சனி, 2 ஜூலை, 2016

திருமண பொருத்தத்தில் ஏகதிசை சந்திப்பும், இனிமையான இல்லறவாழ்க்கையும் !


திருமண பொருத்தத்தில் வரன் மற்றும் வதுவின் ஜாதகங்களில் ஏககாலத்தில் இருவருக்கும், ஒரு கிரகத்தின் திசை நடைமுறையில் இருந்தாலோ, எதிர்காலத்தில் நடைமுறைக்கு வந்தாலோ, அது பொருத்தமற்ற ஜாதக அமைப்பாக கருதப்படுகிறது, இதனால் இல்லற வாழ்க்கையில் பிரிவு நிலை வர கூடும் என்று அறிவுறுத்தப்படுகிறது, மேலும் திருமண பொருத்தம் காணும் பொழுது ஏகதிசை நடைமுறையில் இருப்பின் எவ்வித இன்னல்களை தம்பதியர் அனுபவிக்க நேரும் என்பதை  கீழ்கண்டவாறு பட்டியல் இடுகின்றனர்.

1) வது வரன் ஜாதகத்தில், இருவருக்கும் ஒரே கிரகத்தின் திசை நடைமுறையில் இருப்பின், தம்பதியருக்கு ஒரே மாதிரியான பலன்கள் நடைபெறும், சுப கிரகத்தின் திசை எனில் இருவருக்கும் நன்மை நடைபெறும், அசுப கிரகத்தின் திசை எனில் இருவருக்கும் தீமையான பலனே நடைபெறும், மேலும் எதிர்காலத்தில் இதே நிலை தொடரும்.
2) தம்பதியரின் வாழ்க்கையில் ஒற்றுமை இருக்காது பிரிவை தரும், மனவாழ்க்கை சிரமத்தை தரும்.
3) திருமணத்திற்கு இது பொருத்தம் அற்ற நிலையை தரும்.
4) குழந்தை பாக்கியத்தில் தடையை தரும்.
5) தம்பதியரின் வாழ்க்கையில் பொருளாதார சிக்கல்கள் அதிக அளவில் வரும்.
6) உடல் மனம் மற்றும் பொருளாதார சிக்கல்களை தம்பதியர் இருவரும் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.
7) மறுமணம் செய்யும் சூழ்நிலைக்கு இருவரையும் ஆளாக்கும்.

வது வரன் ஜாதகத்தில் ஏக காலத்தில் ஒரு கிரகத்தின் திசை நடைபெறுமாயின், மேற்கண்ட காரணங்கள் தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவு வரும் என்பதால் திருமண பொருத்தம் இல்லை என நிராகிக்கின்றனர், இதைப்பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, கீழ்கண்ட உதாரண ஜாதகங்களை துணைகொண்டு.

வரன் ஜாதகம் 


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : துலாம் 
நட்ஷத்திரம் : சித்திரை 3ம் பாதம் 

தற்போழுது நடைபெறும் திசை  : குரு ( 10/07/2007 முதல் 10/07/2023 வரை )

வது ஜாதகம் 



லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 4ம் பாதம் 

தற்போழுது நடைபெறும் திசை  : குரு ( 23/02/2014 முதல் 23/02/2030 வரை )

மேற்கண்ட ஜாதகங்களுக்கு பொருத்தம் பார்த்த பொழுது, ஜாதகரின் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்ட விஷயம் யாதெனில், ஜாதகத்தில் இருவருக்கும் தற்போழுது குரு திசை நடைபெறுகின்றது, எனவே ஏக திசை நடைபெறுவதால் திருமண பொருத்தம் இல்லை, மேலும் அடுத்து வரும் சனி திசை இருவருக்கும் அதிக துன்பத்தை தரும், மணமகனுக்கு  சனி திசை ஆரம்பித்தவுடன் ( 10/07/2023) திருமண வாழ்க்கையில் பிரிவை தரும் என்பதால் இருவருக்கும் பொருத்தம் இல்லை, எனவே திருமணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.

பொதுவாக திருமண பொருத்தம் காணும் பொழுது மேற்கண்ட கூற்று  ( ஏகதிசை பொருத்தம் ) கடந்த சில வருட காலமாக பிரபல்யம் அடைந்து வருகிறது, தம்பதியர் இருவருக்கும் தற்ப்பொழுதோ, எதிர்காலத்திலோ ஒரு கிரகத்தின் திசை ஏக காலத்தில் நடைமுறைக்கு வந்தால் இல்லற  வாழ்க்கைக்கு உகந்ததல்ல, நிச்சயம் பிரிவை தரும் என்ற கருத்து ஜோதிட உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் மேற்சொன்ன  7 காரணங்களையும் தவறான கருத்தாகவே உள்ளது என்பதை தெளிவு படுத்த விரும்புகிறது.

மேற்கண்ட இருவரது ஜாதகத்திலும் உள்ள உண்மை நிலையை பற்றி சிந்தனைக்கு  எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

வரனின் ஜாதகத்தில் நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் :

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை 5ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகுந்த நன்மைகளை  தான் கற்ற கல்வி வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியாகவும், உபய மண் தத்துவ அமைப்பிலும் உள்ளது, ஜாதகரின் வெற்றிகரமான யோக வாழ்க்கையை தெளிவுபடுத்துகிறது, ஒரு  நல்ல நிறுவனத்தில்  கை நிறைவான வருமானத்துடன் ஜாதகர் சிறப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றார் என்பதை தெளிவு படுத்துகிறது, எனவே ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை லாபஸ்தான பலன்களை வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

வதுவின் ஜாதகத்தில் நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் :

ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை 6,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அபரிவிதமான யோக பலன்களை தந்து கொண்டு இருக்கின்றது, எனவே ஜாதகி 6ம் பாவக வழியில்  இருந்து குறுகிய கால வெற்றிகளையும், திடீர் அதிர்ஷ்டங்களை, பெறுபவர் என்பதையும், 9ம் பாவக வழியில் இருந்து தமது சுய அறிவு கொண்டு கற்ற கல்வி வழியில் இருந்து மிகுந்த நன்மைகளையும் யோகங்களையும் பெறுவதை குறிக்கிறது, மேலும் ஜாதகியின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியாகவும், சர நெருப்பு தத்துவ  ராசியில் இயங்குவதால் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் ஜாதகியை பிரகாசிக்க செய்யும் அதன் வழியில் இருந்து நன்மைகளும் யோகங்களும் ஜாதகிக்கு நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்க தக்கது, மேலும் முன்னோர்கள் ஆசிர்வாதமும் ஆன்மீக பெரியோர்களின் ஆசியும் ஜாதகிக்கு மிகப்பெரிய புகழையும், பெருமைகளையும் கொண்டு வந்து சேர்க்கும்

வரனின் ஜாதகத்தில் அடுத்து வரும் சனி திசை தரும் பலன்கள் :

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சனி திசை பலனை தருவது, ஜாதகருக்கு வாக்குவாத தன்மையை அதிகரிக்கும், வருமானம் மேலோங்கும், வீண் செலவுகளை தவிர்க இயலாது, 8ம் பாவாக  வழியில் இருந்து பூரண ஆயுளை தரும், மேலும் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாக, உபய காற்று தத்துவத்தில் அமைவது ஜாதகருக்கு எடுக்கும் முயற்சசிகளில் வெற்றிகளையும், திடீர் அந்தஸ்த்தையும் தரும், எனவே சனி திசை ஜாதகருக்கு 30% விகித  இன்னல்களையும், 70% விகித நன்மையையும் தரும் என்பதால் மன வாழ்க்கையில் நிச்சயம் பிரிவு வாராது. ஆயுள் பாவகம் உபய ராசி என்பதால் இன்னல்கள் பெரிய பாதிப்பை தாராது.

வதுவின் ஜாதகத்தில் அடுத்து வரும் சனி திசை தரும் பலன்கள் :

1,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், யோக பலனை தருவது, ஜாதகிக்கு 1ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமும்,லாபமும், 11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டமும், தன்னம்பிக்கை மிக்க மன ஆற்றலையும், முற்போக்கு சிந்தனையையும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை மூலம் மிகுந்த நன்மைகளையும், வாழ்க்கை துணையுடன் சந்தோஷமான யோக வாழ்க்கையையும், 10ம் பாவக வழியில் இருந்து கவுரவம் மிக்க வாழ்க்கையையும், தேடிவரும் அந்தஸ்த்தையும் ஒருங்கே பெரும் யோகத்தை தரும், மேலும் ஜீவன வழியில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றங்களையும் வாரி வழங்கும் என்பதால் இந்த ஜாதகங்களை திருமணத்தில் இணைக்கும் பொழுது இல்லற வாழ்க்கை நிச்சயம் இனிக்கும் என்பதில் மாற்றம் இல்லை, இதுவே மேற்கண்ட இருவரது ஜாதகத்திலும் உள்ள உண்மை நிலை.

பட்டியல் இட்ட 7  கருத்துக்களுக்கு உண்மை விளக்கங்கள் :

1) வது வரனின் ஜாதகத்தில் இருவருக்கும் ஒரே திசை நடைமுறையில் இருந்தால், இருவருக்கும் நடக்கும் சம்பந்தப்பட்ட கிரகத்தின் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, ஏனெனில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது  என்ற அடிப்படை விஷயம் தெரிந்தால் மட்டுமே அது நன்மையை செய்கிறதா? தீமையை செய்கிறதா என்பதில் தெளிவு பெற இயலும், சுப கிரகத்தின் திசை நன்மையை செய்யும் என்று கருதுவதும், அசுப கிரகத்தின் திசை தீமையை செய்யும் என்று கருதுவதும் ஜோதிட உண்மைக்கு புறம்பான கருத்தாக அமையும், மேலும் ஒரு கிரகத்தின் திசை இருவருக்கும் நடைபெற்றால் இருவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடைபெறும் என்று நினைப்பதும் ஜோதிட உண்மைக்கு புறம்பானதே.

2) தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவை தரும் என்பது முற்றிலும் தவறான கருத்து, தம்பதியரின் இருவரின் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே இல்லற வாழ்க்கையில் பிரிவு வரும், அதுவும் நடைபெறும் திசாபுத்திகள் பாதிக்கப்பட்ட 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே இது சாத்தியம். சுய ஜாதகத்தில் இருவருக்கும் 2,7ம் வீடுகள்  வலிமை பெற்று இருப்பின் பிரிவு என்ற நிலை வர வாய்ப்பே இல்லை என்பது கவனிக்கத்தக்க அமசமாகும்.

3) தம்பதியர் இருவருக்கும் நடைபெறும் ஒரே கிரகத்தின் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நிச்சயம் பொருத்தம் உண்டு, 

4) குழந்தை பாக்கியத்திற்கும் திசாபுத்திக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை, சுய ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தை தரும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருந்தால், நடைபெறும் திசை வலிமை அற்ற பலனை நடத்தினாலும் தம்பதியருக்கு நல்ல குழந்தை பேறு அமையும், மேற்கண்ட இருவரது சுய ஜாதகத்திலும் 5ம் பாவகம் மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது.

5) பொருளாதார சிக்கல்களுக்கும் நடைபெறும் ஏக திசை பலாபலன்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, ஏனெனில் சுய ஜாதகத்தில் பொருளாதார நன்மை தீமைகளை தருவதற்கு பாவக வலிமையே காரணமாக அமையும்.

6) சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே மேற்கண்ட இன்னல்கள் வரக்கூடும், மேற்கண்ட ஜாதகங்களில் இந்த பாவகங்கள் நல்ல வலிமையை பெற்று இருக்கின்றது.

7) சுய ஜாதகத்தில் 1,2,5,7,8ம் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே மறுமணம் அமையும், அதற்கும் 11ம் பாவகம் வழிகாட்ட வேண்டும்.

குறிப்பு :

திருமண பொருத்தம் காணும் பொழுது வரன்வதுவின் ஜாதகங்களில், ஏகதிசை நடைமுறையில் இருந்தால், நடைபெறும் திசை, எதிர்வரும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா ? வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெற்று பொருத்தம் நிர்ணயம் செய்வதே சாலச்சிறந்தது, மேலும் இருவருக்கும் ஏகதிசை நடைமுறையில் இருந்தால் பொருத்தம் இல்லை என நிர்ணயம் செய்வது, வது வரனின் ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் ஏற்றுநடத்தும் பாவக வலிமையை பற்றியும், அவை தரும் நன்மை தீமையை பற்றியும் சிறிதும் அறியாமல் செய்யும் முடிவே அன்றி வேறு எதுவும் உண்மை இல்லை அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

3 கருத்துகள்:

  1. ஐயா எனக்கு படிப்பும் தடை,வேலையும் அமையவில்லை,32 வயது திருமணமும் நடக்க வில்லை.கடன்,கஷ்டங்கள். அப்பாவிற்கு சிறுநீறகம் சேயல்இழந்து விட்டது.அம்மா விற்கு கருப்பை கட்டி என அனைத்து வகையிலும் துன்பத்தை அனுபவிக்குறேன்.எனது நிலைமை எப்போது மாறும்.கஷ்டம் தீறுமா.லாரி தொழில் தொடங்கலாமா? திருமணம் நடக்குமா? சாவின் விழிம்பிற்கு சொன்று விட்டேன் ஐயா. அம்மா,அப்பா வை பார்க்க வேண்டும் கடைசிவரை என்று உயிர் வாழ்கிறேன்.லாரி வாங்கி தொழில் செய்யலாமா? ஐயா எனக்கு வழிஇருந்தால் சொல்லுங்கள் ஐயா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். பெயர்:ராஜேஷ்குமார்.பிறந்த தேதி:1.8.1985.பிறந்தஊர்:கருர்.நேரம்:2.00am

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் முறையாக முன் அனுமதி பெற்று நேரில் வந்து ஜாதக ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்

      நீக்கு