திங்கள், 8 அக்டோபர், 2012

பனிரெண்டாம் வீட்டில் கேது அமர்ந்தால் மறு பிறவி இல்லையா ?



கேள்வி :

அய்யா எனது சுய ஜாதக அமைப்பில் லக்கினத்தில் இருந்து 12 ல் கேது அமர்ந்து இருக்கிறார் , எனது ஜாதக அமைப்பை காணும் ஜோதிடர்கள் அனைவரும் தங்களுக்கு இதுவே கடைசி பிறவி மறு ஜென்மம் தங்களுக்கு இல்லை என கூறுகின்றனர் , மேலும் தங்களுக்கு ஆன்மீக வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி கிடைக்கும் என்று சொல்கின்றனர் , தங்களுக்கு குடும்ப வாழ்க்கை சரியாக அமையாது என்றும் சொல்கின்றனர் உண்மையில் எனக்கு ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் இல்லை, மேலும்  ஆன்மீகம் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது ,  நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன் சரியான விளக்கம் தரவும் என பணிவுடன் வேண்டுகிறேன் .

பதில் :

அன்பு நண்பருக்கு  இனி தங்களுக்கு வேறு வழியே கிடையாது, காரணம் தங்களுடைய விதியை இதற்கு முன் பார்த்த ஜோதிடர்கள் நிர்ணயம் செய்து விட்டார்கள் , ருத்ராட்சம் பெற்றுகொண்டு ஆன்மீக கடலில் குதித்து விடுங்கள் , எங்களது ஊரில் ஒரு பெரியவர்கள் ஒரு செலவாடை சொல்வது உண்டு அதாவது " கேட்கிறவர் கேட்டால்  கடுகு , மொடா ( தானியம் கொட்டி வைக்கும் மண் பாத்திரம் ) சைசில் இருக்கிறது என்பார்களாம் " அது போல்  தங்களின் நிலை இருக்கிறது , தங்களுக்கு சொன்ன பலன்கள் அனைத்தும் பொது பலன்களே இது நிச்சயம் தங்களுக்கு ஒத்து வர சிறிதும் வாய்ப்பில்லை என்பதை இனி தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் .

உண்மையில் தங்களது ஜாதக அமைப்பில் பாவக முறைப்படி பதினொன்றாம் வீட்டிலேயே கேது அமர்ந்திருக்கிறார் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள் , பதினொன்றில் அமர்ந்த கேது தங்களுக்கு 100 சதவிகித நன்மையை செய்து கொண்டு இருக்கிறார் , இதன் மூலம் தங்களது வாழ்க்கை அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் , பூலோகத்தில் வாழ்வதற்கு தேவையான அனைத்து சொத்து சுகங்களையும் , யோக வாழ்க்கையும் தரும் , மேலும் வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்த நல் வாழ்க்கையாக அது இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை , ஒருவேளை இதற்க்கு முன் சந்தித்த ஜோதிடர்கள்  சில ஆன்மீக ஆனந்தாக்களின் அமைப்பை கருத்தில் கொண்டு தங்களை ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட சொல்லியிருப்பார்களோ? நண்பரே சற்றே தெளிவான சிந்தனையுடன் தாங்கள் இருப்பது தங்களுக்கு மிகசிறந்த யோக வாழ்க்கையை தரும் .

ஒருவர் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெறவும் , இறை அருளின் கருணையினால் மோட்சமும் , பிறவி அற்ற நிலையை பெறவும் அவரது சுய ஜாதக அமைப்பில் கடகம் எனும் ராசி 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் மேலும் அந்த ராசி ஜாதகருக்கு , லக்கினம் , பூர்வ புண்ணியம் , பாக்கிய ஸ்தானம் , மோட்ச ஸ்தானம்  என்ற பாவகங்களில் ஒரு பாவகமாக அமைப்பை பெற்று இருக்க வேண்டும் ,  இந்த அமைப்பை பெற்றவருக்கு மேற்கண்ட வீட்டின் பலன் நடை முறைக்கு வரும் பொழுது , இறை அருளின் கருணை ஜாதகரை தம்முடன் ஒன்றர இணைத்து கொண்டு , பிறவி அற்ற நிலைக்கு எடுத்து செல்லும் .

 காரணம் கடகம் சர நீர் ராசி , நீர் என்பது ஜாதகரின் மன சக்தியினையும் , இறை நிலையும்  ஒன்றாக இணைக்கும் சக்தி பெற்றது , இந்த ராசி நல்ல நிலையில் இருக்கும் ஜாதகருக்கு இந்த வீட்டின் பலன் நடை பெரும் பொழுது ஜாதகர் தனது கர்ம வினை பதிவினை முழுவதும் கழித்து கொள்ளும் வாய்ப்பினை பெறுவார் , மேலும் பிறவி அற்ற நிலைக்கு இறை அருள் ஜாதகர் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி எடுத்துகொள்ளும் என்பதே உண்மை , குறிப்பிட்ட காலகட்டத்தில் நல்ல ஆன்மிக குரு ஜாதகருக்கு அமைவார் அவரின் வழிகாட்டுதலில் ஜாதகர் , தனது கர்ம வினை பதிவை கழித்துக்கொண்டு பரிசுத்தம் பெற்று , பிறவி அற்று இறை நிலையுடன் ஒன்றாகும் யோக நிலையை பெறுகிறார் .

குறிப்பு : 

சிம்ம இலக்கின அமைப்பை சார்ந்தவர்களுக்கு லக்கினத்தில் இருந்து 12 ம் பாவகத்தில் கேது அமர்வது 100 சதவிகிதம் ஆன்மீக வாழ்க்கையில் நிச்சயம் வெற்றியை தரும் அதிலும் சம்பந்த பட்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் தேய்  பிறை சந்திரனாக இருக்க வேண்டும் . ஒருவேளை வளர் பிறை சந்திரனாக இருந்து 12 ம் பாவகத்தில் கேது அமர்வது ஜாதகரை கற்பனை உலகத்தில் சஞ்சாரம் செய்ய வைத்து விடும் , ஜாதகரின் மனதில் தோன்றுவதெல்லாம் உண்மை என நம்ப ஆரம்பித்து விடுவார் , அதாவது உயர்வு மனபான்மை , தன்னிடம் எல்லா சக்தியும் குடி கொண்டு இருப்பதாக நினைத்து கொண்டு ( போலி சாமியார் , போலி மந்திரவாதி )  கற்பனையில் வாழ்க்கை நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உண்டு , இது இந்த லக்கினத்திற்கு மட்டும் அல்ல நீர் ராசிகள் கடுமையான பாதிப்பை பெரும் ஜாதக அமைப்பை சார்ந்த அனைவருக்கும் பொருந்தும் .

மனம் ஒருநிலை பெரும் பொழுதே ஜாதகர் ஆன்மீகத்தில் வெற்றி பெற முடியும் , அப்படி மனம் ஒரு நிலை பட வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் நீர் ராசிகள் மிகவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் , குறிப்பாக கடகம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அல்லது 12 ம பாவகம் 100 சதவிகிதம் மிகவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் , இப்படி பட்ட நிலையில் இருப்பவர்களுக்கே ஆன்மீகத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் , வெறுமனே 12 ல் கேது அமர்ந்தால் மட்டுமே பிரிவி அற்ற பேரு நிலை கிடைத்து விட வாய்ப்பில்லை, அதிலும் ஜாதக அமைப்பில் 12 ம் பாவகத்தில் கேது இல்லை என்பதே உண்மை , எனவே யாரோ சொன்னார்கள் என்று மனதை குழப்பி கொள்ளாமல் , குடும்பத்திலும் தொழிலும் அதிக கவனம் செலுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் .



தங்களது ஜாதக அமைப்பில் கேது இருக்கும் பாவகம் பற்றி விளக்கம் :

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam @gmail .com  



2 கருத்துகள்:

  1. ஐயா வண்ணகம்,
    இந்த பதிவை படித்தவுடன் இரண்டு மதமாக காரணமற்ற மன போர்ரற்றதின் எதோ ஒரு காரியம் புரிகிறது.சுருக்கமாக சொல்ல விரும்பிகிறேன் பொதுவாகவே எதிலும் விரக்தி, சித்தர் கொள்கை பின்பற்ற நினைப்பது, பற்று நிக்கி நினைத்து மன போரர்ரம். இந்த இரண்டு காலமாக கோவிலில் பொய் ஜீவனம் செய்து விடலாமா என்ற நினைப்பு அதிகமாகிவிட்டது. என் ஜாதகம் லக்னம் - சிம்மம் (கேது) 12 கடகம் (வளர்பிறை சந்திரன் , சூரியன்). நடபதேல்லாம் நன்மையா தீமையா.?? dob-16.07.1988 time-08.30am place-madras

    பதிலளிநீக்கு