வெள்ளி, 17 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் நிகழ்கால எதிர்கால பலன்கள் காணும் பொழுது கவனிக்க வேண்டிய அம்சங்கள்!


 சுய ஜாதக ரீதியாக ஒருவரது ஜாதகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை மற்றும் புத்திகளும், எதிர்வரும் திசா புத்திகளும் தரும் பலன்கள் எவ்விதம் அமையும் என்பதை கருத்தில் கொண்டு ஜாதகர் செயல்படும் பொழுது, ஜாதகருக்கு வரும் நன்மை தீமை பலன்களை உணர்ந்து தனது வாழ்க்கையை மிகவும் சிறப்பாக அமைத்துக்கொள்ள இயலும், நன்மை நடைபெறும் பொழுது ஜாதகர் தனக்கு வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண இயலும், தீமையான பலன்கள் நடைமுறைக்கு வரும் பொழுது ஜாதகர் மிகவும் எச்சரிக்கையாகவும், விளைவு அறிந்து செயலாற்றும் வல்லமையை பெற இயலும், விதியின் பலனை அனுபவித்தே ஆகவேண்டு என்றாலும் கூட, ஜாதகர் தனது சமயோசித புத்திசாலிதன அமைப்பில் இருந்தும்,அறிவு திறன் வழியில் இருந்தும், மாற்று சிந்தனை மூலம் தனது வாழ்க்கையை சீரும் சிறப்புமாக அமைத்துக்கொள்ள இயலும்.

1) ஒருவரது சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை புத்தி மற்றும் எதிர் வரும் திசை புத்தி எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது.
2) நடைமுறையில் உள்ள திசை புத்தி மற்றும் எதிர் வரும் திசை புத்தி ஏற்று நடத்தும் பாவகங்கள் ஜாதகருக்கு எவ்வித பலன்களை வழங்குகிறது.
3) நடைமுறையில் உள்ள திசை புத்தி மற்றும் எதிர் வரும் திசை புத்தி ஏற்று நடத்தும் பாவகங்களுடன் கோட்சார கிரகங்களின் சம்பந்தம் என்ன ? கோட்சார கிரகங்கள் குறிப்பிட்ட பாவகங்களுக்கு தரும் நன்மை தீமை பலன்கள் என்ன ? என்பதை ஜோதிட கணிதம் கொண்டு தெளிவு பட தெரிந்துகொண்டால், ஜாதகர் தனது வாழ்க்கையை மிகவும் சிறப்பாக அமைத்துக்கொள்ள இயலும்.

இதை ஊர் உதாரண ஜாதகம் கொண்டு காண்போம் :



லக்கினம் : மேஷம் 
ராசி : மிதுனம் 
நட்சத்திரம் : திருவாதிரை 1ம் பாதம் 

தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை புத்தி புதன் திசை ஆகும் ( 04/01/2015 முதல் 04/01/2032 வரை ) இந்த புதன் திசை ஜாதகருக்கு எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரிந்தால் மட்டுமே,  ஜாதகருக்கு புதன் திசை தரும் பலாபலன்களின் தன்மையை சொல்ல இயலும், ஜாதகருக்கு புதன்  8ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் எனவே ஜாதகருக்கு 8ம் பாவக பலனை  தருவாரா ? அல்லது ஜாதகருக்கு 3,மற்றும் 6ம் பாவகங்களுக்கு  அதிபதியாக வருகின்றார் ( பாரம்பரிய முறைப்படி ) எனவே 3,6ம் பாவக பலனை தருவாரா? அல்லது 4ம் பாவகத்தை பார்வை செய்வதால் 4ம் பாவக பலனை தருவாரா ? இந்த கேள்விகள் அனைத்தும் பாரம்பரிய முறைபடியாலான ஜாதக பலனை காணும் பொழுது ஏற்ப்படும், ஆனால் நமது ஜோதிட முறைப்படி ஜாதகருக்கு புதன் திசை லக்கினம் எனும் 1ம் வீடும், தொழில் ஸ்தானம் எனும் 10ம் வீடும், ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தான பலனையே 100% யோக பலனாக வாரி வழங்குகிறது, இது எப்படி? என்ற கேள்விக்கு முறையான ஜோதிட கணிதம்  தெரியும் பொழுது தெளிவாகும்.

தற்பொழுது நடைபெறும் புதன் திசை ஜாதகருக்கு ஜீவன 1,10ம் வீடுகள் ஸ்தான பலனை  தருவது ஜாதகருக்கு  மிகுந்த நன்மையை வாரி வழங்கும் என்ற போதிலும், ஜாதகர் எந்த வகையில் யோக பலன்களை அனுபவிப்பார், ஜாதகர் பெரும் நன்மைகள் எப்படி பட்ட அமைப்பில்  இருக்கும் என்ற கேள்விகளுக்கு பதில் கிழ்கண்டவாறு அமையும்.

ஜாதகருக்கு புதன் திசை தொடர்பு படுத்தும் வீடுகளும் பாவக பலன்களும் :

1) 1ம் வீடு ஜாதகருக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று , 1ம் வீடு மேஷம் ராசி, சர நெருப்பு தத்துவம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கும், ஜாதகருக்கும் லக்கினமாக அமைவதால், ஜாதகரின் உடல் நிலையம் மனநிலையும்  மிகவும் சிறப்பாக இயங்கும், நெருப்பு தத்துவம் என்பதால் ஜாதகர் தனது நடவடிக்கைகளில், நேர்மையாகவும், சுய கட்டுபாடுடன்  கூடிய  சுறுசுறுப்புடன்  திகழ்வார், தான் மேற்கொள்ளும் காரியங்கள் யாவிலும்  விரைவாகவும், அதே சமயம் சரியாகவும் செயல்படுவார், தன்னம்பிக்கையும், மன உறுதியும் ஜாதகருக்கு மிகுந்து காணப்படும், நெருப்பு தத்துவமான தொழில் நுட்ப துறைகளில் ஜாதகருக்கு வருமான வாய்ப்புகளையும், தொழில் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், மேலும் சர  ராசியாக அமைவதால் ஜாதகருக்கு தரவேண்டிய யோக பலன்களை 100% விகிதம் விரைவாக வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்கது.

2) 10ம் வீடு ஜாதகருக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 10ம் வீடு மகர ராசி, சர மண் தத்துவம்,  காலபுருஷ தத்துவ அமைப்பிற்கும், ஜாதகருக்கும் ஜீவன ஸ்தானமாக வருவதால், ஜாதகரின் கெளரவம் மற்றும் அந்தஸ்து மேலோங்கும், தான் செய்து வரும் தொழில் மற்றும் ஜீவன வழியில் இருந்து அபரிவிதமான முன்னேற்றங்களை வாரி வழங்கும், ஜாதகருக்கு கௌரவ பதவிகள், மற்றும் அந்தஸ்து அதிகரிக்கும், எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி தரும், அரசியல் ரீதியான பதவிகள் மற்றும் தொழில் ரீதியான அங்கீகாரங்கள் ஜாதகருக்கு தேடிவரும், சர  மண் தத்துவம் சார்ந்த இயக்க நிலையில் உள்ள உபகரணங்கள், பொறியியல் கருவிகள் மூலம் ஜாதகருக்கு நல்ல வருமானம் அமையும், பூமிக்கு கீழ் கிடைக்கும் விலை உயர்ந்த உலோக அலோக பொருட்கள் மூலம் ஜாதகருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

 குறிப்பாக தற்பொழுது நடைபெறும் புதன் திசை ஜாதகருக்கு 1,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதால் ஜாதகர் தனது தொழில் மற்றும் ஜீவன வழியில் வரும் நல்ல வாய்ப்புகளையும், சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்திக்கொண்டு, வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தை பெறுவது அவசியமாகிறது, மேலும் 1,10ம் வீடுகள் சர ராசியாக அமைவதால், ஜாதகருக்கு தரவேண்டிய யோக பலன்களை 100% சதவிகிதம் விரைந்து தரும் என்பதால், தனது வேளைகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றிகளை குவிப்பது சிறப்பானதாக அமையும் என்று "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக