வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க, சுய ஜாதகத்தில் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள் !


 சுய ஜாதகம் நமது வாழ்க்கையில் வரும் நன்மை தீமைகளை மட்டும் கோடிட்டு காட்டுவதல்ல, பாவக வலிமையின் அடிப்படையில் நமது வாழ்க்கையை திட்டமிடுதல்களுடன் சிறப்பாக அமைத்துக்கொள்ள நல்வழிகாட்டுதல்களையும் வழங்கும் வல்லமை பெற்றது, இன்றை சூழ்நிலையில் உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை என்றே சொல்லலாம், வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் பாதுகாப்பாக பயணிக்க வேண்டியது அவசியம் என்பதை உணரவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் " சுவரில்லாமல் சித்திரம் எழுத முடியாது " எனவே நமது சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை அனுபவிக்க வேண்டுமெனில் நமது " ஜீவனை கருத்துடன் காப்பது " அவசியமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : கன்னி 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்ராடம் 4ம் பாதம் 

 ஜாதகரின் இழப்பு அவரது குடும்பத்தை மட்டுமல்ல, நமது மனதையும் கடுமையாக பாதிப்பை  தந்து மீள இயலாத துன்பத்தை தந்துவிட்டது, ஜாதகருக்கு  சுய ஜாதகத்தில் 4,12ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் பாரம்பரியத்தையும் ஜாதகர் செய்த புண்ணியகாரியங்களையும் நமக்கு மிக எளிதாக தெளிவுபடுத்தும், ஜாதகரின் தொழில் திறமை, அதிர்ஷ்டம், குடும்ப வாழ்க்கையில்  மகிழ்ச்சி, இறை அருளின் ஆசிர்வாதம் என அனைத்தும் சிறப்பாக அமைந்த போதிலும், ஜாதகரின் பாதுகாப்பற்ற பயணம் ஜாதகரின் உயிரை பறித்தது, இதற்க்கு முன் ஜாதகர் மூன்று விபத்துகளை சந்தித்த போதிலும், ஜாதகரின் உயிருக்கு யாதொரு பாதிப்பும் இல்லை, உடலுக்கும் பெரிய இன்னல்களை தரவில்லை, ஏனெனில் ஜாதகர் சந்தித்த விபத்துகள் யாவும் நான்கு சக்கர வாகனத்தில் என்பதால், வாகனங்களுக்கு மட்டுமே கடுமையான பாதிப்பை தந்தது, இறை அருளால் ஜாதகருக்கு எந்த வித பாதிப்பை சந்திக்கவில்லை, இறுதியில் ஜாதகரின் உயிரை பறித்த விபத்து என்பது இருசக்கர வாகனத்தில் நிகழ்ந்தது, அதுவும் ஜாதகரின் அஜாக்கரதையால் தலை கவசம் அணிந்து செல்லாத காரணத்தால் ஏற்பட்டது என்பது நாம் கூர்ந்து கவனிக்கவேண்டிய விஷயமாகும்.

 நம்மிடம் ஜாதக ஆலோசனை பெரும் பொழுது ஜாதகருக்கு இந்த விஷயம் மிகவும் தெளிவாக விளக்கம் தந்து அறிவுறுத்தப்பட்டது, இருப்பினும் ஜாதகரின் கவனக்குறைவு உயிரிழப்பு வரை அழைத்து சென்றது, ஜாதகருக்கு தற்போழுது நடைபெற்று கொண்டு இருக்கும் குரு திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான  பலனையும், குரு திசை சனி புத்தி வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனையும் தந்த போதிலும், சனி புத்தியில் ராகு அந்தரம் 4,12ம் வீடுகள் பேரிழப்பை தரும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை நடத்திக்கொண்டு இருக்கும் பொழுது சிறு விபத்திலேயே ஜாதகர் மரணத்தை சந்திக்கும் சூழ்நிலையை தந்துவிட்டது, ஜாதகரின் 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வபுண்ணியம் என்று அழைக்கப்படும் சிம்ம ராசியில் அமைந்து ஜாதகருக்கு அசட்டு தைரியத்தை வழங்கி, குல தெய்வத்தின் கருணையை பெற முடியாத சந்தர்ப்பத்தில் உயிரிழப்பை சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.

 ஜாதகர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசத்துடன் பயணித்து இருப்பின் இந்த மரணம் நிகழ்ந்து இருக்கவே வாய்ப்பில்லை, அனைவரும் பாதுகாப்பாக வண்டி வாகனங்களில் பயணிப்பது அவசியம் என்ற போதிலும், சுய ஜாதகத்தில் 1,4,6,8,12ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின் அவர்கள் அனைவரும், இறை அருள் தந்த தனது உடலையும் உயிரையும் பேணிப்பாதுகாப்பது மிக மிக அவசியமாகிறது, இதை சுய ஜாதகம் கொண்டு நாம் மிக தெளிவாக உணர இயலும், மேற்கண்ட ஜாதகரின் இழப்பு என்பதே இறுதியாக இருக்க இறை அருள் கருணை புரியட்டும், அனைவரும் ஓர் நாளில் இறப்பது உறுதியென்ற போதிலும் நமது கர்மவினை பதிவினை இந்த பூ உலகில் கழித்துக்கொண்டு இறைநிலையை அடைவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும், விபத்துகளால் வரும் இழப்புகளில் இருந்து மகரிஷி அய்யா வழங்கிய  " அருட்க்காப்பு " எனும் வேத மந்திரம் நம் அனைவரையும் காக்கும், என்பதனை ஒவ்வொரு பயணத்திலும் நாம் நினைவில் கொள்வதுடன், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனத்தில் இருக்கை பாதுகை பட்டையையும் அணிந்து செல்வதை நமது கடமையாக ஏற்பது அவசியமாகிறது.

குறிப்பு :

 மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலன பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருந்தது சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகத்தை தரும் அமைப்பாகும், இருப்பினும் ஜாதகரின் கவனமின்மையும், பாதுகாப்பற்ற பயணமும், சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் அனைத்தையும் அவருடன் மண்ணோடு மண்ணாக மறைந்ததுடன், அவரை சார்ந்த அனைவரையும் மீளாத்துயரத்தில் அழுத்திவிட்டு சென்றுவிட்டது.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக