வியாழன், 10 மார்ச், 2016

கிரகங்களின் வக்கிரக நிலை சுய ஜாதகத்திற்கு யோக பலன்களை வழங்குமா? அவயோக பலன்களை வழங்குமா?



கேள்வி :

ஐயா வணக்கம். சூரியனால் ஏற்படும் கிரகங்களின் வக்கிரம் சந்திரனுக்கு இல்லை. புதன் மற்றும் சுக்கின் சூரியனை ஒட்டியே சற்றுப்பாதையில் வலம் வருவதால் இருவருக்கும் வக்கிர தோஷம் அவ்வளவாக பாதிக்காது. ஆனால் ராஜ கிரகங்களான குரு, சனி, செவ்வாய் இவற்றில் ஒன்றோ இரண்டோ அல்லது மூன்றும வக்கிரத்தில்க் உள்ளபோது பிறப்பவற்கள் வாழ்க்கையை எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்களுக்கு ஏற்றம்மா இறக்கம்மா ? பரிகாரம் உண்டா? விளக்கம் அளித்தால் பலருக்கும் பயன்படும்.

பதில் :

கிரகங்களின் வக்கிரக நிலை சுய ஜாதகத்திற்கு பலதரப்பட்ட சிரமங்களுக்கு பிறகு அபரிவிதமான வெற்றிகளை வழங்குகிறது என்றே சொல்லலாம், இருப்பினும் யோக பலன்கள் என்பது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமைக்கு உற்ப்பட்டே இருக்கும் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம், குறிப்பாக சனி வக்கிரகம் பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நீச்ச பங்க ராஜ யோகத்திற்கு ஒப்பான பலன்களை தருகிறது என்றே சொல்லலாம், சுய ஜாதகத்தில் சனி வக்கிரகம் பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் மன வலிமையை அதிகரிக்கும், எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாக திகழ்வார்கள், ( கல் மனசு ) எவ்வித பாதிப்பும் ஜாதகரை முடக்கிவிட வாய்ப்பில்லை, ஜாதகருக்கு வரும் இன்னல்களே ஜாதகரின் வெற்றிக்கு காரணமாக அமைந்து விடும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் சுயமாகவே நிறைவேற்றி கொள்ளும் வல்லமையை தரும், லட்சியங்கள், குறிகோள்கள் போன்றவற்றை அடைவதற்கு முழு முயற்ச்சியை எடுக்க வைக்கும், மனதில் நினைத்த காரியத்திற்காக வைராக்கியத்துடன் போராடும் வல்லமையை தரும்.

சுய ஜாதகத்தில் வக்கிரகம் பெற்ற கிரகம் எந்த பாவகத்தில் அமர்கிறதோ அந்த பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பின், ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து தீவிரமான யோக பலன்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் வக்கிரகம் பெற்ற கிரகம் எந்த பாவகத்தில் அமர்கிறதோ அந்த பாவகம் மிகவும் வலிமை அற்று இருப்பின், ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக வழியில் இருந்து அவயோக பலன்களை தீவிரமாக வழங்கும், எனவே ஜாதகர் சுய ஜாதகத்தில் வக்கிரகம் பெற்ற கிரகம் அமர்ந்த பாவகம், வலிமையாக உள்ளதா, வலிமை அற்று உள்ளதா என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, வலிமை பெற்ற பாவகத்தில் வக்கிரகம் பெற்ற கிரகம் அமர்ந்து இருப்பின், ஜாதகருக்கு மிகுந்த நன்மையான பலன்களே நடைபெறும், வலிமை அற்ற பாவகத்தில் வக்கிரகம் பெற்ற கிரகம் அமர்ந்து இருப்பின், ஜாதகருக்கு தீமையான பலன்களே நடைபெறும், மேலும் வலிமை பெற்ற பாவகங்களுக்கு அதிபதியாக வக்கிரக கிரகங்கள் வருமாயின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களே நடைபெறும்.

உதாரணமாக சுய ஜாதகத்தில் சுக ஸ்தானமான 4ம் பாவகம் வலிமை பெற்று 4ம் பாவகத்திற்க்கு அதிபதியாக வக்கிரக கிரகம் பெற்ற கிரகம் வருமாயின், ஜாதகருக்கு சொத்து சுக சேர்க்கை என்பது  எதிர்பாராமல் கிடைக்கும், சுக போக வாழ்க்கையை ஜாதகர் வாழ்நாள் முழுவதும் பெரும் யோகத்தை தரும், தனது தேவைகள் அனைத்தையும் ஜாதகர் மிக எளிதாக பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பங்களை இயற்க்கை சிறப்பாக அமைத்து தரும், ஜாதகரின் குணாதிசியம் பலரும் மெச்சும் வண்ணம் அமைந்து இருக்கும், அறிய கலை பெருட்களை தேடி சேகரிக்கும் தன்மை இயற்கையாக அமைந்திருக்கும், மாற்று சிந்தனை மூலம் தனக்கு ஏற்ப்பட்டுள்ள இன்னல்களுக்கு சிறப்பான தீர்வுகளை கண்டு பிடிக்கும் வல்லமையும், தன்னை நம்பி வரும் அன்பர்களுக்கு சிறப்பான வாழ்க்கை வழிமுறைகளை தெளிவாக போதிக்கும் வல்லமை பெற்றவர்களாக திகழ்வார்கள்.

சனி வக்கிரகம் :

ஜாதகருக்கு ஸ்திரமான மன ஆற்றலை வழங்கும், எதையும் தாங்கும் வல்லமையும், இழப்புகளையும், அதிர்ஷ்டத்தையும் ஒரே விதமாக பார்க்கும் மன  நிலையை தரும், ஜாதகருக்கு செய்யும் தொழிலில் சீரான முன்னேற்றத்தை தாராமல், விட்டு விட்டு தொழில் செய்யும் தன்மையை தரும் அல்லது பல்வேறு தொழில்களை செய்து நிலையான வெற்றியை பெற இயலாமல் தனது அறிவு திறனையும், தனிப்பட்ட திறமைகளையும் வீணாக விரையம் செய்யும் சூழ்நிலையை தரும், ஜாதகரின் உழைப்பை ஒருவரோ ஒருவருக்கு மேற்ப்பட்டவர்களோ சுரண்டும் தன்மையை தரும், விழிப்புணர்வு பெறுவதற்கு ஜாதகருக்கு வெகு காலம் பிடிக்கும், ஜாதகர் ஒருவேளை சனி பகவானுக்கு  முறையாக வக்கிரக நிவர்த்தி செய்தால், அடுத்த நாள் முதல்  மேற்கண்ட பலன்களுக்கு எதிர்மறையான யோக பலன்கள் நடைமுறைக்கு வர ஆரம்பித்துவிடும், ஜாதகரின் தொழில் மற்றும் லாப யோகங்களை எவராலும் தடுக்க இயலாது, வாழ்க்கையே வசந்தமாக மாறிவிடும்.

குரு வக்கிரகம் : 

ஜாதகருக்கு  இயற்க்கை முரணான வெற்றிகளையும், வீண் பிடிவாதத்தால் தனது  லட்சியங்களை பிறர் நலம் பாராமல் பெரும் தன்மையை தரும், சுய நலம் மிகும், அனைவரையும் அதிகாரத்திற்கு கிழ் அடிபணிய வைக்கும் அறிவு திறனை தரும், நாத்திக தன்மை மேலோங்கும், பகுத்தறிவு மேலோங்கும், வாதத்திறமை மூலம் எதிரிகளை வெல்லும் யோகம் உண்டாகும், சத்தியத்தை காக்க முரண்பட்ட வழிமுறைகளை கையாளும் யோகத்தை  தரும், சாஸ்திர ஞானம் இயற்கையாக அமையும், அனுபவங்கள் ஜாதகருக்கு சிறந்த நிர்வாக திறனை வாரி வழங்கும், அனைவரும்  தோல்வியடையும் விஷயங்களில் ஜாதகர் தன்னிறைவான வெற்றியை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை இயற்க்கை வாரி வழங்கும், செல்லும்  இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்ப்பையும், சிறப்பான கௌரவம் மற்றும்  அந்தஸ்தை பெற்று தரும், ஜாதகர் முறையாக குரு பகவானுக்கு வக்கிரக நிவர்த்தி  செய்தால், மேற்கண்ட பலன்களில் அபிவிருத்தியும், நல்ல புத்திர பாக்கியத்தையும், தாம் அமர்ந்த பாவக வழி, பார்த்த பாவக வழியில் இருந்து யோக பலன்களை அதிகரிக்க செய்வார்.

செவ்வாய் வக்கிரகம் :

ஜாதகருக்கு இயற்கையாக வீர சாகசங்களில் ஈடுபாடு உண்டாகும், வீர விளையாட்டுகளில்  ஆர்வமும், வெற்றியும் வந்து குவியும், சிறந்த மருத்துவ வல்லுனராக ஜாதகர் திகழ்வார், கைராசி நிறைந்த அன்பராகவும்,  நீதி  நேர்மைக்கும், சத்தியத்திற்கும் போராடும் பெரிய மனிதராக திகழ்வார், எதிர்ப்புகளை மிக எளிதாக கையாண்டு வெற்றியை பெரும் யோகம் உண்டாகும், எவ்வித வலியையும் தாங்கும் உடல் வலிமையையும், சந்தர்ப்பங்கள் மற்றும் சூழ்நிலைகளை தமக்கு சாதகமாக மாற்றி அமைத்துகொள்ளும் வல்லமையும் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்திருக்கும், உடல் மனம் இரண்டையும் சிறப்பாக கையாளும் வல்லமை பெற்றவர்கள், பொது வாழ்க்கையில் அறிய உயர் பதவிகளை மிக எளிதாக பெறுவதற்கு தகுதியானவர்களாக திகழ்வார்கள், மிக சிறந்த சாரதியாக விளங்குவார்கள், வாகனங்களை இயக்குவதில் வல்லவர்களாக திகழ்வார்கள், நுட்பமான விஷயங்களில் நல்ல தேர்ச்சி உண்டாகும், தான்  எடுத்துக்கொண்ட காரியத்தில் முன்னிலை பெற எவ்வித வழிமுறையும் கையாளும் தன்மையை பெற்றிருப்பர்கள், ஜாதகர் முறையாக செவ்வாய் பகவானுக்கு வக்கிரக நிவர்த்தி செய்தால், குருரா எண்ணங்கள் மறைந்து தெளிவு பிறக்கும், தமக்கு அமைந்த சிறப்பு திறைமைகளை பயன்படுத்தி பூ உலகிற்கு அறிய பல நற்காரியங்களை செய்யும் பரோபகாரியாக ஜாதகர் திகழ்வார், ஜாதகரின் நிர்வாக திறமை பெரிய சாதனைகளுக்கு அடித்தளமாக அமையும், பொது வாழ்க்கையில் புகழ் பெரும் யோகம் உண்டாகும்.

குறிப்பு :

கிரகங்களின் வக்கிரக நிலை சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு ஏற்ப்பவே பலன்களை தருகிறது, சுய ஜாதகங்களில் வலிமை பெற்ற பாவகத்தில் அமர்ந்த வக்கிரக கிரகங்கள் ஜாதகரின் அதிரடியான வெற்றிக்கும், சிறப்பான பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும், ஒருவேளை பாதிக்க பட்ட பாவகத்தில் அமர்ந்தாலோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவகத்தில் அமர்ந்தாலோ ஜாதகரின் பாடு படு திண்டாட்டம்தான், வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிவிடும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையை தெளிவாக தெரிந்து கொள்வதே அடிப்படை விஷயம், அதன் பிறகு வக்கிரக கிரகங்கள் ஜாதகருக்கு தரும் பலாபலன்களை ஆய்வு செய்து தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு துல்லியமான ஜாதக பலன்களை கூற உதவிகரமாக அமையும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

1 கருத்து: