செவ்வாய், 3 ஜூலை, 2018

ராகுகேது தோஷம் புத்திர பாக்கியத்தை தடைசெய்கிறதா ? ஆண் வாரிசு கிடைக்குமா ?


 கேள்வி :

 திருமண வாழ்க்கையில் இணைந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது, இதுவரை குழந்தைக்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியை தந்துவிட்டது, மருத்துவ சிகிச்சையும் பலன் தரவில்லை, எங்களுக்கு நல்ல ஆண் வாரிசு அமைய வாய்ப்பு உள்ளதா? சர்ப்ப தோஷம் எங்களுக்கு புத்திர பாக்கியத்தில் தடை செய்கிறதா? இதற்க்கு சரியான தீர்வுதான் என்ன ?


லக்கினம் : கன்னி
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம் 1ம் பாதம்

பதில் :

தங்களது சுய ஜாதகத்தில் நல்ல வாரிசு மற்றும் குழந்தை பாக்கியத்தை தரும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதுடன், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் தற்போழுது நடைபெறும் சூரியன் திசையும் தங்களுக்கு 4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்ட அயன சயன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எதிர்பாராத இன்னல்களையும், துன்பங்களையும் 4,8,12ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், சூரியன் திசையில் கேது புத்தி தங்களுக்கு 3,8ம் வீடுகள் பாதகம் மற்றும் விரைய ஸ்தான தொடர்பை பெற்று கடுமையான இன்னல்களை தருவது தங்களுக்கு உகந்ததல்ல, எனவே தங்களது சுய ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் கடுமையாக பாதிக்கப்பட்டு, நடைபெறும் சூரியன் திசையும் தங்களுக்கு ஜாதகம் இன்றி இருப்பது புத்திர பாக்கியத்தில் தடை தாமதங்களை வழங்குகிறது.

சாயா கிரகங்களான ராகுகேது தங்களது ஜாதகத்திற்கு தான் அமர்ந்த உயிர் உடலாகிய லக்கின ( கேது ) பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்வதும், களத்திர ஸ்தானமாகிய 7ம் பாவகத்தை ( ராகு ) 100% விகிதம் வலிமை இழக்க செய்வதும் முரண்பட்ட பலாபலன்களை வழங்கும், லக்கினத்தில் அமர்ந்த கேது தங்களுக்கு உடல் ஆரோக்கியம், மனநலம், தெளிந்த நல்லறிவு, யோக வாழ்க்கை, வளரும் சூழ்நிலையில் சிறப்பு, புகழ் வெற்றி அந்தஸ்து என்ற வகையில் நன்மைகளையும், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு தங்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் பொதுமக்கள் என்ற வகையில் இருந்து அதீத துன்பங்களை வாரி வழங்கும், எனவே சர்ப்ப தோஷம் தங்களது வாழ்க்கையில் புத்திர பாக்கியத்திற்கு தடையா அமையவில்லை, சுய ஜாதகத்தில் 5ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெற்றது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி கடுமையாக பாதிக்கப்பட்டதும், தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் காரணமாக அமைகிறது.

சந்திரன்,சனி மற்றும் புதன் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்கள் மட்டுமே தங்களுக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறது, இதில் புதன் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அதே வேளையில் 3,5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது மிகுந்த பாதிப்பை தரும், தங்களது ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் பாதிக்கப்பட்ட பாவக பலனையே ஏற்று நடத்துவதால் தங்களுக்கு இதுவரை புத்திர பாக்கியம் கிட்டவில்லை, எனவே தங்களது ஜாதகத்துடன் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தையும் தெளிவாக அறிந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுமா ? என்பதை உறுதி செய்யலாம், தம்பதியர் இருவரின் ஜாதகம் கொண்டு பாவக வலிமையை பற்றி தெளிவாக அறிந்துகொண்ட பிறகே தங்களது வினாவுக்கான பதில் தர இயலும் சகோதரி.

சரியான தீர்வு :

தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, இதுவே தங்களது இல்லற வாழ்க்கையில் புத்திர பாக்கியத்தை வழங்கவில்லை என்பதனால், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் எப்படிப்பட்ட வலிமையை பெற்று இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு ஓர் சரியான தீர்வை தர இயலும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மேற்கண்ட விஷயங்கள் வலிமை பெற்று இருப்பின் தங்களுக்கு நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டு, ஒருவேளை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பின், தாங்களும் தங்களது வாழ்க்கை துணையும் மருத்துவ ஆலோசணையை நாடி, நல்லதொரு குழந்தையை பெறுவதே சரியான தீர்வாக இருக்கும், " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக