சனி, 10 செப்டம்பர், 2016

ஜாதக ஆலோசனை : வேலை மற்றும் திருமண யோகம் !


கேள்வி பதில் :

1) எதிர்காலம் எப்படி இருக்கும்? நல்ல வேலை நல்ல சம்பளத்துடன் அமையுமா? வெளிநாடு யோகம் உண்டா ?   

அன்பு சகோதரிக்கு " வணக்கம் " 

தங்களின் சுய ஜாதக அமைப்பின் படி எதிர்கால வாழ்க்கை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, தற்போழுது நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையை வைத்து தெளிவாக அறிந்துகொள்ளலாம், தற்போழுது தங்களுக்கு சுக்கிரன் திசை ( 07/05/2012 முதல் 07/05/2032 வரை ) நடைமுறையில் உள்ளது, நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு 2,4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஸ்திர நெருப்பு ராசியான சிம்ம வீட்டின் பலனை ஏற்று நடத்துகிறது, எனவே சுக்கிரன் திசை தங்களுக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இழப்பு, வருமானம் இன்மை வாக்கினால் துன்பம் மற்றும் இன்னல்களையும், 4ம் பாவக வழியில் இருந்து தகப்பனார் மற்றும் சுக போக வாழ்க்கையில் இன்னல்களையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்பு,வீண் செலவு,ஏமாற்றம் மற்றும் மருத்துவ செலவு உடல் நல குறைபாட்டினையும் வழங்கும், 12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லை, மன நிம்மதி இழப்பு, எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றம் தரும் நிலை, மன அழுத்தம், மன போராட்டம், அனைத்திலும் விரையம் என்ற வகையில் பலன்களை தரும், எனவே தங்களுக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை அவயோக பலன்களை ஸ்திரமாக வாரி வழங்கிகின்றது என்பது மட்டும் உண்மை, மேலும் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசையில் சந்திரன் புத்தி  ( 06/09/2016 முதல் 07/05/2018 வரை ) 1,9ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது சகல நன்மைகளையும் வாரி வழங்கும் லக்கின பாவக வழியில் இருந்து சில அதிர்ஷ்டங்களை முன்னேற்றங்களையும் பெரும் யோகம் உண்டாகும், எடுக்கும் முயற்சிகள் லாபம் தரும் அதிர்ஷ்டகரமான சில நிகழ்வுகள் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

அடுத்து வரும் சூரியன் திசை 5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது தங்களுக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து அதாவது குழந்தை பாக்கியம் மற்றும் களத்திர பாவக வழியில் இருந்து அதிக அளவில் ( 200% சதவிகித ) இன்னல்களை வழங்க வாய்ப்பு உண்டு என்பதால், சரியான வாழ்க்கை துணையை தங்கள் தேர்வு செய்வது அவசியமாகிறது.


 2) கல்யாணம் எப்போது நடக்கும்? எப்படி பட்ட துணை அமையும். பரிகாரம் செய்தால் தான் திருமணம் நடைபெறுமா?

தற்போழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை சந்திரன் புத்தியில்  ( 06/09/2016 முதல் 07/05/2018 வரை ) திருமணத்திற்கு உண்டான முயற்சி எடுத்தால் தங்களுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற அதிக வாய்ப்புள்ளது, மேலும் தங்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல், சுய ஜாதகம் வலிமை உள்ள ஒரு வரனை தேர்வு செய்தால் தங்களின் வாழ்க்கை சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், தங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஊரிலேயே இருந்து நல்ல வரன் வர வாய்ப்பு உண்டு, சுய ஜாதகத்தில் 2,7,12ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்படுவதால் திருமணம் நடைபெற முறையான பரிகாரங்களை நாடுவதே மிகுந்த நன்மைகளை தங்களுக்கு வாரி வழங்கும், குறிப்பாக களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு திருமண தடைகளை ஏற்படுத்தும், இதற்கான பரிகாரங்களை முறைப்படி அறிந்து நலம் பெறுவது அவசியமாகிறது.


3) தற்போது உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்க பட்டுள்ளது. காரணம் என்ன ?

நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு சாதகமாக இன்றி இருப்பதும், சுய ஜாதகத்தில் நெருப்பு மற்றும் மண் தத்துவ ராசிகள் கடுமையாக பாதிக்கப்படுவதும் தங்களுக்கு மிகுந்த இன்னல்களை உடல் மற்றும் மனம் ரீதியாக வாரி வழங்கும், இதற்கான பரிகாரங்களை மேற்கொள்வதும் உடல் மற்றும் மன நலனில் அக்கறை செலுத்துவதும் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.


4) சில சோதிடர்கள் எனக்கு திருமணம் நான்கு ஆண்டுகளுக்க மேல் ஆகும் என்கிறார்கள்? உண்மையில் திருமணம் நடைபெறுமா?

  இந்த கூற்றில் சிறிதும் உண்மை இல்லை தங்கள், சில விஷயங்களில் விரைவாக முடிவு எடுத்தல் எதிர்வரும் 3 மாதங்களில் தங்களுக்கு சிறப்பாக திருமணம் நடைபெறும், தடைகள் யாவும் தகர்ந்து, இனிமையான இல்லறம் அமைய அதிக வாய்ப்பு உண்டு என்பதால் விரைவாக சில முயற்சிகளை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

5) மாப்பிள்ளை திசை வீடு குடும்பம் படிப்பு ஜாதி வேற்று மதம் இனம் அமையுமா. வேற்று இனத்தில் திருமணம் செய்தால் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள்  ஏற்படுமா?                         

வடகிழக்கு அல்லது வடக்கு சார்ந்த திசைகளில் இருந்து வாழ்க்கை துணை அமையும், மிக அருகாமையில் வாழ்க்கை துணையின் இல்லம் அமைந்து இருக்கும், நல்ல கல்வி மற்றும் சிறப்பான பணியில் இருப்பார், வேற்று ஜாதியில் திருமணம் தங்களுக்கு நன்மைகளை தரும், வேற்று இனத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கையில் யோகமும் முன்னேற்றமும் உண்டாகும்.

6) குழந்தை பாக்கியம் உண்டா?

நிச்சயம் உண்டு முதலில் பெண் குழந்தை அமைய அதிக வாய்ப்பு உள்ளது, இருப்பினும் தங்களது எதிர்கால வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை உணர்ந்து தெளிவாக சொல்ல இயலும்.
                        
7) எனக்கு பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் ஆதரவு இன்றி உள்ளேன். கல்யாண வரன் பார்ப்பதில் நண்பர்களின் ஆதரவுமில்லை. இப்படிப்பட்ட சூழலில் உண்மையில் திருமணம் நடைபெறுமா? 

நிச்சயம் நடைபெறும், தங்களுக்கு திருமணம் சார்ந்த விஷயங்களில் உதவி வரும், குல தெய்வத்தின் ஆசியுடன் வாழ்க்கையில் திருமணம் சிறப்பாக நடைபெறம், எதிர்காலம் தங்களுக்கு மிகுந்த நன்மைகளை வழங்கும்.

8) ஐயா நான் தற்போது பிறந்த ஊரில் உள்ளேன். குறைந்த வருவாயில் வேலை. நான் வேலை தேடி இடமாற்றம் சென்றால் சிறப்பாக இருக்குமா? 

இது ஒரு "உத்தமமான சிந்தனை" தங்கள் விரைவில் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் செய்வதற்கு உண்டான முயற்சியை மேற்கொள்வது நல்லது, மேலும் தாங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது வெளியூர் அல்லது வெளிநாட்டில் ஜீவனம் செய்ப்பவராக தேர்வு செய்வது சகல நலன்களையும் வாரி வழங்கும், இல்லற வாழ்க்கையில் வரும் யோகத்தை உறுதி செய்யும்.

9) வேலை கிடைப்பதில் மற்றும் வரன் சரியாக அமைவதில்லை மற்றும் வருவதுமில்லை. இடமாற்றம் செய்தால் கல்யாணம் மற்றும் வேலைக்கு சரி வருமா?                         

சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், இடமாற்றம் தங்களுக்கு மிகுந்த யோகத்தை வாரி வழங்கும், குறிப்பாக தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் தேடுவதும், வாழ்க்கை துணையை தேடுவதும் தங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை நன்மைகளையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் பூர்வீக ஸ்தானம் எனும் 5ம் வீடு  பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு அளவில்லா இன்னல்களை வாரி வழங்கும், பூர்வீகத்தில் குடியிருக்கும் வரையிலும், எனவே இதில் இருந்து தப்பிக்க நல்ல உபாயம் தங்களது பூர்வீகத்தில் இருந்து 100 மைல் தொலைவிற்கு அப்பால் சென்று குடியிருப்பது சகல நலன்களையும் வாரி வழங்கும்.
                        
10) என்னுடைய திருமணம் நடைபெறும் பொழுது பெற்றோர் உடன் இருப்பார்களா?                         

நிச்சயம் இருப்பார்கள், இருப்பினும் தங்களது விருப்பப்படி திருமணம் நடைபெறும், இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.

11) திருமணம் வேலை மற்றும் எந்த வேலையிலும் தடைகள் இருப்பதை களைய பரிகாரம் உள்ளனவா?

தங்களது சுய ஜாதகத்தில் 3,5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சகோதரம்,பூர்வபுண்ணியம் மற்றும் களத்திர வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், மேலும் 2,4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்பம்,சுகம்,ஆயுள் மற்றும் விரைய பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை தரும் அமைப்பாகும், எனவே மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கவும், மேற்கண்ட பாவக வழியில் இருந்து நன்மைகளை பெறவும், முறையான பிரீதி பரிகாரங்களை பற்றி நேரில் வந்து தெளிவாக ஆலோசனை பெற்று, தங்களது வாழ்க்கையில் சகல நலன்களையும் பெற "ஜோதிடதீபம்" வாழ்த்தி வரவேற்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

2 கருத்துகள்:

  1. name : prasath.S
    DOB : 16-09-1991
    TIME :12.13 PM
    PLACE : TINDIVANAM
    SEX: MALE
    VELAI VAIPOO,GOVT JOB ,ETHIRGALAM EPPADI IRUKUM.............PLEASE REPLAY......
    EMAIL ID: sprasath164@gmail.com
    contact -9500834017 .............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரில் வந்து முறையாக ஜாதக ஆலோசனை பெற்று கொள்ளவும் !

      நீக்கு