வெள்ளி, 18 மார்ச், 2016

எப்பொழுதும் நல்ல நேரமே! சுய ஜாதகம் வலிமை பெரும் பொழுது !


" ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் செல்போனில் பேட்டரி இருந்தாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் " 

என்ற திரைபட நகைசுவை விரும்பி பார்த்ததுண்டு, பொதுவாக எந்த ஒரு சுப நிகழ்ச்சி துவங்கும் முன் நல்ல நேரம் பார்ப்பது மக்களிடையே உள்ள இயற்க்கை நடைமுறை, இதில் அன்றைய நாளில் பஞ்ச அங்கங்களை கணிதம் செய்து முகூர்த்தமும், சுப நேரங்களையும் "ஜோதிடர்கள்" பரிந்துரை செய்கின்றனர், நல்லநேரம் நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்வது, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு யோக பலன்களையும் அதிர்ஷ்டங்களையும் அதிக அளவில் வாரி வழங்கும்.

பொதுவாக சுய ஜாதகங்களில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு எப்பொழுதும் எல்லா நேரங்களையும் நல்ல நேரமாக நன்மை தரும் விதத்தில் அமைந்து விடும், குறிப்பாக சுய ஜாதக பாவக வலிமை ஜாதகருக்கு எப்பொழுதும் நன்மை மற்றும் யோகங்களை வாரி வழங்கிய வண்ணம் இருக்கும், மேலும் லக்கினம் முதல் 12 பாவகமும் வலிமை பெற்ற, ஜாதக அமைப்பை பெற்றவர்கள், ராகு காலம், எமகண்டம், குளிகை, சூலம் போன்றவற்றை கருத்தில் கொள்ளாமல், எந்த நேரத்திலும் எந்த காரியத்திலும் துணிந்து இறங்கலாம், நிச்சயம் 100% விகித நன்மையும் வெற்றியும் உண்டாகும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்கள் பாதிக்க படும் பொழுதே ஜாதகர் தமக்கு உகந்த, தனது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் அடிப்படையில் நல்ல நேரத்தை தேர்ந்து எடுத்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

சில அன்பர்களின் ஜாதகங்களுக்கு பொதுவாக தீமையை தரும் என்று கருதும் ராகு காலம், எமகண்டம், குளிகை, சூலம் போன்றவை அபரிவிதமான யோக பலன்களை தருவதுண்டு, சுய ஜாதகத்தில் ராகு பகவான் வலிமை பெற்ற அன்பர்களுக்கு ராகு காலம் மிகுந்த யோகங்களை தருவதுண்டு, சுய ஜாதகத்தில் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக ராகு பகவான் அமர்ந்து லாப ஸ்தானம் வலிமை பெரும் பொழுது, சம்பந்தபட்ட ஜாதகருக்கு ராகு காலமே சகல யோகங்களையும் தரும், குறிப்பாக ஜாதகர் ராகு காலங்களில் எடுக்கும் முயற்ச்சிகள், புதிய காரியங்கள், புதிய தொழில்கள் யாவும் ஜாதகருக்கு வெற்றிமேல் வெற்றியையும், லாபங்களையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெரும் பொழுது, பாவ கிரகம் என்று அழைக்கப்படும்  ராகு,கேது,சனி, செவ்வாய்,சூரியன் திசாபுத்திகளும் ஜாதகருக்கு யோக பலன்களையே வாரி வழங்கும்.

 ஒருவருக்கு நல்ல நேரம் என்பது சம்பந்த பட்ட ஜாதகரின் பாவக  வலிமைக்கு ஏற்ப்பவே அமைகிறது என்பதை கருத்தில் கொள்வது நல்லது, சுய ஜாதகம் வலிமை பெரும் பொழுது எல்லா நேரமும் நல்ல நேரமே, சுய ஜாதகம் வலிமை இழக்கும் பொழுது நல்ல நேரமும் ஜாதகருக்கு எதிராக திரும்பு, ஜாதகரின் முயற்ச்சிகள், செயல்கள் அனைத்தும் தோல்வியில் முடியும், தமது சுய ஜாதக பாவக வலிமைக்கு ஏற்ற பொருத்தமான நல்ல நேரத்தை தேர்வு செய்து வெற்றி காண்பதே புத்திசாலித்தனம், எல்லா நேரமும் நல்ல நேரமாக அமையும் ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே!


லக்கினம் : மிதுனம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : பரணி 3ம் பாதம் 

 ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :

1,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது மேற்கண்ட வீடுகள் வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை வாரி வழங்கும்.

2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது மேற்கண்ட வீடுகள் வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை வாரி வழங்கும்.

3,6,711ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது மேற்கண்ட வீடுகள் வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை வாரி வழங்கும்.

9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட வீடுகள் வழியில் இருந்து 100% விகித அவயோக பலன்களை வாரி வழங்கும்.

மேற்கண்ட  ஜாதகருக்கு பெரும்பாலனா வீடுகள்  ( 9,12 தவிர ) வலிமை பெற்ற பூர்வ புண்ணியம்,ஜீவனம்,லாப ஸ்தானங்களுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த யோகங்களை தரும் அமைப்பாகும், மேலும் நடைபெறும் திசாபுத்திகள் அனைத்தும் ஜாதகருக்கு பூர்வபுண்ணியம்,ஜீவனம்,லாப ஸ்தானங்களுடன் சம்பந்தம் பெற்ற வீடுகளின் பலன்களையே ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு எந்நேரமும் நல்ல நேரமாக அமைவதை உறுதிபடுத்துகிறது, ஜாதகர் எந்த நேரத்திலும் எதை செய்தாலும் முழு வெற்றியினை பெறுவது கவனிக்க தக்க அம்சமாகும், இதற்க்கு காரணமாக அமைவது சுய ஜாதக பாவக வலிமையே, ஜாதகருக்கு 9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றாலும், நவ கிரகங்களின் திசா புத்திகள் ஜாதகருக்கு 12ம் பாவக பலனை ஏற்று நடத்தாதது ஜாதகருக்கு சாதகமான அம்சமாகும், 9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றாலும் 12ம் பாவகம் ஜாதகருக்கு செயலிழந்து நிற்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பு :

ராகு பகவான் ஜாதகருக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக பொறுப்பு ஏற்ப்பது, ஜாதகர் ராகு காலங்களிலும் அபரிவிதமான யோகங்களை பெறுவதை உறுதி செய்கிறது, ஜாதகர் ராகு காலங்களில் துவங்கும்  காரியங்களும், முயற்ச்சி மற்றும் தொழில்களும் வெற்றி மேல் வெற்றியை வாரி குவிக்கும் என்பது மறுக்க இயலாத உண்மை, இந்த ஜாதகருக்கு அதிர்ஷ்டங்களையும் யோகங்களையும் வாரி வழங்குவதே சாய  கிரகமான ராகு பகவான்தான் என்றால் அது மிகையில்லை.

" ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் செல்போனில் பேட்டரி இருந்தாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் "

என்ற நகைசுவை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ "சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும்" வலிமை பெற்ற ஒருவருக்கு  நிச்சயம் பொருந்தும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

2 கருத்துகள்:

  1. சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும வலிமை பெற்ற ஒருவன் சுயமாக ரீசார்ஜ் செய்ய வேண்டியதே வராது.இவரது நண்பர்கள் இவருக்கு ரீசார்ஜ் செய்து தருவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அய்யா, ஆனால் எமக்கு அந்த கொடுப்பினை இல்லை

      நீக்கு