வெள்ளி, 15 ஜூலை, 2016

தொழில் முன்னேற்றமும்,நடைபெறும் சுக்கிரன் திசை வழங்கும் பலன்களும் !



ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் பாவக தொடர்பு அதன் வலிமையும் மிக முக்கிய காரணியாக அமைகிறது என்றால் அது மிகையில்லை, "அவன் இன்றி அணுவும் அசையாது" என்பதற்கு இணங்க சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே நடைபெறும் யோக அவயோகங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்றால் அது மிகையில்லை, ஒருவேளை சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்க பட்டு இருப்பின் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருந்தால், ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும்.
 மாறாக பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தவிர்க்க இயலாது, பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் மிக சிறப்பாக எதிர்கொண்டு நன்மையை பெறுவதற்கு ஆயத்தப்படுவதே சிறப்பானதாக ஜோதிடதீபம் கருதுகிறது, கீழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ஜாதகர் தமது சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் எவ்வித யோக அவயோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுகிறார், திசா புத்திகள் வழங்கும் பலாபலன்கள் என்னவென்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் !


லக்கினம் : மிதுனம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : ரேவதி 2ம் பாதம் 

ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

2,4,8,10ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.

3ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

5,11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.

6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

மேற்கண்ட பாவக தொடர்புகளில் ஜாதகருக்கு வலிமை தரும்  அமைப்புகள் :

2,4,8,10ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.

3ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

5,11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும்  வாரி வழங்கும்.

மேற்கண்ட பாவக தொடர்புகளில் ஜாதகருக்கு வலிமை அற்ற  அமைப்புகள் :

1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை  வழங்கும், குறிப்பாக 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை வாரி வழங்கும்.

ஜாதகரின் கேள்வி தனது ஜீவன மேன்மை பற்றியதாக இருக்கின்றது என்பதால், ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமையை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! ஜாதகருக்கு 10ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும், மேலும் இந்த அமைப்பு ஜாதகருக்கு சிறந்த ஜீவன மேன்மையை வாரி வழங்கும், குறிப்பாக நல்ல வியாபாரியாக ஜாதகரை பரிணமிக்க செய்யும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணு நுண்ணறிவு தொழில் சார்ந்த வாய்ப்புகளை வாரி வழங்கும், ஜாதகரின் 3ம் பாவகம் ஸ்திர நெருப்பு தத்துவ ராசியில் அமைவது ஜாதகரின் அறிவு திறனின் வல்லமையையும், தான் செய்யும் தொழில் வழியில் இருந்து சகல முன்னேற்றங்களையும் பெரும் யோகத்தையும் தரும், ஜாதகரின் ஜீவன  ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியிலும், அது தொடர்பு பெரும் 3ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியிலும் அமைவது ஜாதகருக்கு மிகுந்த நன்மை தரும் அமைப்பே! எனவே ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து இன்னல்கள் இல்லை என்பதும், நல்ல வேலை அல்லது தொழில் அமையும் என்பதும் தெளிவாகிறது.

அடுத்தது ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை எவ்வித பலன்களை வழங்குகிறது என்பதை கவனத்தில் கொள்வோம், ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித அவயோக பலனை தருவதே தற்போழுது பிரசனையாகிறது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற போதிலும் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக  பாதிக்கிறது, மேலும் ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு, பாக்கியம் என்று வழங்கும் 9ம் ராசியாகவும், உபய நெருப்பு தத்துவ ராசியாக அமைவது ஜாதகர் எதிர் பால் அமைப்பினரிடம் இருந்து இன்னல்களையும், கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் வழியில் இருந்து அதிக அளவில் மன கவலைகளையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், மேலும் பாதக ஸ்தானம் வழங்கும் பலாபலன்களில் இருந்து ஜாதகர் மீண்டுவருவது அவசியமாகிறது, மற்றவர்களால் தமது எதிர்காலம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, மிகவும் எச்சரிக்கை உடன் அணைத்தது விஷயங்களையும் கையாள்வது ஜாதகருக்கு நன்மையை தரும், சுக்கிரன் திசை ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை ஜாதகர் பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களின் தாக்கம்  மிகவும் அதிகமாக உள்ளதை மறுக்க இயலாது.

சுக்கிரன் திசையில் கடந்த சந்திரன் புத்தியும் ஜாதகருக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகரை வருமானத்திற்கு திண்டாடும் சூழ்நிலையை உருவாக்கி, மிகுந்த மன வேதனையையும் மன போராட்டங்களையும் வாரி வழங்கி இருக்கும், தற்போழுது நடைபெறும் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு நல்ல ஜீவன மேன்மையை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை, குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறையில் ஜாதகர் நல்ல வேலை வாய்ப்பை பெறுவார் என்பது வரவேற்கத்தக்க அமசமாகும், இனிவரும் எதிர்காலம் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, பாதக ஸ்தானம் வழங்கும் பாதிப்பில் இருந்து வெளிவர ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொள்வதும், பாதக ஸ்தான ஸ்தான பலனை ஏற்று  கொள்வதும் ஜாதகருக்கு நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 5,11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த யோகங்களை 100% விகிதம் 5,11ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க விஷயமாகும், எனவே ஜாதகர் 5,11ம் பாவக வழியில் இருந்து யோகங்களை பெறுவதற்கு  உண்டான முயற்சசிகளை மேற்கொள்வது சகல நலன்களையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து: