வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

திருமண வாழ்க்கை வெற்றியும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் !




 திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையே அன்றி வேறு எதுவும் இல்லை, பொதுவாக திருமண பொருத்தம் காணும் பொழுது பெரும்பாலான அன்பர்கள், நட்சத்திர பொருத்தம், ஜாதக கிரக நிலை, ஏக திசை சந்திப்பு, சர்ப்ப,களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நடைமுறையில் உள்ள திசை தரும் பலன்கள், ஜாதகத்தில் உள்ள தோஷ நிலைகள் என பல விஷங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றார்களே அன்றி, பொருத்தம் காணும் ஜாதகங்களின் பாவக வலிமை நிலையை பற்றி சிந்திப்பதே இல்லை, நட்சத்திர பொருத்தம், ஜாதக பொருத்தம், ஏக திசை பொருத்தம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தருவதை விட சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு திருமண பொருத்தம் காணும் பொழுது தம்பதியரின் திருமண வாழ்க்கை மிகவும் வெற்றிகாரமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே!

திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும் முக்கிய விஷயங்கள் :

1) தம்பதியர் சுய ஜாதகங்களில் லக்கினம் எனும் முதல் பாவகமும், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும் மிகவும் வலிமையுடன் இருப்பது தம்பதியரின் இல்லற வாழ்க்கையை மேம்படுத்த உதவும், லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் ஆயுளையும், ஜாதகரின் உடல் மற்றும் நலம் மன நலம் என்ற விஷயங்களில் மிகுதியான நன்மையான பலன்களை வாரி வழங்கும், தம்பதியரின் குண நலன்களை லக்கினமே குறிப்பிடுவதால், லக்கினம் வலிமை பெரும் பொழுது தம்பதியரின் குண நலன்கள் மேம்பட்டு இருக்கும், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளும் தன்மையை தரும், இதுவே தாம்பத்திய வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.

குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் பேச்சு, வருமானம் மற்றும் குடும்ப வாழ்க்கையின் தன்மையை தெளிவு படுத்தும், 2ம் பாவகம் வலிமை பெரும் பொழுது தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் புரிந்துகொண்ட நடந்து கொள்ளவும், இனிமையான பேச்சின் மூலம் குடும்ப வாழ்க்கையை செம்மையாக நடத்துவதற்கு வாய்ப்பை வாரி வழங்கும், 2ம் பாவகம் வலிமை இழக்கும் பொழுது, தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குடும்ப வாழ்க்கையை தமது பேச்சின் மூலமே கெடுத்து கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும், குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் வலிமை பெரும் பொழுது குடும்பம் நடத்த ஜீவ ஆதாரமான வருமானம் மிகுந்த அளவில் வந்து கொண்டே இருக்கும், பெரும்பாலான குடும்ப பிரச்சனைகளுக்கு காரணமாக அமைவது, தம்பதியரின் பேச்சும், அவர்களின் பொருளாதார நிலையுமே என்பதை கவனத்தில் கொள்வது நலம், தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் இந்த இரண்டாம் பாவகம் மிகவும் வலிமையுடன் அமையும் பொழுது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவேது.

2)  தம்பதியரின் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவாகம் மிகவும் வலிமையுடன் அமைவது நல்லது, பொதுவாக 5ம் பாவகத்தை குழந்தை பாக்கியத்தை தரும் அமைப்பாக அனைவரும் கருதுவார்கள், 5ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியருக்கு தனது குலம் தழைக்க நல்ல வாரிசை மட்டும் அமைத்து தருவதில்லை, தம்பதியரின் புத்திசாலிதனத்தையும், சமயோசித அறிவு திறனையும் வெகுவாக தமது வாழ்க்கையில் பயன்படுத்தும் சூழ்நிலையை தரும், எந்த ஒரு சிரமமான சூழ்நிலையையும் சிறப்பாக கையாண்டு வாழ்கையில் வெற்றி பெரும், சில ரகசியமான வித்தைகளை தம்பதியருக்கு வழங்கும், மேலும் குல தெய்வத்தின் பரிபூரண நல்லாசிகளுக்கு ஆளாகும் தன்மையை தருவதால், எந்த நேரத்திலும், எங்கு சென்றாலும் தம்பதியருக்கு உதவி செய்ய பலர் காத்துகொண்டு இருப்பார்கள் என்பது கவனிக்க தக்கது, தம்பதியருக்கு பிறக்கும் குழந்தை ஆண்வாரிசாக அமைவதும், அந்த குழந்தையின் வழியில் இருந்து யோக வாழ்க்கை தம்பதியர் பெறுவதற்கும் அடிப்படையாக அமைவது பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவக வலிமை நிலையே காரணமாக அமையும்.

3) தம்பதியரின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் வலிமையுடன் அமைவது அவசியம், தாம்பத்திய வாழ்க்கையில் தம்பதியர் இருவரின் மனம் மட்டும் உடல் இயக்கம், எண்ணங்களின் தன்மை என சகல விஷயங்களையும் இயக்குவதில் களத்திர பாவகமே முக்கிய பங்கு வகிக்கிறது, கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்துகொள்ளும் தன்மையை தருவது களத்திர பாவக வலிமையே, மனதில் உள்ள எண்ணங்களின் தன்மையை பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் சொல்லாமலே புரிந்துகொள்வதும், பரஸ்பர அன்பு  காட்டுதலுக்கும் அடிப்படையாக அமைவது களத்திர பாவக வலிமையே, எந்த ஒரு சூழ்நிலையிலும் பிரிவு நிலையை தாராமல், தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வதற்கும், ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து இனிமையான களத்திர வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கும் களத்திர பாவக வலிமையே அடிப்படையாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

4)  தம்பதியரின் சுய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகம் வலிமையுடன் இருப்பது தம்பதியரின் ஆயுள் வலிமையை குறித்த போதிலும், ஒருவரின் வழியில் இருந்து ஒருவர் பெரும் வருமான வாய்ப்பையும் குறிக்கும், ஆயுள் பாவகம் மிகவும் வலிமையுடன் அமையும் பொழுது தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர பொருளாதார தன்னிறைவை பெரும் வருமானங்களை பெறுவார்கள் என்பதை உறுதிபடுத்தும், மேலும் கணவனுக்கு மனைவியாலும், மனைவிக்கு கணவனாலும் வருமான வாய்ப்புகள் வந்து குவியும், தமது வாழ்க்கை துணையை ஜாதகர் அல்லது ஜாதகி எப்படி நடத்துவார் என்ற  விஷயத்தையும் ஆயுள் பாவக வலிமையை வைத்து நிர்ணயம் செய்யலாம்.

மேலும் தம்பதியரின் சுய ஜாதகங்களில் அயன சயன ஸ்தானமான 12ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் அந்தர வாழ்க்கையின் மகிழ்ச்சியையும், பரஸ்பர தாம்பத்திய இன்பங்களையும் வாரி வழங்கும், மேலும் திடீர் பொருள் வரவையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் வாழ்க்கையில் சகல வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்கும் யோகத்தை தரும்.

5) தம்பதியரின் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி மற்றும் எதிர்வரும் திசை,புத்தி தம்பதியர் இருவருக்கும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்துவது திருமண வாழ்க்கையின் வெற்றியை 100% சதவிகிதம் நிர்ணயம் செய்யும், ( தம்பதியர் இருவருக்கும் ஏக திசை அதவாது ஒரே திசை நடைமுறையில் இருந்தாலும் சரி வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் திருமண வாழ்க்கையின் வெற்றி நிச்சயம் என்பதில் மாற்று கருத்து இல்லை) மேற்கண்ட 5ந்து விஷயங்களை கருத்தில் கொண்டு, திருமண வாழ்க்கையை  அமைத்து  தரும் பொழுது தம்பதியரின் வாழ்க்கை வாழையடி வாழையாக செழித்து ஓங்கும், சகல சௌபாக்கியமும் பெற்று வளமுடன் வாழும் வாய்ப்பை தரும், மேற்கண்ட 5ந்து விஷயங்கள் சிறப்பாக அமையும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகங்களுக்கு, நட்சத்திர பொருத்தம் தேவையில்லை, செவ்வாய் தோஷ நிர்ணயம் தேவையில்லை, சர்ப்ப தோஷ நிர்ணயம் தேவையில்லை, பொதுவாக பார்க்கும் தசவித பொருத்தங்களும் ( ரச்சு பொருத்தம் உற்பட ) எதுவும் தேவையில்லை அன்பர்களே, திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

மாறாக மேற்கண்ட பாவகங்கள்  6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெற்றோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ, இருப்பது திருமண வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களுக்கும், தோல்விக்கும் அடிகோலும், மேலும் நடைமுறையில் உள்ள திசை,புத்தி அல்லது எதிர்வரும் திசை,புத்தி  6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெற்ற அல்லது  பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் தம்பதியரின் இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாகவே அமையும் என்பதில் சந்தேகமே இல்லை, இதில் நட்சத்திர பொருத்தங்கள் பத்தும் ஒன்றும் செய்ய இயலாத, சம தோஷம், ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம் மற்றும் ஏக திசை பொறுத்தமும் ஒன்றும் செய்ய இயலாது. 


குறிப்பு :

 ஆக திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வது தம்பதியரின் சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையையும், நடைமுறையில் உள்ள திசை மற்றும் எதிர்வரும் திசையின் வலிமையுமே என்பதில் சந்தேகமே இல்லை அன்பர்களே, எனவே திருமண பொருத்தம் காணும் பொழுது  பாவக வலிமையை கருத்தில் கொண்டும் திசை புத்தி ஏற்றுநடத்தும் பாவக வலிமையை கொண்டு நிர்ணயம் செய்யும் பொழுது திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக