திங்கள், 19 செப்டம்பர், 2022

மனையடி சாஸ்த்திரம் - குடும்ப தலைவன் மற்றும் ஆண் வாரிசை பாதிக்கும் தென்மேற்கு !

  

 தமிழர்களுக்கான மனையடி சாஸ்திரம் என்பது அவர்களது நிம்மதி மற்றும் இன்பகரமான இல்வாழ்க்கையை 100% விகிதம் சிறப்பிக்கும் வல்லமை பெற்றது, இதில் ஒரு குடும்ப தலைவனின் மற்றும் ஆண் வாரிசு இருவரின் வெற்றிகரமான யோக வாழ்க்கையை உறுதிப்படுத்தும் இடமானது தென்மேற்கு பகுதியாகும், இந்த பாகம் சிறப்பாக அமையும் பொழுது, குடும்ப தலைவனின் பொருளாதார முன்னேற்றம், சுயஒழுக்கம், குடும்பத்தை கட்டிக்காக்கும் வல்லமை, நிலையான வருமானம், பேராண்மை, தெய்வீக அனுகூலம், குலதெய்வ ஆசீர்வாதம், நல்லதொரு யோகமிக்க ஆண் வாரிசை பெரும் தன்மை, தெய்வீக சிந்தனை, கவுரவ பதவிகள், குடும்ப உறுப்பினர்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் வல்லமை, சுபகாரியங்களை முன்னின்று நடத்தும் யோகம், பொருளாதார தன்னிறைவு, நீண்ட ஆயுள், சிறந்த உடல் ஆரோக்கியம், கல்வி கேள்விகளில் தேர்ச்சி, நல்லறிவு, நிறைவான செல்வவளம், பொது வாழ்க்கையில் வெற்றி, போட்டி பந்தயங்களில் தேர்ச்சி, எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றிமேல் வெற்றி, வல்லமை மிக்க இனிமையான பேச்சு திறன், அரசியல் யோகம், வெளிநாடு வெளியூர் பயணம் மூலம் சுபயோகங்கள், மனதிற்கு உகந்த நல்ல இல்லற வாழ்க்கை துணை, பொது வாழ்க்கையில் புகழ் பெரும் யோகம், எதிர்பாராத அதிர்ஷ்டங்கள், தன்னம்பிக்கை புத்துணர்வு, புதிய முயற்சிகள், புதிய சிந்தனைகள் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் வல்லமையை தரும், சுய ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி பெற்று சம்பந்தப்பட்ட குடும்ப தலைவனுக்கு அல்லது ஆண் வாரிசுக்கு சிறப்பான யோக வாழ்க்கையை நல்கும்.


 தென்மேற்கு பகுதி பாதிக்கப்படும் பொழுது சம்பத்தப்பட்ட குடும்ப தலைவனும் ஆண்வாரிசும் கடுமையாக பாதிக்கப்படுவர் உடல் நலம் வெகுவாக பாதிக்கும், கல்வியில் தடை உண்டாகும், ஆண் வாரிசு அற்ற துர்பாக்கிய நிலையை தரும், ஆண்வாரிசு இருப்பின் அவரது வளரும் சூழ்நிலை பாதிக்கும் உடல் மனம் இரண்டும் கடுமையாக பாதிக்கப்படும், சிந்தனை திறன் குறையும், அறிவு சார்ந்த விஷயங்கள் யாவும் பாதிக்கப்படும், தெய்வீக அனுக்கிரகம் அற்று ஒழுக்கக்கேட்டை தரும், குடும்ப தலைவனின் சுய ஒழுக்கம் பாதிக்கும், குடும்ப வாழ்க்கை கேள்விக்குறியாகும், கற்ற கல்வி பயனற்று போக்கும், தேர்ச்சி பெற்ற கலை ஜாதகனுக்கு பயன்தராது முரட்டு தனமும் மூர்க்கத்தனம் மேலோங்கி தனது வாழ்க்கைக்கு தானே தீவினையை தேடிக்கொள்வார், முரண்பட்ட தாம்பத்திய வாழ்க்கையை ஏற்று மிகப்பெரிய பொருளாதர சீர்குலைவை குடும்ப தலைவர் மற்றும் வாரிசுகள் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் வருமானம் வந்த போதிலும் யாவும் வீண் விரயமாகும், ஆண் வாரிசு அமைவது என்பது குதிரை கொம்பாக அமையும், குடும்பத்தில் நிம்மதி கெடும், உடல் நலம் கடுமையாக பாதிக்கும், குடும்ப தலைவனின் உடல் நலமும் மனநலமும் வெகுவாக பாதிக்கும், சந்ததி அற்ற  நிலையையும், விழிப்புணர்வு அற்ற போதையான மனோ நிலையையும் குடும்ப தலைவனுக்கும் ஏற்படுத்தும் சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பின் ஓரளவு நலம் உண்டாகும் இல்லையெனில் இவரோடு சந்ததி முடிவுக்கு வரும், சமுதாயத்தில் குடும்ப தலைவனுக்கான தகுதியை இழந்து வீண் அவப்பெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும் என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கான தீர்வு என்பது குடும்ப தலைவரின் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு மனையடி சாஸ்திரம் அறிவுறுத்தும் சிறு சிறு மாற்றங்களை செய்து குடும்ப தலைவன் மற்றும் ஆண் வாரிசின் சுபயோக வாழ்க்கையை உறுதி செய்ய முடியும், சுய ஜாதகம் வலிமை அற்ற நிலையிலும் நாம் குடியிருக்கும் வீட்டில் தென்மேற்கு பகுதி சிறப்பாக இருந்தால் குடும்ப தலைவன் மற்றும் வாரிசுகளின்  முன்னேற்றம் என்பது வெகு அற்புதமான சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்கும், சந்ததி என்பது வாழையடி வாழையாக தழைத்து ஓங்கி நிற்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
09443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக