வியாழன், 23 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் அவயோக நிலை இருந்த போதிலும், ராஜயோக பலன்களை அனுபவிப்பது எப்படி ?


சுய ஜாதகத்தில் ஒருவருக்கு கேந்திர பாவகங்கள் என்று அழைக்க படும் 1,4,7,10ம் வீடுகள் கடுமையாக பாதிக்க பட்டு இருந்த போதிலும் கிழ்கண்ட ஜாதகரால், நல்ல யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தருவது ஜாதகத்தில் எது என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

பொதுவாக கேந்திர பாவகங்கள் என்று அழைக்கப்படும் 1,4,7,10ம் வீடுகள் ஒருவரது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமைவது, ஜாதகருக்கு ஒரு ஸ்திரமான நான்கு கால்கள் கொண்ட நாற்காலியில் அமர்வதற்கு ஒப்பாக வர்ணிக்கலாம், நான்கு கால்களும் நல்ல நிலையில் உள்ள ஓர் நாற்காலி எப்படி நிலையான அமர்வு சுகத்தை தருகிறதோ, அதை போன்ற யோக பலன்களையும், நன்மைகளையும் கேந்திர பாவகங்கலான 1,4,7,10ம் வீடுகள் சுய ஜாதகத்தில் வலிமை பெரும் பொழுது ஜாதகருக்கு, வாரி வழங்கும்.

மேற்கண்ட கேந்திர பாவகங்கள் வலிமை அற்ற தன்மையை பெரும் பொழுது ஜாதகர் ஒரு நிலையான வாழ்க்கையை மேற்கொள்வது என்பது கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்பு உண்டு, முதல் கேந்திரமான 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகர், நல்ல புகழ்,கீர்த்தி, ஒழுக்கம், உடல் நலம், மனநலம், நீண்ட ஆயுள், ஜாதகருக்கு வரும் இன்னல்களில் இருந்து வெளிவரும் அமைப்பு, தற்காப்பு சிந்தனை மற்றும் செயல்திறன், ஜாதகரின் விழிப்புணர்வு, சுய சிந்தனை, அறிவு சார்ந்த செயல்கள் என்ற வகையில் நன்மையை செய்யும்.

2ம் கேந்திரமான 4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வாழும் சொகுசு வாழ்க்கை, ஜாதகருக்கு அமையும் வீடு , சொத்து சுகம், வண்டி வாகனம், தாய் வழியில் இருந்து வரும் யோகங்கள், ஜாதகரின் நல்ல குணம், எடுக்கும் முடிவுகளில் உள்ள உறுதி, தனது தனிப்பட்ட வழிமுறையில் பயணம் செய்து, ஜாதகர் பெரும் வெற்றிகள், வாகன யோகம், நிலபுலன்கள், தன்னம்பிக்கை, சமூக ஆதரவு, எதிர்பாராமல் ஜாதகர் பெரும் அதிர்ஷ்ட வாழ்க்கையின் தன்மை, பொருள் வரவின் மூலம் ஜாதகர் பெறும் சுகபோக வாழ்க்கை என்ற வகையில் நன்மையை செய்யும்.

3ம் கேந்திரமான 7ம் பாவகம் ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை துணையை பெற்று தரும், சிறந்த நண்பர்கள் உதவியை பெரும் யோகத்தை தரும், நல்ல கூட்டாளிகள் மூலம் அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், பொதுமக்களின் ஆதரவின் மூலம் ஜாதகர் திடீர் அதிர்ஷ்டங்களை பெரும் யோகத்தை தரும், வெளிநாடுகளில் இருந்து வரும் லாபம், மற்றும் வெளிநாடுகளில் ஜீவனம் செய்யும் யோகத்தையும் தரும், ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் மூலம் வாழ்க்கையில் அபரிவிதமான முன்னேற்றத்தை வாரி வழங்கும், மேலும் ஜாதகருக்கு பன்முக திறமையும், மக்கள் கவர்ச்சியும் உண்டாகும். மக்கள் மூலம் முன்னேற்றம் என்ற வகையில் நன்மையை செய்யும்.

4ம் கேந்திரமான 10ம் பாவகம் ஜாதகருக்கு சமூகத்தில் கௌரவம், அந்தஸ்து மற்றும் சுய மரியாதையுடன் வாழும் யோக வாழ்க்கையை உறுதி செய்யும், செய்யும் தொழில் வழியில் இருந்து ஜாதகர் நல்ல யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை தரும், புதிய யுக்திகள் மூலம் தான் செய்யும் தொழில் வழியில் இருந்து அபரிவிதமான முன்னேற்றத்தை வாரி வழங்கும், ஜீவன வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் யோக பலன்கள் அனைத்தையும் வாரி வழங்கும், அரசியலில் வெற்றி, செய்யும் தொழில் வெற்றி, பல அதிகார பதவிகளை அலங்கரிக்கும் யோகம் என்ற வகையில் நன்மையை செய்யும்.

கிழ்கண்ட ஜாதகருக்கு  கேந்திர பாவகங்கலான மேலே குறிப்பிடபட்டுள்ள, 1,4,7,10ம் வீடுகள் அனைத்தும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக அமைப்பில் உள்ளது, இருப்பினும் ஜாதகர் தனது  வாழ்க்கையை  மிகவும் வெகு சிறப்பாக நடத்திக்கொண்டு இருப்பது ஓர் ஆச்சரியமான விஷயமே.

இந்த ஜாதகருக்கு 1,4,6,7,10,12ம் வீடுகள் அனைத்தும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் வீடாக வருவது  ஜாதக மேற்கண்ட பாவக வழியில் திடீர் இழப்புகளை சந்தித்த போதிலும், தற்பொழுது நடைபெறும் புதன் திசை ஜாதகருக்கு 8,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்க்கையை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது, ஜாதகர் 8ம் பாவகத்துக்கு உரிய இன்சுரன்ஸ் துறையிலும், 3,11ம் பாவகத்துகுரிய ஏஜென்சி துறையிலும் நல்ல வருமானத்தை பெற்று கொண்டு இருக்கிறார்.

சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்க பட்டு இருந்தாலும், நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் பாதிக்க பட்ட பாவகத்தின் பலனை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகருக்கு எவ்வித இன்னல்களும் வர வாய்ப்பில்லை, மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 7பாவகங்கள் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கின்றது, இருப்பினும் இதற்க்கு முன் நடந்த சனி திசையும் சரி, தற்பொழுது நடைபெறும் புதன் திசையும் சரி, பாதிக்க பட்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தாத காரணத்தாலும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் காரணத்தாலும் ஜாதகருக்கு யோக பலன்களே நடைமுறையில் உள்ளது கவனிக்கத்தக்கது.

எனவே சுய ஜாதகத்தில் அவயோகங்கள் இருப்பினும் அவை நடைமுறையில் வாராமல் இருந்தால் ( நடைபெறும் திசை புத்திகள்  பாதிக்க பட்ட பாவக பலனை  ஏற்று நடத்தாமல் யிருந்தால் ) ஜாதகர் யோக பலன்களையே அனுபவிப்பதாக கருதலாம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக