ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் ஜீவன மேன்மை ( தொழில் முன்னேற்றம் ) தரும் திசாபுத்திகள் !




ஒருவரது சுய ஜாதக அமைப்பின் படி தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற்றமும், யோகமும் தரும் திசாபுத்திகள் எது என்பதை தெளிவாக ஜாதக கணிதம் மூலம் தெரிந்துகொண்டு, அந்த கால நேரத்தில் ஜாதகர் தொழில் ரீதியான முயற்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது 100% விகித வெற்றிகளை தங்கு தடையின்றி ஜாதகர் பெறலாம், பொதுவாக ஒருவரது தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் வரும் முன்னேற்றத்தை நிர்ணயம் செய்வது அவரது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்து திசாபுத்திகளே என்றால் அது மிகையில்லை, பொதுவாக சுப கிரகமான குரு,சுக்கிரன்,புதன்,வளர்பிறை சந்திரன் திசாபுத்திகளில் ஜீவன மேன்மை உண்டாகும் என்று கணிப்பதும், அசுப கிரகங்களான சூரியன்,செவ்வாய்,தேய்பிறைசந்திரன்,சனி,ராகுகேது  திசபுத்திகளில் ஜீவன முன்னேற்றம் தடைபடும், பாதிப்பை தரும் என்று முடிவு செய்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயமாகவே கருதலாம்.

தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற்றமும், முன்னேற்றம் அற்ற நிலையை தருவது நவ கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் அல்ல, குறிப்பிட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையும், அந்த பாவக பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமுமே என்றால் அது மிகையில்லை அன்பர்களே! இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் தர ஜோதிடதீபம் கடமைபட்டு இருக்கிறது.

உதாரண ஜாதகம் :


லக்கினம் : சிம்மம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 1ம் பாதம் 

ஜாதகருக்கு சிம்ம லக்கினம், சுய ஜாதகத்தில் ஜீவனத்தை குறிக்கும் 10ம் பாவக நிலை ஆய்வு செய்யும் பொழுது 1,2,4,5,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிக வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாக கருதலாம், 1,2,4,58,10ம் வீடுகள் முறையே ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதால், ஜாதகர் இலக்கின வழியில் இருந்து சுயமாக தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பவர் என்பது உறுதியாகிறது, ஜாதகர் தனது அறிவின் வழியிலோ, அல்லது தனது உடல் உழைப்பின் மூலமோ ஜீவனத்தை தேடி சுயமாக தொழில் வெற்றிகளை குவிப்பார் என்பதும், தனது சுய உழைப்பின் மூலம் ஸ்திரமான தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கும் தன்மையை பெறுவார் என்பதும் 1ம் பாவக வழியில் இருந்து உறுதிபடுத்த படுகிறது.

ஜாதகர் 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வருமான வாய்ப்பை பெறுவார் தனது பேச்சு திறனின் காரணமாக நல்ல வேலைவாய்ப்பை பெறுவதும், வரும் வருமானத்தை கொண்டு வாழ்க்கையில் தொழில் துவங்கும் தன்மையை ஜாதகருக்கு தரும், 4ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வீடு,வண்டி,வாகனம்,நிலம்,சொத்து ஆகிய அமைப்பில் இருந்தும் நல்ல வருமானத்தை தரும், தனது பெயரில் இருக்கும் அசையும் அசையா சொத்துகள் மூலமும் ஜாதகருக்கு தொழில் அமையும், தனது பெயரிலேயே ஜாதகர் தொழில் துவங்கி செய்யலாம், தனது பெயரில் சொத்து வாங்கலாம் விற்கலாம் எனவே ஜாதகருக்கு 4ம் பாவகம் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது மிகுந்த யோகத்தை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து, ஜாதகர் தான் கற்ற கல்வியின் வழியில் இருந்தும், தனது முன்னோர்களின் அறிவு திறனின் தன்மையின் வழியில் இருந்து தொழில் முன்னேற்றங்களை பெறுவார், 5ம் பாவகம் ஜீவன பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகரின் புதிய சிந்தனையும், புதிய செயல்பாடுகளும், மற்ற அமைப்பில் இருந்து வேறுபடுத்தி தனித்தன்மையுடன் திகழ செய்யும், ஜாதகரின் வெற்றியும் இதன் வழியிலேயே அமையும், எவரும் பயன்படுத்தாத புதிய தொழில் முறை யுக்திகளை பயன்படுத்தி வாழ்க்கையில் ஜீவன மேன்மையை ஜாதகர் தங்குதடையின்றி பெறுவார், குல தெய்வத்தின் அருளாசிகள் ஜாதகரை எவ்வித தொல்லைகளில் இருந்தும் காப்பாற்றிவிடும் என்பது கவனிக்க தக்கது.

 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு திருமண வாழ்க்கையின் மூலம் ஜீவனம் மேம்படும் அமைப்பை தருகிறது, ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து நல்ல வருமான வாய்ப்பையும் தொழில் முன்னேற்றத்தையும் பெறுவார், 8ம் பாவகம் திடீர் அதிர்ஷ்டத்தை ஜீவன அமைப்பில் தருவதால், ஜாதகர் செய்யும் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் திடீரென முன்னேற்றத்தை பெற்று, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெறுவார் என்பது வரவேற்க தக்கது, ஜாதகரின் தொழில் முன்னேற்றம் என்பது வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானத்தை அடிப்படையாக கொண்டதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

  10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிச்சயம் ஒரு ஸ்திரமான தொழில் முன்னேற்றத்தை பெறுவார் என்பதும், செய்யும் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் தொடர்ந்து வருமானத்தை பெற்றுகொண்டே இருப்பார் என்பதும் உறுதியாகிறது, ஜாதகரின் கையில் எப்பொழுதும் பணம் இருந்துகொண்டே இருக்கும், ஜீவன வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல கௌரவமும், அந்தஸ்தும் கிடைத்துக்கொண்டே இருக்கும், நிலையான மதிப்பு மரியாதையுடன் நீண்ட நெடுங்காலம் ஜீவன வாழ்க்கையை செய்யும் தன்மையை தரும், ஜாதகருக்கு ஸ்திரமான மண் தத்துவம் சார்ந்த தொழில்கள் அபரிவிதமான வெற்றியை வாரி வழங்கும், பொறுமையுடன் கையாளும் தொழில்கள் மூலம் நீண்டகால தொழில் முன்னேற்றத்தை ஜாதகர் ஸ்திரமாக பெறுவார் என்பது உறுதியாகிறது.


பொதுவாக ஜாதகரின் ஜீவன பாவகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது கிடைக்கும், சுய ஜாதகரீதியான பதில்கள் மேற்கண்டவை, இனி அடுத்தது மேற்கண்ட யோக பலன்களை ஜாதகர் எப்பொழுது, எந்த எந்த கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் பெறுவார் என்பது தெரிந்தால் மட்டுமே ஜாதகர், முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டு தனது ஜீவன வாழ்க்கையை மேலும் சிறப்பாக அமைத்துக்கொள்ள உதவும், ஆக அவரது ஜாதகத்தில் நடைபெறும் எந்த எந்த கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வு செய்து, அதை தெளிவாக ஜாதகருக்கு உணர்த்துவதே ஒரு சிறந்த ஜோதிடனின் கடமை.

எனவே ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம அமைப்பை இனி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தும் கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம விபரங்கள் பின்வருமாறு :

1) சனி 1,5ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.
2) புதன் 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.
3) கேது 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.
4) சந்திரன் 1,5ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.

ஆக ஜாதகர் ஜீவன ரீதியான வெற்றிகளை சனி,புதன்,கேது,சந்திரன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில், தங்குதடையின்றி 100% விகிதம் பெறுவார் என்பது உறுதியாகிறது, எனவே ஜாதகர் மேற்கண்ட திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் தனது தொழில் அபிவிருத்தியை மேற்கொண்டு வாழ்க்கையில் சகல விதங்களில் இருந்தும் ஜீவன மேன்மையை பெறலாம் என்பதே "ஜோதிடதீபத்தின் " ஆலோசனை வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக