செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

சுயஜாதக ஆலோசனை - பாதக ஸ்தான தொடர்பும்,ஜாதகரின் துரதிர்ஷ்ட வாழ்க்கையும் !



கேள்வி :

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்.நான் 13/11/1987 வருடத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.58PM மணிக்கு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் என்ற ஊரில் பிறந்தேன்.
இதுவரை எனக்கு திருமணம் நடைபெறவில்லை.நல்ல தொழிலும் அமையவில்லை.சுய தொழிலில் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு பெரும் கடனாளி ஆகிவிட்டேன்.எனது பூர்விக வீட்டின் மேல் கூட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.சம்மந்தமே இல்லாத நபர் என் வீட்டிற்கு உரிமை கொண்டாடுகிறார்.என் தந்தை கூட என்னையும் என் தாயையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.ஒன்றுமே புரியவில்லை, என் ஜாதகத்தை கொடுத்து பல ஜோதிடர்களிடம் பலன் கேட்டுப்பார்த்தேன்.ஆனால் ஒருவர் கூட எனது பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லவில்லை, மதிப்பிற்குரிய ஐயா நான் கடவுளை முழுமையாக நம்புபவன்.ஆனால் இதுவரை எனது வாழ்வில் பெருத்த ஏமாற்றங்களையும், தோல்விகளையுமே சந்தித்துள்ளேன்.

நான் எப்போது எனது வாழ்வில் முன்னேற்றம் காண்பேன்?
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்?
எனது பிரச்னைகள் எப்போது தீரும்?

மதிப்பிற்குரிய ஐயா தயவு செய்து அருள்கூர்ந்து எனது பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லுங்கள்.

இப்படிக்கு
சே.மதிவாணன்.

பதில் :

தங்களின் கேள்விகளுக்கு நிச்சயம் சரியான பதில்களை " ஜோதிடதீபம் " வழங்கும் அன்பரே ! ஆனால் தாங்கள் முறையான ஜாதக ஆலோசனை பெற்றுக்கொள்வது சாலசிறந்தது, ஏனெனில் நல்ல ஜோதிட ஆலோசனை தங்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சகல விதங்களிலில் இருந்தும் பயனுள்ளதாக அமையும், இருப்பினும் தங்களது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகங்கள் பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் !

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நல்லதல்ல, ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான இன்னல்களை 200% விகிதம் அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய  ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை உதறித்தள்ளும் நிலையை தரும் குறிப்பாக, ஜாதகர் முரண்பட்ட குணாதிசயத்தை பெற்று இருப்பார், தங்களின் ஜாதகத்தில்  அவ்வித  பாதிப்புகள் ஏதும் இல்லை என்பதனால், தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை உறுதியாக சொல்லலாம்.

ஆனால் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசையில், புதன் புத்தி தங்களுக்கு பாதக ஸ்தான பலனையும், திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவக பலனை  ஏற்று நடத்திக்கொண்டு இருக்கிறது என்பது, சற்று கவலை தரும் விஷயமே என்றாலும், இதற்க்கு உண்டான தீர்வுகளையும், பிரீதி பரிகாரங்களையும் மேற்கொள்வது தங்களுக்கு பாதிக்கப்பட்ட பாதக ஸ்தானம் மற்றும் ஆயுள் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க உதவும், மேலும் எதிர் வர இருக்கும் சுக்கிரன் திசை கேது புத்தி, அதற்க்கு அடுத்து வரும் சூரியன் திசை ஏற்று நடத்தும் பாவக பலன்கள் பற்றிய புரிதலுடன், தாங்கள் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.

திருமண தாமதத்திற்கு களத்திர ஸ்தான வலிமை இன்மையே அடிப்படை காரணமாக விளங்குகிறது என்பதை கருத்தில் கொள்க, தங்களது ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்பு தரும் இன்னல்களில் இருந்து விடுபடவும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் துன்பங்களில் இருந்து விடுபடவும், முறையான ஜாதக ஆலோசனை பெறுவதே சிறந்தது, தங்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள " ஜோதிடதீபம் " தங்களுக்கு சிறந்த ஜாதக ஆலோசனைகளை வாரி வழங்கும். நேரில் வந்து ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் " வாழ்த்துகள் "


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக