சனி, 10 செப்டம்பர், 2022

களத்திரகாரகன் சுக்கிரதிசை திருமண தடையை தருவது ஏன் ?



கேள்வி :

களத்திரகாரகன் சுக்கிரதிசை திருமண தடையை தருவது ஏன் ? கடந்த ஐந்து வருடங்களாக திருமண முயற்சி செய்துகொண்டு இருக்கின்றோம் அனைத்திலும் தோல்வி, சுக்கிரன் திசை ஆரம்பித்தவுடன் திருமணம் நடக்கும் என்றனர் ஆனால் யாதொரு பலனும் நடைபெறவில்லை, காரணம் என்ன? தீர்வு என்ன?


பதில் :

லக்கினம் : மீனம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 2ம் பாதம் 

 பொதுவாக நவகிரகங்களின் திசா புத்தி தனிப்பட்ட முறையிலான நன்மை தீமை பலாபலன்களை தரும் என்று கருதுவது சுய ஜாதக வலிமை சார்ந்த நிலையை கருத்தில் கொள்ளாமல் கூறப்படும் கற்பனை கதைகளே என்றால் அது  மிகையாகாது, ஒருவரது சுய ஜாதகத்தில் சுப கிரகம் என்றாலும் சரி, அசுப கிரகம் என்றாலும் சரி தனிப்பட்ட தன்னமையில் நன்மை தீமைகளை வழங்காது என்பதை  அனைத்து அன்பு நேயர்களுக்கு நினைவில் நிறுத்துவது அவசியமானது, சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் பலாபலன்களையே நடைமுறைப்படுத்தும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அசுப கிரகத்தின் திசையும் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து நன்மைகளை வாரி வழங்கும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் சுபக்கிரகத்தின் திசா புத்தி சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களையும் வாரி வழங்கும்.

 எனவே நமக்கு நடைபெறும் நவக்கிரகத்தின் திசா புத்தி எந்த பாவக பலனை ஏற்று நடத்தும் என்பதை கருத்தில் கொண்டு பலன் காண முற்படுவதே சால சிறந்தது, அந்த வகையில் அன்பு நேயர் தங்களின் சுய ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் உள்ள சுக்ர திசை தரும் பலன் என்ன ? என்பதை கருத்தில் கொண்டு பார்ப்போம்.

 சுக்ர திசை ( 21/12/2018 முதல் 21/12/2038 வரை ) நடைமுறையில் உள்ளது, நடைபெறும் சுக்ர திசை தரும் பலன் என்பது தங்களுக்கு உண்மையில் மிக சிறப்பான வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் ஆகும், சுக்கிரன் தனது திசையில் 1,3,6 ஆகி வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜென்ம லக்கின வழியில் இருந்து உடல் நலம் மனநலம், வெற்றி புகழ் கீர்த்தி, எதிர்பார்ப்புகள் நிறைவேறுதல், அறிவார்ந்த முயற்சிகள் பலிதம் பெறுதல் என்ற நிலையில் சுபயோகங்களை தன்னிறைவாக வழங்குகிறது.

மூன்றாம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகள் வெற்றி, லட்ச்சியங்களை அடைதல், ஆசைகள் நிறைவேறுவது, கல்வி கேள்விகளில் தேர்ச்சி, அரசு ஆதாயம் என்ற வகையில் சிறப்புகளையும், சத்துரு ஸ்தான வழியில் இருந்து கடின உழைப்பு, போட்டி பந்தயம் தேர்வு ஆகியவற்றில் நல்ல வெற்றியையும், அரசு ஆதாயங்களை சிறப்பாக சுவீகரிக்கும் வல்லமையும் தருவது வரவேற்க தக்க சிறப்பு நிலையாகும்.

இருப்பினும் சுக்கிரன் திசை தங்களுக்கு இல்லற வாழ்க்கையை நல்கும் 2,5,7,8,12ம் பாவக பலனை சிறிதும் ஏற்று நடத்தவில்லை என்பதோடு, சுய ஜாதகத்தில்  இல்லற வாழ்க்கையை குறிக்கும் மேற்சொன்ன வீடுகள் தங்களுக்கு மிகவும் கடுமையாக பாதிக்க பட்டு உள்ளது, குடும்பம் மற்றும் ஆயுள் ஸ்தானமான 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெற்று 100% விகிதம் பாதிக்கப்பட்டு உள்ளது, மேலும் புத்திர பாக்கியம் களத்திரம் மற்றும் அயன சயன ஸ்தானமான 5,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெற்று 100% விகிதம் பாதிக்கப்பட்டு உள்ளது, சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12 ஆகிய வீடுகள் யாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்க வேண்டிய  மிக முக்கியமான விஷயம் ஆகும்.

தங்களின் திருமண தடைக்கு அடிப்படை காரணம் சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12 ஆகிய வீடுகள் யாவும் கடுமையாக பாதிக்கப்பட்டதே காரணம் என்பதை கருத்தில் கொள்ளவும், சுக்கிர திசைக்கும் தங்களது திருமண தாமதத்திற்கும் யாதொரு காரணமும் இல்லை என்பதை  கருத்தில் கொள்க, தங்களது ஜாதகத்தில் 2,5,7,8,12 ஆகிய வீடுகள் யாவும் கடுமையாக பாதிக்கப்பட்டதிற்க்கான தீர்வை, முறையான பரிகாரங்களை மேற்கொள்ளும் பொழுது தங்களுக்கான திருமண தடை நீங்கி நல்லதொரு இல்லற வாழ்வை பெறுவீர்கள் முறையான ஆலோசனைகளுக்கு நேரில் தொடர்பு கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக