புதன், 4 அக்டோபர், 2017

வெளிநாடு அல்லது வெளியூர் சென்று தொழில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டா ?


 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சுப யோகங்களை வாரி வழங்கும், மாறாக சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை இழப்பது ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளில் எந்த ஒரு வீடும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட  ஜாதகருக்கு நன்மையை தரும் அமைப்பு அல்ல என்பதே உண்மை நிலை, சுய ஜாதகத்தில் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் செய்யும் அமைப்பிற்க்கு அந்த காலத்தில் "பரதேஷ ஜீவனம்" என்று அழைத்தனர், இன்று அது மிகவும் பெருமைக்கு உரிய ஒன்றாக கருதப்படுகிறது.

 சுய ஜாதகத்தில் 5ம் வீடு வலிமை இழப்பதும், 7,12ம் வீடுகள் வலிமை பெறுவதும் ஓர் ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் ஜீவன வாழ்க்கையை அமைத்து தரும், 8,11ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகருக்கு வெளிநாடுகளில் இருந்து தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம்  மற்றும் கைநிறைவான தன சேர்க்கையை வாரி வழங்கும், லக்கினம் முதல்  பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை ஜாதகரின் வாழ்க்கையில் எங்கு இருப்பினும் சுபயோகங்களையே நல்கும், கீழ்கண்ட ஜாதகரின் கேள்வியான, வெளிநாடு அல்லது வெளியூர் சென்று தொழில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டா ?  தற்ப்பொழுது வெளியூரில் செய்து வரும் தொழில் இன்னல்களையும் கடன் சுமையையும் ஏற்படுத்தியதற்க்கு காரணம் என்ன ? என்பதற்கு உண்டான பதிலை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : உத்ராடம்

 வெளிநாடு சென்று வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு சுய ஜாதகத்தில் அடிப்படையில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு 7ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வெளிநாடு வெளியூர் கனவை நிராசையாக மாற்றுகிறது, வெளிநாடு சென்று ஜீவனம் தேடும் யோகம் அற்றவர் என்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் சுய ஜாதகத்தில் அயன சயன ஸ்தானம் என்று அழைக்கப்படும் 12ம் பாவகம் வலிமை பெறுவது வெளிநாடுகளில் ஜாதகரின் வாழ்க்கை முறையை தெளிவுபடுத்தும், இந்த ஜாதகத்தி மேற்கண்ட அயன சயன ஸ்தானம் வலிமை குறைந்து காணப்படுவது ஜாதகரின் வெளியூர் வெளிநாடுகளில் வாழும் வாழ்க்கையானது மனநிம்மதி அற்றதாகவும், அதிக போராட்டங்களை எதிர்கொள்ளும் தன்மையை கொண்டதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மேற்கண்ட விஷயங்களை விட தற்போழுது நடைபெறும் திசை தரும் பலன்கள் என்ன ? என்பதே ஜாதகரின் நிகழ்கால வாழ்க்கையை படம்பிடித்து காட்டும்.

ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள திசை ராகு திசை தரும் பலாபலன்கள் : ( 12/04/2006 முதல் 12/04/2024 வரை )

ராகு தனது திசையில் ஜாதகருக்கு சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படும் 6ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சத்ரு ஸ்தான வழியில் விரையங்களை வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது, இதனால் ஜாதகர் கடன்பட்டு செய்த தொழில்கள் யாவும் கடும் நஷ்டத்தை தந்தது, ஜாதகருக்கு அதிக அளவிலான கடன் சுமை ஜாதகரின் மனநிம்மதியை வெகுவாக பாதித்தது, இதனால் ஜாதகரின் மன நிம்மதி கெட்டு தெளிவற்ற செயல்பாடுகள் மூலம் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்திக்கொண்டார், பொதுவாக சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் மற்றும் பாக்கியம் எனும் 9ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லாமல் தான் அமர்ந்த இடத்தில் ( பூர்வீகம் ) இருந்துகொண்டே சகல சௌபாக்கியங்களையும் தன்னை தேடிவர செய்யலாம், பூர்வீகம் பாதிப்பு அடைந்து இருந்தால் மட்டுமே ஜாதகர் வெளியூர் வெளிநாடு ( பரதேசஜீவனம் ) சென்று ஜீவனம் தேடலாம், அதுவும் சுய ஜாதகத்தில் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாவகங்கள் வலிமை பெற்று, நடைமுறையில் உள்ள திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், மாறாக குறிப்பிடப்பட்டுள்ள பாவகங்கள் வலிமை அற்று இருப்பின் தனது பூர்வீகத்திற்கு அருகிலேயே ஜீவன வாழ்க்கையை அமைத்துக்கொள்வது சாலசிறந்தது.

மேற்கண்ட ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை சத்ரு ஸ்தானமான 6ம் வீட்டு பலனை, விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று தருவது, ஜாதகரின் வாழ்க்கையில் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகளை தருகின்றது மேலும் ஜாதகரின் 6ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாக அமைவது ஜாதகரின் வருமானம் சார்ந்த விஷயங்களை கேள்விக்குறியாக மாற்றுகிறது, ஜாதகருக்கு வரும் வருமானம் வீண் விரையம் ஆகிறது, ஜாதகரின் பேச்சு மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாக்குகிறது, 12ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக அமைவது வெளிநாடு வெளியூர் சென்று ஜீவிப்பது ஜாதகருக்கு மிக பெரிய இழப்புகளையும், அறிவு சார்ந்த முயற்சிகளில் தோல்வி மற்றும் மனநிம்மதி இழப்பையும் வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை அற்றும், நடைபெறும் ராகு திசை வலிமை  அற்ற பாவக பலனையும் ஏற்று நடத்துவதே ஜாதகரின் வெளியூர் சார்ந்த தொழில் வழியில் இருந்து கடுமையான தோல்வியை தந்து இருக்கின்றது, மேலும் ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் தேடி நலம் பெறுவதற்க்கு உண்டான வாய்ப்புகள் சிறிதும் இல்லை என்பதே மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை, அடுத்து வரும் குரு திசையும் ஜாதகருக்க சாதகமின்றி இருப்பது ஜாதகரின் வெளியூர் வெளிநாடு கனவுகளை வெகுவாக சிதைக்கும் என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுவதே ஜாதகருக்கு உகந்தது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக