வெள்ளி, 20 ஜூலை, 2018

12ல் செவ்வாய் தோஷம் தனது திசையில் நன்மை செய்யுமா? எதிர்வரும் ராகு திசை தரும் பலன் என்ன ?


கேள்வி :
12ல் செவ்வாய் தோஷம் உள்ளது, தற்போழுது செவ்வாய் திசையே நடைமுறையில் உள்ளது செவ்வாய் தோஷம் என்பதால் தனது திசையில் இன்னல்களை தருமா ? லாப ஸ்தானமான 11ல் நின்ற ராகு திசை எனக்கு யோக வாழ்க்கையை வழங்குமா? எதிர்காலம் எப்படி இருக்கும் ?

பதில் :

 " ஜோதிடம் ஒரு கடல் " இதில் நீச்சல் தெரிந்தவர்கள் மூழ்கி முத்துஎடுக்கலாம், தெரியாதோர் கரையில் நின்று வேடிக்கை மட்டும் பார்க்க இயலும் என்பது உண்மை நிலை, தங்களது கேள்வியிலேயே, செவ்வாய் தோஷம் உள்ளதால் செவ்வாய் திசை இன்னல்களை தரும் என்ற எண்ணமும், 11ல் அமர்ந்த ராகு தனது திசையில் யோக வாழ்க்கையை தரும் என்ற எதிர்பார்ப்பும் இழையோடி நிற்பது தெளிவாகிறது அன்பரே, தங்களின் மனஓட்டம் நிறைவேறுகின்றதா ? என்பதை தங்களது சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கடகம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : பூராடம் 1ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 15/01/2017 முதல் 16/01/2024 வரை ) லக்கினத்திற்கு விரைய ஸ்தானமான 12ல் அமர்ந்து நடைபெற்ற போதிலும் தனது திசையில் தங்களது ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்கது, அதாவது செவ்வாய் தனது திசையில் 3,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று சகோதரம் மற்றும் வீரிய ஸ்தானமான 3ம் பாவக வழியில் இருந்தும், களத்திரம் மற்றும் வியாபர விருத்தியை தரும் 7ம் பாவக வழியில் இருந்து தங்களுக்கு மிகுந்த சுபயோகங்களை நல்குவது வரவேற்கத்தக்கது, 3,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது தங்களுக்கு 3ம் பாவக வழியில் இருந்து நிலையான சுய முன்னேற்றம், எளிதான பொருள் வரவு, செய்யும் தொழில் வழியில் அபரிவித முன்னேற்றம், வீரியமிக்க செயல்பாடுகள், சகல சௌபாக்கியம், கலையில் தேர்ச்சி, சமூக அந்தஸ்து, அரசியலில் வெற்றி, தீர்க்காயுள், பெரியோர் வழியிலான ஆசி, அறிவு திறன் புத்திகூர்மை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், நியாமான வியாபார விருத்தி, விவசாயம் பத்திரிக்கை துறையில் முன்னேற்றம், சாஸ்திர ஆராய்ச்சி மூலம் லாபம், விளையாட்டு, இசை துறையில் ஆர்வம், லாட்டரி யோகம், வழக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி, வெளியூர் வெளிநாடு பயணம், ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், என்ற வகையில் சிறப்புகளை தரும், எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி மேல் வெற்றியை தரும், முன்னேற்றம் என்பது தன்னிறைவாக அமையும், மனோதைரியமும், தன்னம்பிக்கையும் வெகுவாக யோக பலன்களை வாரி வழங்கும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு பன்மடங்கு பெருகும், அவர் வழியிலான உதவிகள் ஜாதகருக்கு மிதமிஞ்சிய லாபங்களை வாரி வழங்கும், அரசியல், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் வியாபாரம் விருத்தி அடையும், பிரபல்ய யோகம் உண்டு என்பதால் ஜாதகரின் முன்னேற்றம் வெகு விரைவில் அமையும் என்பது கவனிக்கத்தக்கது, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஜாதகருக்கு சிறப்பாக அமைவார்கள், தனசேர்க்கை ஜாதகருக்கு பெரிய திட்டமிடுதல்களை மிக எளிதாக வெற்றிகொள்ளும் வாய்ப்பை நல்கும், சமூகத்தில் ஜாதகருக்கு மதிப்பு  மரியாதையும், கவுரவ பதவிகளும் தேடி வரும், எதிர்பாரத தொழில் வெற்றிகளை சுவீகரிக்கும் வல்லமையை தற்போழுது நடைபெறும் 12ல் அமர்ந்த செவ்வாய் திசையையே ( 12ல் செவ்வாய் தோஷம் ) தங்களுக்கு வாரி வழங்குகிறது என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

எதிர்வரும் ராகு திசை தரும் பலன்கள் : ( 16/01/2024 முதல் 16/01/2042 வரை )

ராகு தனது திசையில் தங்களுக்கு 1,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தர இருப்பதும், 5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தர இருப்பதும் தங்களுக்கு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவக வழியில் இருந்தும், 200% விகித இன்னல்களை தரும் பாதக ஸ்தான வழியில் இருந்து ஏக காலத்தில் வெகுவான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், ராகு திசையில் தாங்கள் எடுக்கும் முடிவுகள் யாவும் கடும் சேதாரத்தையே வாரி வழங்கும், லக்கின  பாவக வழியில் இருந்து உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கும், சூழ்நிலை சந்தர்ப்பங்களை அடிபணியும் நிலையை தரும், நினைத்த காரியங்கள் நடைபெற கடும் போராட்டத்தை மேற்கொள்ளும் சூழ்நிலையை தரும், சரியான முடிவுகளை மேற்கொள்ள பகிர்தனா முயற்சிகள் எடுக்கும் சூழ்நிலையை தரும், உதவி செய்ய யாருமற்ற நிலையை தரும், எதிர்பார்ப்புகள் யாவும் பொய்த்துப்போகும், நிம்மதியை வெகுவாக பாதிக்கும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமின்மையால் மிகுந்த சிரமங்களை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும், பிற்போக்குத்தனம், கற்பனையில் சஞ்சரிக்கும் நிலை, மூடநம்பிக்கையில் ஆர்வம், மற்றவருடன் குற்றம் கண்டுபிடிக்கும் மனநிலை என்ற வகையில் தங்களின் முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும்.

5ம் பாவக வழியில் இருந்து தங்களின் பூர்வீக இடத்தில் இருந்து வெகு தொலைவு  சென்று பரதேஷ ஜீவனம் மேற்கொள்ளும் நிலையை தரும், குழந்தைகள் வழியிலான இன்னல்கள் அதிகரிக்கும், தெளிவில்லாத சிந்தனை, தவறான முடிவுகள் மூலம் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், உறவுகள் வழியிலான மனக்கசப்பு அதிகரிக்கும் என்பது கவனிக்கத்தக்கது, 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்பு, உடல் நல பாதிப்பு, வீண் விரையம், மருத்துவ செலவினங்கள், விபத்தின் மூலம் பாதிப்பு, வண்டி வாகனம் மூலம் வரும் பெரும்செலவுகள், உடலில் காயங்கள் ஏற்படுதல் அதனால் வரும் மருத்துவ செலவினங்கள், நம்பிக்கை இன்மை, அனைவராலும் தொல்லை, பொது வாழ்க்கையில் அவப்பெயர் என்ற வகையில் தங்களுக்கு 11ல் வலிமை பெற்று அமர்ந்து இருக்கும் ராகு திசை மிகுந்த இன்னல்களையே வாரி வழங்க உள்ளது என்பதை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட்டு அவயோக பலாபலன்களை தவிர்க்க முற்படுங்கள்.

குறிப்பு :

12ல் தோஷம் தரும் செவ்வாய், தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தி யோக பலன்களையும், 5ல் வலிமை பெற்று அமர்ந்து இருக்கும் ராகு தனது திசையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாதகம் மற்றும் ஆயுள் ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கான விதி அமைப்பு இதை ஜாதகர் தனது மதிகொண்டு வெல்ல இறையருள் கருணைபுரியட்டும் வாழ்த்துகள்......

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக