புதன், 25 ஜூலை, 2018

சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களின் வலிமை, ராகுகேதுவினால் ஜாதகர் பெரும் நன்மை !

 

 சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் முற்பகுதியில் சிறு சிறு இன்னல்களை தந்த போதிலும் ( வளரும் சூழ்நிலை பாதிப்பு, பெற்றோரை விட்டு பிரிந்து வாழும் சூழ்நிலை, கல்வியில் தடை, தொழில் வழியில் தடை, வாழ்க்கை துணையை தேடுதலில் இன்னல்கள், உடல் மனம் பாதிக்கும் தன்மை என்ற வகையில் ) பிற்பகுதியில் அபரிவிதமான யோக வாழ்க்கையை வழங்குவது வரவேற்கத்தக்க விஷயமாகும், மேலும் நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது, சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த நன்மையான பலாபலன்களையே வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, பொதுவாக சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு புலனுக்கு அப்பாற்பட்ட அறிவுத்திறனை வாரி வழங்கிவிடுகிறது, ஜாதகர் சுய ஒழுக்கம் மட்டும் கட்டுப்பாட்டை பேணும் தன்மை கொண்டவராக இருப்பின், அவரது வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யம் மிக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அன்பர்களே! இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சிகம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம்

இந்த விருச்சிக லக்கின ஜாதகருக்கு 5ல் ராகுவும், 11ல் கேதுவும் அமர்ந்திருப்பது மேலோட்டமாக காணும் பொழுது 5ல் அமர்ந்த ராகு புத்திர தோஷத்தை தரும் என்று  கருதக்கூடும், பாவக வழியிலான ஆய்வில் ராகு அமர்ந்த 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த வலிமை பெற்ற அமைப்பாகும், மேலும் ஜாதகரின் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான மீனராசியில் 8பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் 21 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் மனம் மிக வேகமாக சஞ்சரிக்கு வல்லமை கொண்டது என்பதுடன் ஜாதகரின் மனதில் எண்ணிய காரியங்களை மிக விரைவாக முடிக்கும் வல்லமையை தரும், தனது சுய அறிவு திறன் மற்றும் அதி புத்திசாலித்தனம் இரண்டு ஜாதகருக்கு சரியான நேரத்தில் நல்லொதொரு பலாபலன்களை வாரி வழங்கும், ஜாதகரின் குல தெய்வ ஆசி செயற்கரிய காரியங்களை மிக எளிதாக செய்துமுடிக்கும் வல்லமையை தரும், நல்லோர் சேர்க்கையும், ஆன்மீக பெரியோரின் ஆசியும் ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க எதிர்காலத்தை வாரி வழங்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தருவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியை வாரி வழங்கும்.

ராகு பகவானின் அமர்வு என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அயன சயன ஸ்தானமாகவும், ஜென்ம ஸ்தானமாகவும் அமைவது, ஜாதகரின் நல்லறிவும் ஆராய்ச்சி மனப்பக்குவமும் சிறப்பு மிக்க எதிர்காலத்தை அமைத்து தரும் மிதமிஞ்சிய நல்ல வாய்ப்புகளையே உருவாக்கி தரும், புதிய கண்டுபிடிப்புகள் அல்லது புதிய முயற்சிகளில் நல்லதோர் எதிர்காலத்தை தரும், ஜாதகரின் மனமும் உடலும் மிக சிறப்பாக இயங்கும் என்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை அற்றவர்கள்  ஓர்  காரியத்தை செயல்வடிவமாக பார்க்க பகிர்தனா கஷ்டங்களை சந்திக்கும் பொழுது சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெற்ற அன்பர்கள் மிக எளிதாக ஓர் செயலை செய்து செயல்வடிவம் காண்பார்கள், தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும்  ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும், எதையும் சாதிக்கும் வலிமையை  ஜாதகருக்கு  பரிபூர்ணமாக  நல்கும் என்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ராகு 5ல் அமர்ந்து வலிமை பெறுவதும், 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுபயோக வாழ்க்கையை தருவதில் யாதொரு தடைகளையும் வழங்காது என்பது கவனிக்கத்தக்கது, தனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஜாதகர் 5ம் பாவக வழியில் செலுத்த ஆரம்பிக்கும் பொழுது 5ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான்  வழங்கும் சுபயோக வாழ்க்கையை யாதொரு தடையும் இன்றி  சுவீகரிக்கலாம்.

சம வீடான 11ல் கேது அமர்வது ஜாதகருக்கான அதிர்ஷ்டத்தை பரிபூர்ணமாக பெரும் வாய்ப்புகளை  வாரி வழங்கும், ஜாதகருக்கான அதிர்ஷ்டம் என்பது ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் வழியில் இருந்தும், சத்ருக்கள் வழியில் இருந்தும் வரக்கூடும் என்பதுடன், உபய மண் தத்துவம் சார்ந்த அமைப்பில் இருந்தும் சர காற்று தத்துவ அமைப்பில் இருந்தும் வந்து சேரும், மேலும் எதிர்பாலினம் நண்பர்கள், கூட்டாளிகள் வெளியூர் அல்லது வெளிநாடு என்ற அமைப்பில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை நல்கும், கேது பகவானின் வலிமை ஜாதகருக்கு அபரிவித நன்மைகளை சிந்தனை ஆற்றல் வழியில் இருந்து  வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, குறிப்பாக வியாபாரம் சார்ந்த அமைப்பில் ஜாதகரின் முன்னேற்றம் தன்னிறைவாக அமையும் அல்லது வெளிநாடுகளிலான ஜீவனம் ஜாதகருக்கு மிதமிஞ்சிய அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு 11ல் கேது வலிமை பெற்று அமர்வதுடன், சுய ஜாதகத்தில் பாவக  வழியிலான தொடர்பு என்பது 11ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது நிறைவான சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்கும், நல்ல குணமும் ஜாதகரின் செயல்பாடுகளும் சமூக அந்தஸ்த்தை குறுகிய காலத்தில் பெற்றுத்தரும், ஜாதகரின் தன்னம்பிக்கை லட்சியம், மனோதிடம் போன்றவை 11ம் பாவக வழியில் இருந்து சில எதிர்பாராத நன்மைகளை தருவதுடன் சிறந்தவற்றை தேர்ந்துஎடுக்கும் வல்லமையை  தரும், வண்டிவாகன யோகம், வீடு நிலம் சார்ந்த தொழில்கள் வழியில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும் மிதமிஞ்சிய லாபங்கள் வந்து சேர்வதுடன் தொழில் விருத்தியும் அபரிவிதமாக அமையும், ஜாதகரின் லாப ஸ்தானத்தில் பெரும்பகுதி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியிலேயே வியாபித்து நிற்பது ( 21 பாகைகள் ) ஜாதகர் வெளிநாடுகளில் மிதமிஞ்சிய  அதிர்ஷ்ட வாழ்க்கையை பெறுவார் என்பதை கட்டியம் கூறுகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்திற்க்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பின், ஜாதகருக்கு விவரிக்க இயலாத சில தனி திறமைகளை கொண்டவராக திகழ்வார், தன்னிடம் உள்ள தனித்திறனை கண்டுணர்ந்து அதில் ஆர்வம் காட்டுவது ஜாதகருக்கான வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், பிரபல்ய யோகமும், உலகப்புகழ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை இந்த கட்டுரையில் பதிவு செய்ய "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக