ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

திருமண தடைகளையும், திருமணத்திற்கு பிறகு இன்னல்களையும் அனுபவிக்கும் ஜாதக நிலை !


 திருமணம் ஒருவருக்கு சரியான வயதில், சிறப்பாக அமைவது என்பது அவரின் வாழ்க்கையில் வரும் முன்னேற்றங்களுக்கு சரியான அடித்தளத்தை அமைத்து தரும், ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் தங்கு தடையின்றி வாரி வழங்கும், ஆண்  என்றாலும் சரி பெண் என்றாலும் சரி, திருமண வயது வந்தவுடன் எந்த காரணத்தை கொண்டு திருமணத்தை தள்ளிபோடாமல், இல்லற வாழ்க்கையில் இணைந்து நன்மைகளையும் யோகங்களையும் அனுபவிப்பதே சிறந்த வாழ்க்கையை தரும்.

தன் ஜாதகம் சற்று பாவக வலிமை அற்று இருப்பினும், தனது வாழ்க்கை துணையின் ஜாதகம் சிறப்பாக அமைந்தால் இல்லற வாழ்க்கையில் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கும், இதற்க்கு தனது சுய ஜாதகத்தின் பாவக வலிமை நாம் உணர்ந்து இருப்பது நல்ல ஏனெனில், நமது ஜாதக நிலையை பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே, வாழ்க்கை துணையுடன் நமது இல்லற வாழ்க்கை எப்படி அமையும் என்ற விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள இயலும், மாறாக நமது ஜாதக வலிமையை உணராத பொழுது, விதியின் மீது காரணம் சொல்லிக்கொண்டு முரண்பட்ட இல்லற வாழ்க்கையை, போராட்டத்துடன் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப்பவே நமக்கு நடைபெறும் பலாபலன்கள் நடைமுறைக்கு வருகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து யோக பலன்களும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து அவயோக பலன்களும் நடைபெறுகிறது, இதை திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் நடைமுறைக்கு கொண்டுவருகிறது, ஒரு சில வினாடிகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்களுக்கு கூட ஒரே பலாபலன்கள் நடைமுறைக்கு வருவதில்லை, காரணம் பாவக வலிமை என்பது ஒரு வினாடியில் மாற்றம் பெறக்கூடும், சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவு பெரும் பொழுது தமது வாழ்க்கை பாதையை மிகவும் சிறப்பாக அமைத்துக்கொண்டு, வாழ்க்கையில் பல வெற்றிகளை மிக எளிதாக பெற இயலும் அன்பர்களே!

கிழ்கண்ட ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையை பற்றியும், நடைபெறும் திசை, எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றியும், தனது ஜாதக வலிமைக்கு ஏற்ப தனது வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக 
அமைத்துக்கொண்டு வெற்றி பெறுவது என்பதை பற்றியும் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

இயற்கையாக நமது சுய ஜாதகம் வலிமை பெரும் பொழுதும், நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசைகள் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் பொழுதும் சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து யோக பலன்களை நாம் தங்குதடையின்றி அனுபவிக்க இயலும், மாறாக சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை குறைந்து, நடைபெறும் அல்லது எதிர்வரும் திசைகள் வலிமை அற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால், எப்படிபட்ட தீர்வுகளை  விழிப்புணர்வுடன் நாம் கையாண்டு, நன்மைகளை பெறுவது என்பதை பற்றி இனி பார்ப்போம்.

கிழ்கண்ட ஜாதகிக்கு 

லக்கினம் : மேஷம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : ரோகிணி 4ம் பாதம் 


ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை 

1,4,5,7,9,11,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்,
2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்,
3ம், வீடு சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்,
6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்,

எனவே ஜாதகி 1,4,5,7,9,11,12ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், 2,6,8ம் பாவக வழியில் இருந்து 60% விகித இன்னல்களையும், 3ம் பாவக வழியில் இருந்து 30% விகித நன்மைகளையும், 10ம் பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளையும் அனுபவிக்கும் தன்மையை தரும்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை ஜீவன ஸ்தான பலனையும், பாதக ஸ்தான பலனையும் கலந்து நடைமுறை படுத்துகிறது, எனவே ஜாதகி ஜீவன வழியில் இருந்து யோக பலன்களையும், பாதக ஸ்தான வழியில் இருந்து அவயோக பலன்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், எதிர்வரும் குரு திசை ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை மட்டுமே நடைமுறைபடுத்துவது, மிகுந்த இன்னல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாக்கும் என்பதால், இனி வரும் காலங்களில் ஜாதகி அதிக விழிப்புணர்வுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான பாவகங்கள் (3,10 பாவகங்களை தவிர ) ஜாதகிக்கு மிகுந்த பாதிப்பை தருவதால் ஜாதகி பாதிக்க பட்ட பாவகங்களில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மன நிலைக்கு வந்துவிடுவது, ஜாதகியை பாதிக்கபட்ட பாவக வழி இன்னல்களை மிக எளிதாக கையாளும் வாய்ப்பை தரும், ( உதாரணமாக 7ம் பாவக வழியில் இருந்து இன்னல்கள் வரும் எனும் பொழுது ஜாதகி அடிப்படையில் தனது நண்பர்களை தேர்வு செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கலாம், கூட்டு முயற்ச்சியை தவிர்க்கலாம், வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது அவரது ஜாதகம் மிகவும் வலிமை உடையதாக தேர்வு செய்யலாம், பொது காரியங்களில் ஈடுபடாமல், தனது வேளையில் மட்டும் கவனம் செலுத்தலாம் ) தனது ஜாதகம் வலிமை அற்று இருப்பதை உணர்ந்தால் மட்டுமே மற்ற விஷயங்களில் ஜாதகி கவனமுடன் இருந்து நன்மைகளை பெற இயலும், தனது ஜாதக வலிமையை பற்றி தெரியாத பொழுது ஜாதகி பாவகங்களின் தன்மைக்கு ஏற்ப விதி பயனை அனுபவிக்கும் சூழ்நிலையை தந்துவிடும்.

ஜாதகிக்கு வயது 25, இதுவரை தனக்கு வந்த நல்ல வரன்கள் அனைத்தையும் ஏதாவது காரணங்களை சொல்லி தவிர்த்து வருகிறார், தனது ஜாதக வலிமையை பற்றி தெரியாமல், ஜாதகி விதி பயனை அனுபவித்துக்கொண்டு இருப்பது எதார்த்தமான உண்மை, மேற்கண்ட ஜாதக வலிமையை பற்றிய விஷயத்தை ஜாதகிக்கு எடுத்து கூறி, சரியான இல்லற வாழ்க்கையை அமையை " ஜோதிடதீபம் " அறிவுறுத்தியது, ஜாதகியின் பாவக வலிமைக்கு ஏற்றப்ப, மிகவும் வலிமையான பாவகங்களை பெற்ற, வரனின் ஜாதகத்தை தேர்வு செய்து ஜாதகிக்கு பரிந்துரை செய்தது, ஜாதகியும் ஜாதகியின் பெற்றோரும் இதை ஏற்றுக்கொண்டு சரியான இல்லற வாழ்க்கையை தமது மகளுக்கு அமைத்து தர இசைந்தது இறை அருளின் கருணையே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக