையும் பெற முடியாது என்பதால் , ஜாதகத்தில் யோக அமைப்பு இருந்தும் , பலன் அனுபவிக்க முடியாத படி ஜாதகருக்கு தடைகளை தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

ஆக ஜாதகத்தில் யோகம் இருப்பது பெரிய விஷயமல்ல , அந்த யோக பலன்கள்  நடைமுறையில் திசை, புத்தி, அந்தரம், மற்றும்  சூட்சமத்தில் நடந்து பலன் தர வேண்டும் , அப்பொழுதுதான் ஜாதகர்  யோக வாழ்க்கையை பெற முடியும் , இல்லை எனில் ஜாதகர் நிலை இலவுகாத்த கிளி கதைக்கு ஒப்பாக இருக்கும் , யோக வாழ்க்கையை நினைத்து வெறும் கனவு மட்டுமே காண  முடியும் நடை முறையில் , சிரமத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டி வரும் , இதனால் யோக நிலைகள் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொண்ட  சில அரை குறை  ஜோதிடர்கள் உங்களது ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கிறது , இந்த யோகம் இருக்கிறது என்று உசுப்பேத்தி உசுபேத்தி உங்களை ரணகளமாக்க கூடும் , தங்களது ஜாதக அமைப்பின் படி உள்ள உண்மை நிலையை தெளிவாக தெரிந்து கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுங்கள் , வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக