திங்கள், 20 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் சர,ஸ்திர,உபய ராசிகள் வழங்கும் பலாபலன்கள் !



ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்களின் தொடர்புகளின் வழியில், திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தும் நன்மை தீமை பலன்களில், சர,ஸ்திர,உபய ராசிகளுக்கு ஏற்ப நிறைய வேறுபாடுகள் உண்டு, பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் 12 வீடுகள் தான் தொடர்பு பெரும் பாவகங்கள் வழியில் இருந்து யோக அவயோக பலன்களை தருகிறது, இந்த 12 வீடுகளும் தொடர்பு பெரும் பாவகம், சர ராசியாக இருப்பின் விரைவான பலன்களையும், ஸ்திர ராசியாக இருப்பின் நீடித்த பலன்களையும், உபய ராசியாக இருப்பின் மேற்கண்ட இரண்டிற்கும் சம்பந்தம் இல்லாத பலன்களையும் தரும்.


குறிப்பாக ஒரு ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள திசை யோக பலனை தரும் நிலையில் இருக்கிறது என்று வைத்துகொண்டால், 1,4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜாதகருக்கு 1,4,7,10ம் வீடுகள் வழியில் இருந்து நன்மையை செய்கிறது எனில், ஜாதகருக்கு தொடர்பு பெரும் 10ம் பாவகம் சர ராசியாக இருப்பின், தான் தரவேண்டிய யோக பலன்களை திசை ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே வாரி வழங்கிவிடும், எடுத்துகாட்டாக ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் குறுகிய காலத்தில் வெகு விரைவாக அமையும். ஜாதகருக்கு தொடர்பு பெரும் 10ம் பாவகம் ஸ்திர  ராசியாக இருப்பின், தான் தரவேண்டிய யோக பலன்களை தனது திசை முழுவதும் தொடர்ந்து ஸ்திரமாக வழங்கிகொண்டே இருக்கும், உதாரணமாக ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் என்பது படிப்படியாக அமையும். ஜாதகருக்கு தொடர்பு பெரும் 10ம் பாவகம் உபய  ராசியாக இருப்பின், தான் தரவேண்டிய யோக பலன்களை மேற்கண்ட இரண்டு அமைப்பிற்கும் சாராமல் சிறிது சிறிதாக அமையும், உதாரணமாக ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவில் இல்லாமல் குறைவான நிலையிலேயே அமையும்.

மேற்கண்ட விதி யோக அவயோக நிலை இரண்டிற்கும் பொருந்தும், இதை ஓர்  உதாரண ஜாதகம் கொண்டு காண்பது சிறப்பாக அமையும் என்று "ஜோதிடதீபம்" கருதுகிறது.


லக்கினம் : தனுசு 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : மூலம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு யோகம் தரும் பாவகங்களாக அமைவது :

1) 1,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 
2) 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
3) 3ம் வீடு சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்.
4) 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் ஜாதகத்தில்  யோக அமைப்பாக கருதலாம், இதில் 10ம் பாவகம் உபய ராசியாகவும், 11ம் பாவகம் சர ராசியாகவும், 3,9ம் பாவகங்கள் ஸ்திர ராசியாகவும் ஜாதகிக்கு அமைகிறது.

ஜாதகிக்கு அவயோகம் தரும் பாவகங்களாக அமைவது :

1) 6,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
2) 8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் ஜாதகத்தில் அவயோக அமைப்பாக கருதலாம், இதில் 8ம் பாவகம் சர ராசியாகவும், 12ம் பாவகம் ஸ்திர ராசியாகவும் ஜாதகிக்கு அமைகிறது.

ஜாதகிக்கு 10ம் பாவகம் உபய ராசியில் அமைந்து நன்மையை செய்வது குறிப்பிட்ட பாவக வழியில் சிறிய அளவிலேயே அமையும், 3,9ம் பாவகம் ஸ்திர ராசியாக அமைந்து நன்மையை செய்வதால் ஜாதகிக்கு குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நீடித்த 80% விகித நன்மையை தொடர்ந்து பெற்ற வண்ணம் இருப்பார், 11ம் பாவகம் சர ராசியாக அமைந்து நன்மை செய்வது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகித நன்மையை விரைவாக குறுகிய காலத்தில் வாரி வழங்கும்.

ஜாதகிக்கு 8ம் பாவகம் சர ராசியாக அமைந்து தீமையை தருவது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை குறுகிய காலத்தில் தரும், 12ம் பாவகம் ஸ்திர ராசியாக அமைத்து தீமையை தருவது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 75% விகித இன்னல்களை தொடர்ந்து ஸ்திரமாக தந்துகொண்டே இருக்கும்.

மேற்கண்ட யோக அவயோக பலன்கள் ஜாதகிக்கு எப்பொழுது நடைமுறைக்கு  வரும் என்பதை இனி ஆய்வு செய்வோம் .

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் திசை சூரியன் திசை ( 13/08/2014 முதல் 13/08/2020 வரை ) 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 3ம் வீடு சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலனை தருவது 11ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோகத்தையும், 3ம் பாவக வழியில் இருந்து 80% விகித யோகத்தையும் தரும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் சந்திரன் திசை ( 13/08/2020 முதல் 13/08/2030 வரை ) 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 9ம் பாவக வழியில் இருந்து 80% விகித யோகத்தையும் தரும்.

ஜாதகிக்கு சந்திரன் திசைக்கு அடுத்து வரும் செவ்வாய் திசை ( 13/08/2030 முதல் 13/08/2037 வரை ) 6,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 75% இன்னல்களை செவ்வாய் திசை முழுவதும் தொடர்ந்து குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த வண்ணமே இருக்கும்.

ஜாதகிக்கு செவ்வாய் திசைக்கு அடுத்து வரும் ராகு திசை ( 13/08/2037 முதல் 14/08/2055 வரை )  6,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 75% இன்னல்களை செவ்வாய் திசை முழுவதும் தொடர்ந்து குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த வண்ணமே இருக்கும். எனவே ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் சூரியன் திசையும், எதிர்வரும் சந்திரன் திசையும் சரியான வயதில் நல்ல யோகத்தை தருவதால், குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து சர,ஸ்திர,உபய ராசிக்கு உற்பட்ட யோக பலன்களை அனுபவிக்கும் யோகத்தை தருவது வரவேற்க தக்கதே, தற்பொழுது நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசையும் சிறப்பான நன்மைகளை செய்வதால் ஜாதகி கவலை கொள்ளாமல், தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் நடைமுறையில், எதிர்வரும் திசை அமைப்பில் இருந்து யோக பலன்களை அனுபவிப்பதே சிறப்பானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக