திங்கள், 21 மார்ச், 2016

சுய ஜாதகத்தில் நன்மையையும்,யோகமும் தரும் பாவகங்கள் எவை? தீமையும் அவயோகமும் ஏற்ப்படுத்தும் பாவகங்கள் எவை?


கேள்வி :

எனது சுய ஜாதகத்தில் எந்த எந்த பாவக வழிகளில் இருந்து நன்மையையும்,யோகமும் உண்டாகும்? எந்த எந்த பாவக வழிகளில் இருந்து தீமையும் அவயோகமும் உண்டாகும்?

பதில் :

நல்ல கேள்வி, தங்களது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை நிலையை ஆய்வு செய்வோம்!



லக்கினம் : சிம்மம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : உத்திராடம் 3ம் பாதம் 

தங்களது சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவகங்கள் :

1,5,7,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 1ம் பாவக வழியில் இருந்து நல்ல அதிர்ஷ்டத்தையும், யோகங்களையும் வாரி வழங்கும், நல்ல ஆரோக்கியம், நல்ல மனநிலை, வளரும் சூழ்நிலை சிறப்பான யோகங்களை பெரும் தன்மை என்ற வகையில் நன்மைகளை தரும்.

5ம் பாவக வழியில் இருந்து சிறந்த சமயோசித புத்திசாலித்தனம், கல்வியில் தேர்ச்சி கலைகளில் ஆர்வம், எதிர்பாராத உதவிகள், கல்வி துறையில் நல்ல முன்னேற்றம், புதிய சிந்தனை மூலம் நல்ல வாய்ப்புகளை பெரும் யோகம், குல தெய்வ நல்லாசிகள், நல்ல குழந்தைகள் என ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து யோகத்தை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள், நண்பர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை யோகங்களையும் தரும், கூட்டு முயற்ச்சி வெற்றி பெரும் வெளிநாடு யோகம் உண்டு, பொதுமக்கள் ஆதரவு மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டாகும், நல்ல வாழ்க்கை துணையும், வாழ்க்கை துணை வழியில் இருந்து யோக பலன்களையும் வாரி வழங்கும்.

11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டங்களையும், தன்னம்பிக்கை மிகுந்த செயல்பாடுகளையும், முற்போக்கு சிந்தனை உடன் கூடிய யோக வாழ்க்கையையும் பெறலாம், சிறப்பான நல்ல குணம், சிறந்த மன நிலை, எதிர்ப்புகளை சமாளிக்கும் வல்லமை, புதிய வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் பெரும் யோகம் என்ற வகையில் யோக பலன்களையும் வாரி வழங்கும்.

தங்களது ஜாதகத்தில் வலிமை அற்று காணப்படும் பாவகங்கள் :

2,4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து குடும்பம், வருமானம், பேச்சு என்ற வகையில் இருந்து அவயோகத்தையும், 4ம் பாவக வழியில் இருந்து சுக போகம், சொத்து, வீடு வண்டி வாகனம் என்ற வகையில் இன்னல்களையும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் தொந்தரவுகளையும், கடன் பிரச்சனைகளையும், எதிரி தொந்தரவுகளையும், செய்யும் காரியங்களில் அதிக எதிர்ப்புகளையும் வழங்கும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகளையும், வீண் மருத்துவ செலவுகளையும், கடுமையான விபத்துகளையும், அதிக மன கவலைகளையும் தரும், 10ம் பாவக வழியில் இருந்து கௌரவ குறைவையும், ஜீவன முன்னேற்றம் இன்மையையும், தொழில் மற்றும் வேளையில் மன நிம்மதி இன்னமையையும், பொருளாதார தொந்தரவுகளையும் வாரி வழங்கும், 12ம் பாவக வழியில் இருந்து அதிக மன உளைச்சல்களையும், மன போராட்டத்தையும், மன நிம்மதி இழப்பையும் தரும், வீண் விரையங்களை தவிர்க்க இயலாது, அனைவராலும் தொல்லைகளை தரும், எதிர்பாராத திடீர் இழப்பு மிகுந்த இன்னல்களை தரும், எனவே தங்களது ஜாதகத்தில் 2,4,6,810,12ம் பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

தங்களது ஜாதகத்தில் கடுமையான பாதிப்பை தரும் பாவகங்கள் :

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 3ம் பாவக வழியில் இருந்து சகோதர ஆதரவு இன்மையையும், எடுக்கும் முயற்சிகள் கடுமையான தோல்விகளையும், தன்னம்பிக்கை அதிக அளவில் குறையும் தன்மையையும், பயணங்கள் மூலம் அதிக இன்னல்களையும் வீண் அவபெயரையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், உடல் மனம் இரண்டும் விரைவில் சோர்ந்து போகும், வீண் கற்பனையும் சந்தேகமும் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், 9ம் பாவக வழியில் இருந்து முன்னோர்கள் மற்றும் வயதில் அதிகம் உள்ள பெரியவர்களின் ஆசியை பெற இயலாத சூழ்நிலையை உருவாக்கும், லட்சியம் மற்றும் கனவுகள் யாவும் நிறைவேறாமல் தோல்வியை தரும், எதிர்பாராத தொந்தரவுகளும், வீண் அலைச்சல்களையும், தெளிவற்ற அறிவு திறன் இல்லாமல் பெரிய சிக்கல்களில் தாமாகவே சென்று சிக்கி கொள்ளும் தன்மையை தரும், தமது  புகழுக்கும் பெயருக்கும் களங்கத்தை தரும், உதவி செய்ய யாரும் இல்லாத சூழ்நிலையை தரும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 11ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் அமைப்பில் இருந்து அதிர்ஷ்டம் மற்றும் யோகத்தையும் பெரும் தன்மையையும்.

12ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் அமைப்பில் இருந்து மன நிம்மதி இழப்பையும், வீண் விரையங்களையும், அதிக தொல்லைகளையும் தரும்.

9ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் அமைப்பில் இருந்து கடுமையான பாதிப்புகளை தரும், சுய முன்னேற்றம் இன்மையையும், வீண் அவ பெயரையும், வீண் அலைச்சல்களையும், நீடித்த தொந்தரவுகளையும் தரும்,  அனைத்தும் தோல்வியை தரும்.

தற்பொழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 11ம் பாவக பலனை தருவது மிகுந்த நன்மைகளையும் யோகங்களையும் 1,5,7,11ம் வீடுகள் வழியில் இருந்து தரும்.

அடுத்து வரும் குரு திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை தருவது, கடுமையான பாதிப்புகளை தரும், குறிப்பாக 3,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் இதில் இருந்து மீண்டு  வருவது என்பது கேள்வி குறியே.

குறிப்பு :

மறைவு ஸ்தானம் மற்றும் துர் ஸ்தானம் என்று அழைக்கப்படும் 6,8,12ம் வீடுகள் மட்டுமே ஜாதகருக்கு தீமையையும் அவயோகத்தையும் தரும் என்பது பொதுவான கருத்து, லக்கினம் முதல் 12 பாவகங்களும் ஒரு ஜாதகருக்கு நன்மை தீமை, யோக அவயோக  பலாபலன்களை தருவதற்கு உண்டான வலிமை உள்ளது என்பதே எதார்த்தமான உண்மை அன்பர்களே! எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமையுடன் இருப்பது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நிச்சயம் யோகங்களை வாழ்நாள் முழுவதும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக