திங்கள், 2 ஜூலை, 2018

தொழிலில் இடமாற்றம் உண்டா ? திருமணம் தாமதமாக காரணம் என்ன ? உயர்கல்வி பயில முயற்சி மேற்கொள்ளலாமா ?



அய்யா,

 தற்பொழுது செய்துவரும் பணியில் இடமாற்றம் உண்டா ? ஊதிய உயர்வு கிடைக்குமா? ஆய்வு கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாமா, அதற்க்கு உகந்த நேரமாக நிகழ்காலத்தை கருதலாமா? திருமண வாழ்க்கை எப்படி அமையும் ? மனதிற்க்கு இசைந்த இல்லற வாழ்க்கை துணை அமையுமா ? திருமணம் தாமதமாக காரணம் என்ன ? தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றேன்.


பதில் :

லக்கினம் : மேஷம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம் 

 நடைபெறும் குரு திசை தங்களுக்கு 3ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக திடீர் அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பணியில் ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் உண்டாகும், தீர்க்க ஆயுள் உண்டு, திருமணத்திற்கு பிறகான அதிர்ஷ்டத்தை தரும் என்பதால், திருமண முயற்சிகள் கைகூடும், தொட்டது அனைத்தும் துலங்கும், அதிர்ஷ்டத்தின் தாக்கம் திடீரென அதிகரிக்கும், எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கை உண்டாகும்.

தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி தங்களுக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, இது தங்களுக்கு லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து சிறப்புகளை வாரி வழங்கும், கல்விக்கான முயற்சிகள் நல்ல வெற்றியை தரும், உடல் நலம் மனஆரோக்கியம் அதிகரிக்கும், தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் தங்களின் வாழ்க்கையில் புதியதொரு உத்வேகத்தை தரும், சனி புத்தி 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று யோக பலனை தருவது சகல சுக போகங்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், வண்டி வாகன யோகம், புதிய தொழில் வாய்ப்புகள், திடீர் முன்னேற்றம், எதிர்பாராத கவுரவ பதவிகள், சிறந்த நிர்வாக திறனை போற்றும் விதமாக வரும் ஊதிய உயர்வு, புதிய தொழில் வாய்ப்புகள், புதிய மனிதர்கள் வழியில் இருந்து வரும் நம்பிக்கைகள் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

குரு திசை ஜாதகத்தில் தங்களுக்கு வீரிய ஸ்தான பலனை பரிபூர்ணமாக வழங்குவதுடன், குரு திசை சனி புத்தி தங்களுக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றும் யோக பலனை தருவது தங்களது வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையிலான  முன்னேற்றங்கள் வெகுவாக வந்துசேரும், தெய்வீக அனுக்கிரகத்தால் எதிர்ப்புகள் அனைத்தும் விலகி வெற்றிநடை போடும் சுபயோக நேரமிது, வாழ்த்துகள்.

திருமண வாழ்க்கை  சுய ஜாதகத்தில் சனி புத்தியில்  1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், மேற்கு திசையில் இருந்து வரும் வாழ்க்கை துணை தங்களுக்கு சிறந்த கணவராக அமைவார், மேலும் தங்களுடனான பாசம் அன்பு மாறாத இனிமையான இல்லற வாழ்க்கையை தருவார், குறைந்தது தங்களின் வாழ்க்கை துணை 100 கிமி தூரத்திற்கு அப்பால் இருந்து வருவதுடன், அவரது வீடு மேற்கு திசை வாயிற்படி கொண்டதாக அமைந்திருக்கும், களத்திர ஸ்தான அதிபதி சனி என்பதால் அடிமை தொழில் புரிபவராகவும், நிலையான வருமானத்தை கொண்டவராகவும் திகழ்வார், தனது அறிவுத்திறன் கொண்டு ஜீவன மேன்மையை பெரும் யோகத்தை ஜாதகர் பெற்று இருப்பார்.

திருமணம் தாமதமாக சுய ஜாதகத்தில் 2,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை தங்களுக்கு 2ம் வீடு வழியில் இருந்து தருவாதாலேயே திருமண வாழ்க்கை வெகு தாமதமாகிறது, கடந்த ராகு திசையும் தங்களுக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜீவன மேன்மையை மட்டுமே வாரி வழங்கிவிட்டது என்பது கவனிக்கத்தக்கது, தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக நன்மைகளை தருவதால் தங்களுக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரும் வாழ்த்துக்கள்.

தற்போழுது நடைபெறும் குரு திசையும், எதிர்வரும் சனி திசையும் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தருவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக குரு திசை தங்களுக்கு 3ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், எதிர்வரும் சனி திசை 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றும் சுபயோக பலாபலன்களை தருவது வரவேற்கத்தக்கது, எனவே தங்களது வாழ்க்கையில் சிறப்பான எதிர்கால நன்மைகள் நடைபெற உள்ளதால், அது சார்ந்த முன்னேற்ப்பாடுகளை செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுக.

தொழில்,திருமணம்,கல்வி,குழந்தை பாக்கியம், அதீத பொருளாதர வளர்ச்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் தங்களின் வாழ்க்கை புது பாதையில் பயணிக்க இருப்பது கவனிக்கத்தக்கது, எனவே சரியான வாழ்க்கை துணையை மட்டும் உடனடியாக தேர்வு செய்து நலம் பெறுங்கள்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பை ஏற்று நடத்தும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் யாவும் சிறப்பான சுபயோக  பலாபலன்களையே தரும் என்பதால், நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி தங்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி  மிக துல்லியமாக அறிந்துவைத்திருப்பது மிக மிக அவசியமாகிறது என்பதை கருத்தில் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக