ஞாயிறு, 20 மார்ச், 2016

பித்ரு தோஷமும், குலதெய்வ சாபமும் நடைபெறும் அனைத்து அவயோக பலன்களுக்கு காரணமாக அமையுமா ?


"எண் சாண்  உடம்புக்கு சிரசே பிரதானம்" 
என்ற பழமொழிக்கு ஏற்ப சுய ஜாதகத்தில் லக்கினமே பிரதானமாக அமைகிறது, லக்கினத்தை அடிப்படையாக கொண்டே மற்ற 11 பாவகங்களும் இயங்குகிறது என்றால், அது மிகையில்லை, ஒருவருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை வழங்குவதில் நிச்சயம் 12 பாவகங்களுக்கும் பங்குண்டு, இதில் ஜாதகருக்கு நடைபெறும் அவயோக பலன்கள் அனைத்திற்கும் பித்ரு தோஷம் மற்றும் குல தெய்வ சாபம் காரணமாக அமையும் என்பது சுய ஜாதக கணித அமைப்பிற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

பெரும்பாலும், வேலை தொழில் முன்னேற்றம் இன்மை, திருமண தடை, குழந்தை பாக்கியம் இன்மை,  ஆரோக்கியம் இன்மை, கல்வியில் தடை, பொருளாதார முன்னேற்றம் இன்மை போன்றவற்றிற்கு, குல தெய்வ சாபத்தையும், பித்ரு சாபத்தையும் காரணம் காட்டுவதுண்டு, இதுவும் தவறான அணுகுமுறையே, ஏனெனில் சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் கடுமையாக பாதிக்க பட்டு, நடைபெறும் திசா புத்தியும் பாதிக்க பட்ட 5,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே இன்னல்களை தரும், தமது பாவக வழியில் இருந்து, 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவனம் செய்ய இயலாத சூழ்நிலையை உருவாக்கும், ஜாதகரின் சமயோசித புத்திசாலித்தனம் ஜாதகருக்கு பயன்படாது, ஜாதகருக்கு உதவும் அன்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், குல தெய்வ ஆசி கிடைக்காது, தமது குழந்தைகள் வழியில் இருந்து இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தாராது.

9ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது, ஜாதகருக்கு சுய அறிவுத்திறன் ஜாதகருக்கு பலன் தாராது, சொல்புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்ல என்ற நிலையை உருவாக்கும், கற்ற கல்வி ஜாதகருக்கு பலன் தாராது, ஆன்மீக பெரியோர் மற்றும் ஜாதகரின் முன்னோர்கள் ஆசியை பெறுவது என்பது இயலாமல் போகும், ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாமல், நாத்திகத்தில் ஆர்வத்தை தரும், நல்ல ஞானம் என்பது கிட்டாமல் சூன்யமான வாழ்க்கை அமைந்துவிடும், ஜாதகருக்கு போதிக்கும் அறிவுரை அனைத்தும் வீணாக போகும், பெரியோர்களையும் முன்னோர்களையும் நிந்தனை செய்யும் போக்கு ஜாதகருக்கு அதிகரிக்கும், நல்லோர் மற்றும் பெரியோர்களின் ஆதரவை பெறுவது என்பது ஜாதகருக்கு குதிரை கொம்பாக மாறிவிடும்.

1) ஆரோக்கியம் 

ஆரோக்கிய பாதிப்பிற்கு சுய ஜாதகத்தில் 1,6,8,12ம் பாவகங்களின் வலிமை அற்ற நிலை காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது ஜாதகரின் உடல் நலம் பாதிக்கும், அது சார்ந்த இன்னல்கள் அதிகரிக்கும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு உடல் நல பாதிப்பு நிச்சயம் ஏற்ப்படும்.

2) கல்வி 

கல்வியில் தடை எற்ப்பட சுய ஜாதகத்தில் 2,5,9ம் பாவகங்களின் வலிமை அற்ற நிலை காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது, ஜாதகருக்கு கல்வியில் தடையும், முன்னேற்றம் இன்மையும்  உண்டாகும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் கல்வி,உயர் கல்வி முயற்ச்சிகள் தோல்வியை தரும்.

3) திருமணம் 

திருமண வாழ்க்கையில் தடைகளுக்கும் தாமதத்திற்கும் சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்களின் வலிமை அற்ற  நிலையே காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது  ஜாதகருக்கு திருமண தடை மற்றும்  கால தாமத திருமணம் என்ற நிலையை தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு நிச்சயம் திருமணம் சார்த்த தடைகளை தங்கு தடையின்றி வழங்கும்.

4) தொழில் 

தொழில் மற்றும் பணியில் விருத்தி இன்மைக்கு காரணமாக சுய ஜாதகத்தில் 7,10ம் பாவகங்களின் வலிமை அற்ற  நிலையே காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது  ஜாதகருக்கு நல்ல தொழில் அல்லது வேலை அமைவது என்பது குதிரை கொம்பாக மாறிவிடும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு ஜீவனம் அமையாமல் போராட்ட வாழ்க்கையை வழங்கி விடும், தனித்தோ கூட்டு முயற்சியாகவே ஜாதகர்  எவ்வித ஜீவனத்தையும் மேற்கொள்ள இயலாது.

5) குழந்தை பாக்கியம் 

நல்ல வாரிசு அல்லது குழந்தை அமையாதது என்பது தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக வலிமை அற்ற நிலையே காரணமாக அமையும்,  மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது தம்பதியருக்கு நல்ல வாரிசோ அல்லது குழந்தை பாக்கியமோ அமைவதில் தடைகளை ஏற்ப்படுத்தும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை தம்பதியருக்கு ஏற்று நடத்தினால், புத்திர பாக்கியம் அமைவது என்பது அரிதாகிவிடும்.

6) பொருளாதாரம் 

பொருளாதரத்தில் தடைகளும் இன்னல்களும் ஏற்ப்பட சுய ஜாதகத்தில் 1,2,4,7,10,11ம் பாவகங்களின் வலிமை அற்ற  நிலையே காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது  ஜாதகருக்கு  இலக்கின வழியில் இருந்து பலன்களை உதறும் தன்மையும், 2ம் பாவக வழியில் இருந்து வருமானத்தை முறையாக பயன்படுத்த இயலாத  சூழ்நிலையும், 4ம் பாவக வழியில் இருந்து சுக போகம் மற்றும் வண்டி வாகனம் மற்றும் சொத்து சுகங்களை  சுவீகாரம் செய்ய இயலாத சூழ்நிலையையும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை,  நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து அதரவின்மையையும், எதிர்ப்புகளையும் சந்திக்கும் தன்மையை தரும், 10ம் பாவக வழியில் இருந்து நல்ல ஜீவனம் இன்மையையும், கௌரவ குறைவையும், சுய தொழில் செய்வதில் தோல்விகளையும் தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் பொருளாதார தன்னிறைவு என்பது கானல் நீராக மாறிவிட வாய்ப்புண்டு.

எனவே ஆரோக்கியம்,கல்வி,திருமணம்,தொழில்,குழந்தைபாக்கியம் மற்றும் பொருளாதார தடைகளுக்கும், ஜாதகத்தில் நடைபெறும் அனைத்து அவயோக பலன்களுக்கு காரணமாக பித்ரு தோஷமும், குல தெய்வ சாபமுமே காரணம் என்று குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல, சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப்பவே பலாபலன்கள் நடைமுறைக்கு வருகின்றது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது அன்பர்களே! மேலும் சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் எவை எவை என்பதை உணர்ந்து சம்பந்த பட்ட பாவகங்கள் வலிமை பெறுவதற்கு உண்டான தேடுதல்களை செய்வதே சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக