ஞாயிறு, 1 ஜூலை, 2018

5ல் ராகு ஆண் வாரிசு அமைந்தது எப்படி ? எதிர்வரும் ராகு திசை தரும் பலாபலன்கள் என்ன ?


கேள்வி :

தங்களிடம் ஜாதக ஆலோசணை பெறும்முன், எனது ஜாதகத்தை பார்த்த அனைவரும் 5ல் ராகு இருப்பதால், கடுமையான புத்திர தோஷம் உள்ளதாகவும், குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது என்றனர், மேலும் ஆண் வாரிசு கிடையாது என்றனர், தங்களிடம் ஆலோசனை பெற்று தாங்கள் பரிந்துரை செய்த ஜாதகத்தை வாழ்க்கை துணையாக அமைத்துக்கொண்டேன், தற்போழுது ஆண் குழந்தை பிறந்து உள்ளது, 5ல் ராகு அமர்ந்தாள் புத்திர பாக்கியம் இல்லை என்பது பொய்யானதா? பிறந்த ஆண் குழந்தை வழியில் இருந்து ஏதாவது இன்னல்கள் வருமா ? ராகு திசை அடுத்து வர இருக்கின்றது, எனக்கும் எனது குழந்தைக்கும் எதிர்வரும் ராகு திசையில் ஏதாவது பாதிப்பை தருமா ? எதிர்காலம் எப்படி இருக்கும் ? தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றேன் .


லக்கினம் : கன்னி
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : பூரம் 3ம் பாதம்

அடிப்படையில் ஒருவரது சுய ஜாதகத்தில் 5ல் ராகு அமர்ந்து இருப்பதினால் மட்டுமே புத்திர பாக்கியத்தை தடை செய்யும் என்று கருதுவதும், அவருக்கு குழந்தை பிறக்காது என்று முடிவு செய்வதும் முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானது, மேற்கண்ட ஜாதகருக்கு 5ம் பாவகத்தில் ராகு அமர்ந்து சம்பந்தப்பட்ட பாவாகத்தை கடுமையாக பாதிப்பிற்கு ஆளாக்குவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி 12ம் வீடாக அமைந்து கடுமையாக பாதிக்கப்படுவதும் தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதிப்பின் தன்மை கடுமையாக உள்ளது என்பதே உண்மையானது, இருப்பினும் தங்களது சுய ஜாதகத்தில் பிறந்த நேரத்தின் அடிப்படையில் 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சம்பந்தப்பட்ட பாவக  வழியில் இருந்து வரும் இன்னல்களை யாவற்றையும் தவிர்த்து, 11ம் பாவக வழியிலான நன்மைகளை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், தங்களது சுய ஜாதகத்தில் 5ம் வீடு சர மண் தத்துவ ராசியில் 1 பாகையும் ஸ்திர காற்று ராசியில் 29 பாகைகளையும் கொண்டிருப்பது 5ம் பாவக வழியிலான அதிர்ஷ்ட பலன்களை மட்டும் தடை செய்யும், குல தெய்வ நிந்தனை மூலம் தங்களுக்கு சுப நிகழ்வுகளில் தடை தாமதங்களை தரும், இதுவே தங்களது திருமண தாமதத்திற்கும் காரணமாக அமைந்தது என்பது கவனிக்கத்தக்கது.

ராகு பகவானால் பாதிக்கப்பட்ட 5ம் பாவக பலனை தற்போழுது நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை ஏற்று நடத்தவில்லை என்பதனால் 5ம் பாவக  வழியில் இருந்து வரும் இன்னல்கள் யாவும் தங்களுக்கு நடைமுறைக்கு வரவில்லை, மேலும் தங்களுக்கு 5ம் பாவகம் ராகு பகவானால்  கடுமையாக பாதிக்கப்படுவது, தங்களது பூர்வீக ஜீவனத்தை வெகுவாக பாதித்து கல்வி காலம் முதல் தற்போழுது வரை பரதேச ஜீவனம் என்ற அமைப்பில் வெளியூர், வெளிநாடுகளிலேயே ஜீவனத்தை மேற்கொள்ள வைத்திருப்பதால், புத்திர பாக்கியத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை, தாங்கள்  வெளிநாட்டில் இருப்பது தங்களது 5ம் பாவக ராகு தரும் இன்னல்களில் இருந்து காத்துஅருள்கிறது, தங்களது ஜீவனம் பூர்வீகத்தில் இருந்து இருப்பின் ( வாய்ப்பு வெகு குறைவு காரணம் 5ம் பாவகம் ராகு பகவானால் பாதிக்கப்படுவது பூர்வீகத்தை விட்டு வெளியேற்றிவிடும் ) ஆண் வாரிசு அமைவது என்பது குதிரைக்கொம்பாகவே அமைந்து இருக்கும்.

சுய ஜாதகத்தில் ராகு கேது 5ல் அமர்ந்து வலுவாக பாதிப்பை பெறுவது சம்பந்த பட்ட ஜாதகருக்கு பரதேச ஜீவனத்தை தந்துவிடும் என்பதற்கு தங்களது ஜாதகமே நல்ல உதாரணம், ஒருவேளை தாங்கள் பூர்வீகத்தில் வலுக்கட்டாயமாக ஜீவித்து இருப்பின், தங்களுக்கு நல்ல கல்வி, தொழில், திருமணம் , வருமானம், குழந்தை பாக்கியம், பொருளாதார முன்னேற்றம் என யாதொரு நன்மைகளையும் அனுபவித்து இருக்க முடியாது என்பதே உண்மை, மேலும் ஒரு சிறு விஷயத்தை பெறுவதற்கு கூட பகிர்தன முயற்சிகளை எடுக்கவேண்டிய சூழ்நிலையை தந்து இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல் தங்களுக்கு அமைந்த வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் மிகுந்த வலிமையுடன் அமைந்தது, தங்களுக்கு வெகு சாதகமாக அமைந்தது, திருமணம் ஆனா உடனேயே புத்திர பாக்கியம் கிட்டியதுடன், நல்ல ஆண் வாரிசும் பிறந்தது வரவேற்கத்தக்கது, தங்களது ஜாதகத்தில் 5ம் வீடு ராகு பகவானால் பாதிக்கப்பட்ட போதிலும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் வீடு வலிமை பெற்று இருந்தது ஓர் சிறப்பு அம்சமாகும், மேலும் தாக்களுக்கு நடைபெற்ற செவ்வாய் திசை 5ம் பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருந்ததும், தாங்கள் வெளிநாட்டில் ஜீவனம் செய்து வருவதும் தங்களுக்கு நல்லொதொரு ஆண் வாரிசை நல்கியிருக்கிறது.

எதிர்வரும் ராகு திசை தங்களுக்கு 9ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் அதிர்ஷ்டகரமான யோக பலன்களை வாரி வழங்குவது மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ராகு திசையும் தங்களுக்கு யாதொரு பாதிப்பையும் தரவில்லை என்பதால் 9ம் பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை பெற தயார் நிலையில் இருப்பதே உசிதமானது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் 5ம் வீடு சாயா கிரகங்களான ராகுகேதுவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது அல்லது சுய ஜாதகத்தில் 5ம் வீடு 4,8,12ம் பாவக தொடர்பை பெறுவது, பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு பூர்வீக வழியில் இருந்து வரும் நன்மைகளை வெகுவாக தடுக்கும், மேலும் ஜாதகரின் சமயோசித அறிவு திறன், பூர்வீக சொத்து, குழந்தை பாக்கியம் போன்ற விஷயங்களை வெகுவாக பாதிக்கும், மேற்கண்ட அமைப்பை பெற்ற அன்பர்களுக்கு சரியான தீர்வு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் தேடிக்கொள்வது நல்லது இல்லை எனில், நமது பெரியவர்கள் சொல்லி வைத்த " பாடும் பட்டமாதிரி, வீடும் கெட்ட மாதிரி " என்ற முதுமொழிக்கு நிகரான வாழ்க்கையை தந்துவிடும் என்பதுடன், புத்திர பாக்கியத்தையும் வெகுவாக பாதிக்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக