சனி, 1 ஆகஸ்ட், 2015

ராகு சுய ஜாதகத்தில் அமர்ந்த பாவகத்தின் வலிமையும், தனது திசையில் வழங்கும் பலன்களும் !




  சுய ஜாதகத்தை இயக்குவதில் மிக முக்கிய பங்காற்றுவது லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில், இந்த நிலையில் பாவகங்களின் வலிமையை, நவ கிரகங்கள் தான் அமர்ந்த நிலையில் இருந்தும், பார்வை தரும் நிலையில் இருந்தும் நிர்ணயம் செய்கின்றது, நவகிரகங்கள் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம நிலைகளில் சுய ஜாதகத்தில் வலிமை அல்லது வலிமை அற்ற பாவகங்களின் தன்மையை ஏற்று நடத்தும் பொழுது, தான் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப, யோக அவயோக பலன்களை நடைமுறைக்கு கொண்டு வருகிறது.

உதாரணமாக ஒருவரது சுய ஜாதாக்தில் சனி திசை நடைபெறுகிறது என்று வைத்துகொண்டால், அவரது ஜாதகத்தில் சனி எங்கு அமர்ந்து உள்ளார், அந்த வீடுகளை பார்வை செய்கிறார், அமர்ந்த இடத்தில் என்ன பலனை பெறுகிறார் ( ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் அல்லது லக்கினத்திற்கு எந்த வீடுகளில் அமர்ந்துள்ளார், எந்த கிரகத்துடன் சேர்ந்துள்ளார் ? ) என்பதை அடிப்படையாக கொண்டு தனது திசையில் பலனை வழங்குவார் என்று கணிதம் செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறையாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஏனெனில் எந்த ஒரு கிரகமும் தான் அமர்ந்த அல்லது பார்த்த பாவகத்தின் பலனையே தனது திசையில் தரும் என்று கணிதம் செய்வது சரியானது அல்ல, சுய ஜாதகத்தில் நவ கிரகங்கள் எந்த பாவகத்தில் அமர்ந்து இருந்தாலும் சரி, தனது திசையில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்ற கணிதம் தெரியாத பொழுது, சுய ஜாதக பலனை நிர்ணயம் செய்வதில் மிக பெரிய பிழை ஏற்ப்பட்டு விடும், ஜோதிடர் தாம் சொல்லும் பலன்களுக்கும், ஜாதகருக்கு நடைமுறையில் நடைபெறும் பலன்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விடும் வாய்ப்பு உண்டு இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் பெறுவோம் அன்பர்களே !



லக்கினம் : சிம்மம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம் 

மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகருக்கு ராகு பகவான் சிம்மராசியில் உள்ள  12ம் பாவகத்தில் அமர்ந்து 100% விகித வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு அருங்கலைகளில் ஆர்வமும், யோக,தியானம் மற்றும் தவம் மூலம் ஆன்மீக வெற்றிகளையும், அதிக அளவில் முதலீடு செய்வதால் வரும் பெரிய வருமானங்களும், மருத்துவத்தில் தேர்ச்சியும், மருந்துகள் மூலம் அபரிவிதமான முன்னேற்றமும், ரகசிய செயல்களில் வெற்றியும், மறைமுக விஷயங்களில்  தெளிவும் தேர்ச்சியும், புலன் இன்பங்களில் இருந்து விடுபடும் யோகமும், வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வாக்குகள், தனிபட்ட முன்னேற்றங்கள், இல்லற வாழ்க்கையில் திருப்தியும், போதும் என்ற மனமும், ஆன்மீகத்தில் புதிய தேடுதல் விளக்கங்களும், ஆன்மீக அன்பர்களின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் பிறப்பின் பலன்களை முழுமையாக பெரும் யோகமும், மன நிம்மதியான வாழ்க்கை மற்றும் சிறப்பான உறக்கமும், குழப்பம் அற்ற மன நிலையையும், தெளிவான சிந்தனைகள் மூலம் வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ளும் தன்மையையும் தரும்.

இந்த ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் மேற்கண்ட நன்மைகளையும், சுய கட்டுபாடு, போதும் என்ற மனம், நிறைவான மன நிலை, உடல் நிலையில் குறைவில்லா ஆரக்கியம், எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் அனைத்தையும் ஏற்றுகொள்ளும் யோகமும், வாழ்க்கை துணை வழியில் இருந்து ஒருமித்த கருத்துகளுடன் இணைபிரியா தாம்பத்திய வாழ்க்கையும், எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான தேடுதல் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டமிடுதல்களும், ஜாதகருக்கு இயற்கையாக அமைந்திருக்கும், குறிப்பாக ஜாதகரின் மன நிலை, மன உறுதி, மன மகிழ்ச்சி எனும் விஷயங்களை எவராலும் உடைக்க இயலாது, ஜாதகரை விழ்த்த நினைக்கும் அன்பர்களுக்கு, மிகப்பெரிய விழ்ச்சியை உருவாக்கும் வல்லமை கொண்டவர், தனது பிறவி பயனை பரிபூர்ணமாக அனுபவித்து முக்தியை பெரும் யோகத்தை ராகு பகவான் ஸ்திரமாக நெருப்பு தத்துவ அமைப்பில் இருந்து தருவார், ஆக ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மிகவும் வலிமையாக உள்ளது தெளிவாகிறது, சுய ஜாதகத்தில் ராகு 12ம் பாவகத்தில் ( சிம்ம ராசியில் ) அமர்ந்து வலிமை பெற்றது 12ம் பாவக வழியில் மிகுந்த யோக பலனை தரும்.  


ஜாதகருக்கு ராகு திசை பால்ய வயதில் இருந்து பருவ வயது வரை உள்ள காலகட்டங்களில் நடைபெற்றுள்ளது ( 12/12/1980 முதல் 13/12/1998 வரை ) ராகு தனது திசையில் தான் அமர்ந்த பாவக பலனை ஏற்று நடத்தாமல் 1,3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவக பலனை ஏற்று நடத்தியது ஜாதகரின் பருவ வயது வாழ்க்கையை மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாக்கியது, 1ம் பாவக  வழியில் இருந்து ஜாதகரின் அறிவும் உடல் நலமும் வெகுவாக பாதித்தது, பாதிப்பிற்கு ஜாதகரின் நடவடிக்கைகள் காரணமாக அமைந்தது, 3ம் பாவக வழியில் இருந்து சகோதர வழியில் இருந்து இன்னல்களும், முயற்ச்சிகளில் தோல்வியும், கல்விகாலங்களில் பல இடர்பாடுகளையும்  சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, ஆரம்ப கல்வி பயிலுவதர்க்கே ஜாதகர் கடும் பிரயத்தனம் செய்யவேண்டி வந்தது, 5ம் பாவக வழியில் இருந்து கல்வியிலும் சுய அறிவு திறன் மற்றும் புத்திசாலிதனத்திலும் பெரிய அளவில் சோபிக்க இயலாமல், தனது பூர்வீகத்தை விட்டு பரதேச ஜீவனத்தை மேற்கொள்ள வைத்தது, 9ம் பாவக வழியில் இருந்து தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு அனைவரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தந்து, ஜாதகரின் முன்னேற்றத்திற்கு தடையாக நிறைய எதிர்பாளர்கள் அமைந்தார்கள், பொது காரியங்களில் அவமானமும் அவபெயருமே கிடைத்தது, ஜாதகரின் அறிவு திறன் வெகுவாக குறைந்தது, இதனால் ஜாதகர் நடுநிலை கல்வி தோல்வியுடன் முடிவுக்கு வந்தது, வீண் அலைச்சலும், முரண்பட்ட சிந்தனைகளும் ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது.

இந்த ஜாதகத்தில் ராகு பகவான் 12ம் பாவகத்தில் அமர்ந்து 12ம் பாவகத்தை 100% விகித வலிமை பெற செய்த போதிலும், தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியதால் ராகு திசை முழுவதும் ஜாதகர் எண்ணிலடங்க துன்பங்களையும்  துயரங்களையும் 1,3,5,9ம் பாவக வழியில் இருந்து அனுபவிக்கும் தன்மையை தந்தது.

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் தான் அமர்ந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் என்று கற்பனை செய்துகொள்வது முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு முரண்பட்ட விஷயமாகவே அமையும், எந்த ஒரு கிரகமும் தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது  என்ற ரகசியத்தை, உயர்கணித சார ஜோதிட முறைப்படி கண்டுணர்ந்து தெளிவு பெறுவது அவசியமாகிறது, இதன் அடிப்படையில் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் தான் ஏற்று நடத்தும் பாவக பலன்களை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட ஜாதகருக்கு பலன் காண்பதுவே சம்பந்த பட்ட ஜாதகரின் வாழ்க்கைக்கு சரியான பாதையை வகுத்து தரும், மாறாக நவகிரகம் அமர்ந்த பாவகத்தின் பலனையும், பார்த்த பாவகத்தின் பலனையும் நடத்தும் என்று கணிப்பது முற்றிலும் கற்பனையாகவே அமைந்துவிட வாய்ப்பு உண்டு, சில ஜாதகங்களில் ஆட்சி,உச்சம் பெற்ற கிரகத்தின் திசை எவ்வித யோக பலன்களையும் தராததிற்க்கும், பகை நீச்சம் பெற்ற கிரகத்தின் திசை ராஜ யோக பலன்களை வாரி வழங்குதிற்க்கும், உண்மையான காரணம் மேற்கண்ட உதாரண அமைப்பே, ஆக சுய ஜாதகத்தில் கிரகங்கள் பெற்ற வலிமையை கருத்தில் கொள்ளாமல், பாவகங்களின் வலிமை, நவகிரகங்கள் தனது  திசையில் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையை  உணர்ந்து, சுய ஜாதக பலன் காணுவதே சிறந்த ஜோதிடரின் அணுகுமுறை, மற்றவை அனைத்து ஜோதிடரின் கற்பனையாகவே அமைந்துவிடக்கூடும், நமது கிராமங்களில் சொல்லும் செலவேந்திரம் ஆனா " குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக " மாறிவிடும் என்பதே, முற்றிலும் உண்மை அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக