புதன், 21 செப்டம்பர், 2022

தாலி கட்டிய கணவனுக்கு பேரிழப்பை தரும் - மாங்கல்ய தோஷம் !

 

 திருமண பொருத்தம் காண்பதில் நட்ச்சத்திர பொருத்தம் 10 என்பது 5% இனக்கவர்ச்சி மற்றும் மனம் சார்ந்த பொருத்தத்தை மட்டுமே நிர்ணயம் செய்யும் , ஜாதக பொருத்தம் என்பதே  100% விகிதம் இல்லற வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும் என்பதை கருத்தில் கொண்டு திருமண வாழ்க்கையில் இணைவது நலம் தரும் அன்பர்களே!

ஜாதக பொருத்தம் என்றால் என்ன ?

 சுய ஜாதகத்தில் வரன் ( ஆண் ), வது ( பெண் )  இருவரது இல்லற வாழ்க்கையை வெகு சிறப்பாக நிர்ணயம் செய்யும் வல்லமை 5வீடுகளுக்கு உண்டு  ( 2,5,7,8,12ம் பாவகங்கள் ) மேற்சொன்ன 2ம் பாவகம் வலிமை பெரும்பொழுது குடும்பம் தழைத்தோங்கும், வருமானம் மிகும், குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதார தன்னிறைவு, இனிமையான வாக்கு வன்மை, இனிமையான பேச்சு, ஆறுதல் தரும் வார்த்தை, அன்பான சொற்கள், எதையும் எதிர்கொள்ளும் வல்லமை என்ற வகையிலும், 5ம் பாவகம் வலிமை பெரும் பொழுது சிறந்த நுண்ணறிவு திறன், அற்புதமான ஆண் வாரிசு, சுப நிகழ்வுகளை நிகழ்த்தும் தன்மை, கல்வியில் வெற்றி, கலையில் தேர்ச்சி, அறிவு திறன் கொண்டு வாழ்க்கையை நடத்தி செல்லும் தன்மை, மற்றவர் உதவி, உறவுகள் ஆதரவு, பூர்வீக சொத்தை சுவீகரிக்கும் தன்மை, சிறந்த நற்ப்பெயர், குடும்பத்தில் அங்கீகாரம், நினைத்ததை சாதிக்கும் வல்லமை என்ற வகையிலும்.

 7ம் பாவகம் வலிமை பெரும் பொழுது தனித்திறன் கொண்டு யாரையும் சார்ந்து வாழாமல் சுய வாழ்க்கையிலும் இல்லற வாழ்க்கையிலும் வெற்றி பெரும் யோகம், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை, தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்பு, ஒற்றுமை குறையாத இல்லற வாழ்க்கை, தனி திறன் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் தன்மை, எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் யோகம், சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் பெரும் தன்மை என மிகுந்த சிறப்பை தரும், 8ம் பாவகம் வலிமை பெரும் பொழுது பெண்ணிற்கு மாங்கல்யம் பலப்படும், கணவனுக்கு நீண்ட ஆயுளை தரும், மனைவி வழியில் இருந்து கணவனும், கணவன் வழியில் இருந்து மனைவியும் பொருளாதார தன்னிறைவை வாரி வழங்கும், இணைபிரியா இல்லற வாழ்க்கையை நல்கும் பொருளாதார தன்னிறைவையும், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் வாரி வழங்கும், 12ம் பாவகம் வலிமை பெரும்பொழுது இல்லற இன்பம் பெருகும், தெய்வீக சக்தி மேலோங்கும், மனநிறைவான இல்லற வாழ்க்கை, திருப்தியான தாம்பத்தியம், போதும் என்ற மனம், விசாலமான மனம், திருப்திகரமான செயல்பாடுகள், இருப்பதை  கொண்டு மன நிறைவு பெரும் யோகம், நினைத்ததை அடையும் பேராற்றல் என இல்லற வாழ்ககையில் சகல சௌபாக்கியத்தையும் வாரி வழங்கும் மேற்சொன்ன 5பாவகங்களும் சிறப்பாக அமையும் பொழுது.

எனவே திருமண பொருத்தம் காண்பதில் நட்ச்சத்திர பொருத்தம் இல்லாவிட்டாலும் ஜாதக பொருத்தம் இல்லையெனில் திருமணம் செய்வது என்பது இல்லற வாழ்க்கையில்  மிகுந்த பேராபத்தை வாரி வழங்கும் என்பதை கருத்தில் கொள்க.

 உதாரணமாக :

லக்கினம் : கும்பம் 

ராசி : தனுசு 

நட்ஷத்திரம் : மூலம் 4ம் பாதம் 

ஜாதகிக்கு சந்திரன் திசையில் திருமணம் தாமதமாக வலுக்கட்டாயமாக நடைபேற்றது ( இரண்டாம் தாரமாக ) திருமணம் நடந்த நாள் முதல் இல்லற வாழ்க்கையில் "நித்தியா கண்டம் பூர்ண ஆயுசு" என்ற நிலையில் இன்னல்களும் துன்பங்களும்  அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலையை தந்தது மனோகாரகன் சந்திரன் திசை, காரணம் சந்திரன் தனது திசையில் 1,4,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித இன்னல்களை தந்ததுடன் தனது கணவனுக்கு உயிர் ஆபத்தையும் விபத்துகள் மூலம் ஏற்படுத்தி மருத்துவ செலவினங்களை கடுமையாக வாரி வழங்கியது, மாங்கல்ய  ஸ்தானம் என்பது ஜாதகிக்கு கால புருஷனுக்கு 6ம் ராசியான கன்னி என்பதால் கணவர் ஜாதகிக்கு ஜென்ம வைரியாக செயல்படுவது கவனிக்கத்தக்க விஷயம்.

மேலும் கணவன் மனைவி பிரச்சனை பிரிந்து சென்று இன்னலுறும் தன்மை, வீண் மனக்கசப்பு மன அழுத்தம் என்ற வாயில் அதீத இன்னல்களை வாரி வழங்கியது சந்திரன் மகா திசை மேலும் 5ம் பாவக வலிமை இருவருக்கும் நால்லதோர் ஆண் வாரிசை வழங்கி சிறப்பித்த போதிலும், கணவன் மனைவி உறவு சிறப்பிக்கவில்லை, தாம்பத்திய வாழ்க்கையை குறிக்கும் 12ம் பாவகம் கடுமையாக  பாதிப்பது ஜாதகிக்கு அதீத மனஉளைச்சல்களை வாரி வழங்கியது, மனஅழுத்தம் மனப்போராட்டம், மனபயம் போன்றவற்றால் ஜாதகி இன்னலுற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதெற்கெல்லாம் காரணம் ஜாதகிக்கு 2,5 ம் பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், 7,8,12ம் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதே காரணம், மேலும்  சந்திரன் சூரியன் மகா திசையில் வலிமை அற்ற 1,4,7,8ம் வீடுகள் மாங்கல்ய ஸ்தானமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியதும், மாங்கல்ய தோஷம் கடுமையாக பாதித்ததும் அடிப்படை காரணமாக அமைந்தது என்றால் அது  மிகையாகாது.

பெண்ணின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பின், ஆணின் ஜாதகத்தில் மேற்கண்ட 5பாவகங்களும் வலிமையுடன் இருப்பதும், நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே இல்லற வாழ்க்கை  சிறப்பாக அமையும், இல்லையெனில் இல்லற வாழ்க்கை என்பது கடுமையாக  பாதிப்பதுடன் விவாகரத்து வரை செல்லும் என்பதை தவிர்க்க இயலாது கணவனுக்கு உயிர் ஆபத்தையும், விபத்துக்களையும் தரக்கூடும் என்பது திருமண பொருத்தத்தில் விழிப்புணர்வு பெற வேண்டிய அமைப்பாகும்.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696

#மாங்கல்யதோஷம் #ரஜ்ஜுபொருத்தம், #ஆயுள்ஸ்தானம் #திருமணத்தடை #தாமததிருமணம் #மறுமணம் #திருமணதோஷம் #விவாகரத்து #பொருத்தம் #நட்ச்சத்திர_பொருத்தம் #ஜாதகபொருத்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக