செவ்வாய், 17 ஜூலை, 2018

ஜாதக ஆலோசணை : திருமணம்,தொழில்,பொருளாதரம் எப்படி அமையும் ?

  
 சுபயோகம் மிக்க ஓர் ஜாதகத்தை ஆய்வு செய்வது என்பதே அலாதியான மகிழ்வை தரக்கூடிய நிகழ்வுதான் என்றால் அது மிகையில்லை, தங்களது ஜாதகமும் அதுபோன்று லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் மிகவும் வலிமை மிக்கதாக இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், தங்களது ஜாதகம் வெகுவாக வலிமை பெற்று இருந்த போதிலும் திருமணம், தொழில், போன்றவை சிறப்பாக அமையவில்லை என்பதற்கான காரணத்தை தங்களது ஜாதக ஆய்வு மூலம் மிக தெளிவாக அறிந்துகொள்ள முற்படுவோம் அன்பரே, தங்களது ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் வழியில் இருந்து பெரும் நன்மைகளை பற்றி தெளிவாக காண்போம், நடைமுறையில் உள்ள திசாபுத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் தரும் பலாபலன்களையும், இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : தனுசு
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம்

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து சகல  சௌபாக்கியங்களையும் சுய உழைப்பின் மூலம் சுவீகரிக்கும் வல்லமையை தரும், அடிப்படையில் ஜாதகரின் நல்ல குணமும், வளரும் சூழ்நிலையில்  மற்றவர்கள் மூலம் பெரும் சிறப்புகளும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்துஇருக்கும், வண்டிவாகன யோகம், சொத்து சுக சேர்க்கை, இடம் வீடு, நிலம் சார்ந்த வரவுகள் ஜாதகருக்கு தேடிவரும், உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் ஜாதகருக்கு சிறப்பாக அமையும், செய்யும் செய்யும் செயல்களில் வெற்றியும் புகழும் உண்டாகும், தெய்வீக அனுகிரகம் ஜாதகருக்கு புதுவித உத்வேகத்தையும், சரியான வாழ்க்கை பாதையையும் அமைத்துத்தரும், ஜாதகரின் எண்ணமும் செயலும் நேர்மை நிறைந்தததாகவும், ஒழுக்கத்தை கடைபிடிக்கும் விதமாகவும் அமைந்திருக்கும், ஜாதகரின் பரோஉபகார நடவடிக்கைகள் பொதுமக்கள் ஆதரவையும், அவர்கள் வழியிலான முன்னேற்றங்களையும் தன்னிறைவாக வாரி வழங்கும், ஜாதகர் எந்த சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றிகரமானமனிதராக திகழ்வார் என்பதுடன் சுக போகமிக்க யோக  வாழ்க்கையை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

3ம் பாவக வழியில் இருந்து வண்டி வாகன தொழில், வீடு நிலம் இடம் சார்ந்த தரகு வியாபாரத்தில்  பரிபூர்ண வெற்றிகளை தரும், சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் பெரிய சொத்துக்களை வாங்கும் யோகம் பெற்றவர், தைரியமும் தன்னம்பிக்கையும் ஜாதகரின் வாழ்க்கையில் பலவித சுபயோகங்களை வாரி வழங்கும், தைரியமிக்க முடிவுகளை வெகு விரைவாக மேற்கொண்டு அதன் வழியில் வரும் நன்மையை சுவீகரிக்கும் யோகம் உண்டாகும், கமிஷன், ஏஜென்சி, தரகு தொழில்கள் ஜாதகருக்கு அபரிவித வளர்ச்சியை தரும், குறிப்பாக ஏஜென்சி தொழிலில் ஜாதகருக்கு எதிர்பாராத லாபங்களும் அதிர்ஷ்டங்களும் தேடிவரும், எதையும் துணிந்து செய்து வெற்றியை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் யோகமிக்கவர், சாஸ்திர ஞானமும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் புகழ் மிக்க பொறுப்புகள் தேடிவரும், தனது வாழ்க்கையை சிறப்பான வெற்றிப்பாதையில் நடைபோட செய்யும் சூட்ஷமம் தெரிந்தவர் என்பது ஜாதகருக்கான சிறப்பு இயல்புகள்.

4ம் பாவக வழியில் இருந்து சொத்து, இடம், வீடு வண்டி வாகனம் போன்றவற்றில் இருந்து ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் , பெரிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு, நல்ல குணமும், பரந்த மனப்பக்குவமும் ஜாதகருக்கு எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், பெற்றோர் வழியிலான ஆசிர்வாதம் ஜாதகருக்கு  நல்ல முன்னேற்றத்தையும், சிறப்பு மிக்க பொறுப்புகளையும் தேடித்தரும், வலிமை மிக்க பதவிகள் ஜாதகரை தேடிவரும், எதிர்பார்ப்புகள் யாவும் ஜாதகருக்கு நிறைவேறும், மனதில் நினைத்த காரியங்கள் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும், சுகபோகம் மிக்க யோக வாழ்க்கையை ஜாதகர் தன்னிறைவாக பெறுவதற்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும்  இளம் வயதிலேயே உண்டாகும், ஜாதகரின் மனவலிமை மற்றும் மனஉறுதி  சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத்தரும், தனது பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் வண்டிவாகனங்கள் ஜாதகருக்கு தொடர் வருமான வாய்ப்பை நல்குவதுடன், பொருளாதார தன்னிறைவை தரும், அனைவரிடமும் அனுசரித்து செல்லும் குணம் ஜாதகரின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜாதகர் ஜீவனம் செய்வது  ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை முழுவதும் சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்பாக கருதலாம், 2ம் பாவக வழியில் இருந்து வாக்கு வன்மையினால் அதிர்ஷ்டம் உண்டாகும், நல்ல நண்பர்கள் மாற்று கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தரும், பேச்சு திறன் மூலம் வாழ்க்கையில் ஜீவன மேன்மை அடையும் தன்மையை தரும், பொருளாதர வசதி வாய்ப்புகள் பரிபூர்ணமாக  அமையும் செல்வச்செழிப்பு மூலம் வாழ்க்கையில் தன்னிறைவான யோக வாழ்க்கையை பெறுவார், ஏதாவது ஒருவழியில் இருந்து வருமானம் ஜாதகருக்கு வந்துகொண்டே இருக்கும், திருமணத்திற்கு பிறகான குடும்ப வாழ்க்கையில் ஜாதகருக்கு அதிர்ஷ்டம்  வெகுவாக அதிகரிக்கும், வாழ்க்கை துணை வழியிலான யோகங்களை இல்லற வாழ்க்கையில் ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார், அபரிவித தனசேர்க்கையை பெறுவதற்கான வல்லமையை தரும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்வீகத்திலான வளர்ச்சி என்பது 100% விகிதம் அமையும், சமயோசித புத்திசாலித்தனமும், தெளிவான சிந்தனையும் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும், எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார், லட்டரியோகம், புதிசாலிதனத்தல் ஆதாயம், எப்பொழுதும் மகிழ்சியுடன் வாழ்வதற்கான வாய்ப்பு, குழந்தைகள் மனைவி குடும்பத்துடன் சகல சௌபாக்கியங்களையும் பெற்று இனிமையாக வாழும் தன்மையை தரும், ஜாதகரின் நுண்ணறிவு பிரகாசிக்கும், குல தெய்வ ஆசியின் மூலம் ஜாதகர் மேற்கொள்ளும் சுபகாரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறும், புதிய சிந்தனை, புதிய வாய்ப்புகள் ஜாதகருக்கு தேடி வரும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்துவரும் பொருட்கள் மூலம் நல்ல லாபம்உண்டாகும், ஜாதகரின் அறிவு திறன் பூர்வீகத்தில் ஜீவித்து இருக்கும் வரை முழுவீச்சில் செயல்படும், அனைத்தையும் வெற்றிகரமாக பெரும் யோகத்தை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நீடித்த அதிர்ஷ்டம் உள்ளவர் என்பதுடன், நல்ல மனமும் சிறந்த குணமும் கொண்டவர், தனது முற்போக்கு சிந்தனையின் மூலம் வாழ்க்கையில் வியக்கத்தகு சாதனைகளை சாதிக்கும் யோகம் பெற்றவர், மிகுந்த அதிர்ஷ்டம், அனைத்திலும் லாபம், நல்ல குணம் போன்றவை ஜாதகருக்கு விரைவான மக்கள் ஆதரவை தரும், ஜாதகரின் முன்னேற்றம் என்பது பொதுமக்கள் மற்றும் எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து வரும் என்பது கவனிக்கத்தக்கது, பொதுமக்கள் தொடர்பு சார்ந்த ஜீவனத்தை மேற்கொள்வது ஜாதகருக்கான முன்னேற்றத்தை பன்மடங்கு அதிகரிக்கும், ஜாதகரின் மனதில் உள்ள லட்சியங்கள், ஆசைகள்  யாவும் பரிபூர்ணமாக நடைமுறைக்கு வரும், வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு ஜாதகருக்கு மிகப்பெரிய அந்தஸ்த்தை வாரி வழங்கும்.

6,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து பயணங்கள் மூலம் லாபம் உண்டாகும், சமாதான பிரியர், தெய்வீக அனுக்கிரகம் பெற்றவர், எதிரிகளையும் கட்டியாலும் வல்லமையை தரும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக விளங்கும், மதம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றியை தரும், உடல் நலம் மனநலம் சிறந்து விளங்கும், விரைவாக இன்னல்களில் இருந்து விடுபடும் தன்மையை தரும், வாழ்க்கை துணையை, குடும்பத்தை கவனமாக காக்கும் தன்மையை தரும், எதிர்ப்புகளை சமாளித்து வெற்றிகொள்ளும் தன்மையை தரும் அடிக்கடி ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் யோகத்தை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அறிவுத்திறன் வெகு பிரகாசமான எதிர்காலத்தை தரும், நல்ல ஆன்மீக பெரியோர்களின்  ஆசீர்வாதம் ஜாதகரின் யோக வாழ்க்கையை உறுதி செய்யும், சாஸ்திர ஞானம், கலைகளில் தேர்ச்சி, பெருந்தன்மையான குணம், பெரிய மனிதர்களின் ஆதரவு, உயரிய பதவிகள் என ஜாதகருக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து சுபயோக பலன்களே நடைமுறைக்கு வரும், பொது வாழ்க்கையில் நற்பெயரும், சமூக அந்தஸ்தும் தேடி வரும், பயணங்களில் விருப்பம், அறிவாளி, தெய்வீக அனுபவம், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் ஆதித ஆர்வம், புதுவித முயற்சிகளில் வெற்றி, பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகத்தை தரும், ஜாதகரின் அறிவு திறன் பல அன்பர்களுக்கு நல்லொதொரு வாழ்க்கையை அமைத்துத்தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெளிநாடுகளில் இருந்து வரும் யோகத்தை முழுவதுமாக சுவீகரிக்கும் வல்லமையை தரும், பயணங்கள் மூலம் நல்ல லாபத்தையும், உல்லாசம் மிக்க யோக வாழ்க்கையையும் சுவீகரிக்கும் வலிமையை தரும், தொழில் மற்றும் இருப்பிடத்தை மாற்றுவதன் மூலம் அதீத நன்மைகளை ஜாதகர் பெறுவார், பிறவியற்ற நிலையை அடைவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும், மனம் ஒருநிலைப்படும், ஆன்மீக பெரியோர்கள் ஆசிர்வாதம் ஜாதகருக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை பெற்று தரும், இல்லற வாழ்க்கையில் திருப்தியும், போதுமென்ற மனமும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை பெற்று தரும்.

7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணத்தை தரும், இருப்பினும் நல்ல அந்தஸ்து உள்ள வாழ்க்கை துணையை தரும், நல்ல நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய அந்தஸ்தை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார், அரசியலில் வெற்றியும் உயரிய பதவிகளை அலங்கரிக்கும் யோகமும் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெறுவார், வியாபாரம் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை தரும், சமூகத்தில் மதிப்பு மிக்க மனிதராக ஜாதகர் விளங்குவார், பொது வாழ்க்கையில் வெற்றி உண்டாகும், திருமணத்திற்கு பிறகான அதிர்ஷ்ட வாழ்க்கை ஜாதகருக்கு மிகவும் அபரிவிதமாக அமையும், பொதுமக்கள் ஆதரவு ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். மிகசிறந்த வியாபாரியாக ஜாதகர் திகழ்வார், எதிர்பார்ப்புகள் யாவும் ஜாதகருக்கு பரிபூரணமாக நிறைவேறும்.

10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், நல்ல தொழில் முன்னேற்றம், செய்யும் சுய தொழில் மூலம் அபரிவித லாபங்கள், புதிய வாய்ப்புகள் , தன்னிறைவான பொருளாதரா நன்மைகளை ஜாதகர் பரிபூரணமாக பெரும் யோகம், கவுரவம் மிக்க  பதவிகள், சுய அந்தஸ்து, பல தொழில் செய்யும் வாய்ப்பு என்ற வகையில் சிறப்புகளை தரும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியான கன்னியில் 10 பாகைகளையும், 7ம் ராசியான துலாமில் 20 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது, ஜாதகருக்கு ஜீவனம் என்பது உபய மண் தத்துவ அமைப்பிலும் சர காற்று தத்துவம் சார்ந்த அமைப்பிலும் சிறப்பாக அமையும், உதாரணமாக உணவு பொருட்கள் சார்ந்த தொழில்கள், விவசாய விளைபொருட்கள், தானிய வியாபாரம், வண்டி வாகன உபகரண பொருட்கள், தொழில் நுட்பம் சார்ந்த உபகரண பொருட்கள் வழியில் இருந்தும், சர காற்று ராசியை  குறிக்கும், தரகு மற்றும் கமிஷன் வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள், தனது அறிவு திறன் கொண்டு முதலீடு இல்லாமல் செய்யும் அனைத்து தொழில்களும் ஜாதகருக்கு மிகவும் பொருத்தமாக அமையும், அல்லது வெகுஜன மக்கள் விரும்பு பொருட்களை வியாபாரமாக செய்வதன் மூலம் ஜாதகருக்கு சிறந்த தொழில் முன்னேற்றம் உண்டாகும், ஏஜென்சி தொழில் மூலம் நல்ல லாபம் கிட்டும், பிரபல்ய யோகம் உண்டு என்பதால் ஜாதகர் ஏதாவது வியாபாரம் செய்வது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும் என்ற போதிலும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, குறிப்பாக ஜாதகர் பாதுகாப்பான பயன்களை மேற்கொள்வது நல்லது, ஜாதகருக்கு வரும் திடீர் இழப்புகள் யாவும் ஜாதகரின் மனம்போன போக்கில் செல்வாதாலேயே ஏற்படும், மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள் யாவும் திடீர் இழப்பை தருவதுடன், ஜாதகரின் முன்னேற்றத்தையும் வெகுவாக தடுக்கும், ஜாதகரின் ஆயுள் ஸ்தானம் கடக ராசியில் 15 பாகைகளையும் சிம்ம ராசியில் 17 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகருக்கு மனக்குழப்பத்தையும், உறுதியற்ற தன்மையால் ஏற்படும் இழப்பையும் அதிகரிக்கும், தெளிவில்லாமல் செய்யும் காரியங்கள் யாவும் ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக ஜாதகரின் சுகபோக வாழ்ககையை வெகுவாக பாதிக்கும், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் யாவும் ஜாதகருக்கு பெரும் இன்னல்களையே ஏற்படுத்தும், சுய கட்டுப்பாடு இழப்பது, முரண் பட்ட வாழ்க்கையை தேர்வு செய்வது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்கள் யாவையும் " யோக பங்கம் " என்ற நிலைக்கு ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்க.

மேற்கண்ட ஜாதகருக்கு ஆயுள் ஸ்தானத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்பதுடன் சுய ஜாதகம் வலிமை பெற்றுள்ளது என்பதை மிக துல்லியமாக கூறலாம் ஆனால் விதியின் தன்மை வேறுவிதமாக உள்ளது ஜாதகருக்கு  சுய ஜாதகத்தில் உள்ள யோக பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமையை வெகுவாக பாதிக்கிறது, ஜாதகரின் இளமை காலத்தில் அதாவது ( 12/07/1992 முதல் 12/07/2010 வரை ) நடைபெற்ற ராகு திசை ஜாதகருக்கு  8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் வலிமை இழந்த ஆயுள் ஸ்தான பலனை தந்ததும், ஜாதகர் தனது பூர்வீகத்தில் இருந்து வெகு தொலைவு சென்று ஜீவனத்தை தேடியதும், ஜாதகத்தில் யோகம் இருந்தும் அதை சுவீகரிக்க இயலாத சூழ்நிலையை உருவாக்கியது.

 தற்போழுது நடைமுறையில் குரு திசை ( 12/07/2010 முதல் 12/07/2026 வரை ) ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, மேலும் ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவனம் மேற்கொண்டு வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெற " ஜோதிடதீபம் " தனது அறிவுரைகளை வழங்குகிறது, குறிப்பாக ஜாதகரின் தொழில் பூர்வீகத்தில் அமைவது ஜாதகருக்கான முன்னேற்றத்தை பன்மடங்கு அதிகரிக்கும், பொருளாதர ரீதியான முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு வெகு அற்புதமாக அமையும், ஜாதகர் 2,5,11ம் பாவக வழியில் இருந்து நன்மைகளை சுவீகரிக்க  ஏதுவான சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்வது நல்லது, மேலும் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி ( 25/05/2018 முதல் 23/01/2021 வரை ) ஜாதகருக்கு ஏக காலத்தில் 7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று யோக பலன்களை தருவது, ஜாதகருக்கு திருமணத்திற்க்கான முயற்சியில் நல்ல வெற்றியையும், மனதிற்கு இசைந்த வாழ்க்கை துணையையும் தேடித்தரும் என்பதுடன், கூட்டு முயற்சியில் நல்லதோர் தொழில் வாய்ப்பையும் நல்கும், குரு திசை சுக்கிரன் புத்தி ஜாதகருக்கு மிகவும் சாதகமாக இருப்பதை சுவீகரிக்க, ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவிப்பதை உறுதிசெய்துகொள்வது நல்லது வாழ்த்துகள் அன்பரே!

எதிர்வரும் சனி திசை தரும் பலாபலன்கள் : ( 12/07/2026 முதல் 12/07/2045 )

எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலாபலன்களை ஜீவன ஸ்தான வழியில் இருந்து தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும் ஜாதகர் எதிர்வரும் சனி திசை காலத்தில் தொழில் ரீதியான விருத்தியை தன்னிறைவாக பெறுவார் என்பதுடன், ஜாதகருக்கான யோக வாழ்க்கையை தற்போழுது  நடைபெறும் குரு திசையும், எதிர்வரும் சனி திசையும் உறுதி செய்வது வரவேற்கத்தக்கது, வாழ்த்துக்கள் அன்பரே !

குறிப்பு :

சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட ஆயுள் ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுக.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக