புதன், 12 அக்டோபர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - மிதுன லக்கினம் !



திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "மிதுன" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                  

மிதுன லக்கினம் :

4ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மிதுன லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, சுக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குரு தங்களின் வாழ்க்கையில் சுக போகங்களில் நாட்டத்தை குறைக்கும், வண்டி வாகனம், வீடு இடம் நிலம் ஆகிய அமைப்புகளில் இருந்து இன்னல்களை தரும், தாய்வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களும், காரிய தடைகளும் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, மற்றும் நிலம்,வீடு,வண்டி,வாகனம் போன்றவற்றை வாங்குவதற்காக, கடன் பெறுவது தங்களின் வாழ்க்கையில் சிரமங்களை மேலும் அதிகரிக்கும், மேற்கண்ட விஷயங்களில் முதலீடு செய்வதும் தங்களின் பொருளாதார சுமையை வெகுவாக அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்க, தங்களின் குண நலன்கள் வெகுவாக பாதிக்கப்படும் என்பதால் அனைவரிடமும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் செயல்படுவது தங்களின் முன்னேற்றத்திற்கு வெகுவான நன்மைகளை வாரி வழங்கும், தங்களின் சிந்தனை திறன் குறையும் என்பதால் சரியான திட்டமிடுதல்கள் தங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும், தனிப்பட்ட விஷயங்களில் யாரிடமும் ஆலோசனை பெறுவதை தாங்கள் தவிர்ப்பதே நல்லது, மேலும் ரகசியம் என்று கருதும் விஷயங்களை எக்காரணத்தை கொண்டும் வெளிபடுத்த வேண்டாம், இதனால் தங்களுக்கு அதிக சிக்கல்களும் சிரமங்களும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் கேளிக்கைகளில் கவனம் செலுத்தாமல், பொறுப்புணர்வுடன் இந்த குரு பெயர்ச்சியை கடந்து செல்வது தங்களுக்கு மிகுந்த யோகத்தை தரும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகத்தை வசீகரிப்பது, மிதுன லக்கின அன்பர்களுக்கு, உடல் சார்ந்த தொந்தரவுகளை அதிகரிக்க கூடும், உடல் நலம் மனநலம் இரண்டும் தங்களுக்கு வெகுவாக பாதிக்க வாய்ப்பு உண்டு, மேலும் சுய தொழில் செய்யும் அன்பர்களுக்கு இது சரியான நல்ல நேரம் அல்ல என்பதை கருத்தில் கொண்டு ஜீவனத்தை மேற்கொள்வது உகந்தது ஆகும், புதிய முயற்ச்சிகள் மற்றும் முதலீடுகள் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவை தரக்கூடும், மாற்றும் மதம் மற்றும் இனம் சார்ந்த அன்பர்களால் தாங்கள் வெகுவான பதிப்பை சந்திக்கும் சூழ்நிலையை தரும், திடீர் இழப்புகளையும், வீண் விரையங்களையும் தவிர்க்க சரியான திட்டமிடுதல்கள் தேவை, பாதுகாப்பான பயணம் தங்களின் உடமைக்கும், உயிருக்கும் காவலாக அமையும், திடீர் முடிவுகளால் தாங்கள் எதிர்பாராத இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், கௌரவ குறைவான காரியங்களில் தாங்கள் ஈடுபடாமல் இருப்பது நல்லது, மேலும் தங்கள் துறை சார்ந்த விஷயங்களில் நல்ல நிர்வாக திறமையை செயல்படுத்தும் காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையும், பொதுநலம் சார்ந்த உதவிகள் மற்றும் செயல்பாடுகள் தங்களின் சிரமங்களை வெகுவாக குறைக்கும், செய்யும் தொழிலில் மிகுந்த கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது தங்களுக்கு பேரிழப்புகளை தவிர்க்க உதவும், மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை வாரி வழங்கும் என்பதை கவனத்தில் கொள்க, மிகுந்த விழிப்புணர்வுடன் காரியமாற்ற வேண்டிய சூழ்நிலையில் தாங்கள் இருக்கின்றீர்கள்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை வசீகரிப்பது, மிதுன லக்கின அன்பர்களுக்கு, செய்யும் தொழில் மற்றும் பணியில் எதிர்பாராத மன நிம்மதி இழப்பை தரும், தொழில் முடக்கம், ஜீவன முன்னேற்றம் இன்மை, அதிக வேலை பளு, தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தி சுய மரியாதையை இழத்தல், மற்றவர்கள் விஷயங்களில் தலியீடு செய்வதால் வரும் அவமரியாதை, சுய சிந்தனை வெகுவாக பாதிக்கப்படும் தன்மை, அனைவராலும் தொல்லை மற்றும் மன நிம்மதி இழப்பு, குறிக்கோள் அற்ற வாழ்க்கை முறை, எதிர்பாராத நிகழ்வுகளால் மனசோர்வு, தன்னம்பிக்கை இழத்தல், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் நெருக்கடிகள், பொருள் இழப்பு, எதிராளிகள் மூலம் வரும் தொல்லைகள் மற்றும் காரிய தடைகள், இல்லற வாழ்க்கையில் எதிர்பாராமல் நடைபெறும் சிக்கல்கள், உறவுகள் வழியில் இருந்து வரும் சிரமங்கள், வேலை செய்யும் இடத்தில் இருந்து வரும் எதிர்ப்புகள் மற்றும் பதவி இழப்பு, வருமானத்திற்கு மீறிய செலவினங்கள், சுயமாக எடுக்கும் முடிவுகளால் வரும் மன நிம்மதி இழப்பு, தெய்வீக பலம் அற்று போகுதல், பெரியோர் ஆதரவு இன்மை, அதனால் வரும் துன்பங்கள், முற்றிலும் முடங்கும் ஜீவன வழக்கை, சுய வாழ்க்கையில் வரும் அவமானங்கள், வம்பு வழக்குகள், குடும்பத்தை விட்டு பிரிவு நிலை, வேறு தேசத்திற்கு அல்லது ஊருக்கு சென்று பரதேச ஜீவனம் மேற்கொள்ளும் தன்மை, பொது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் என இந்த குரு பெயர்ச்சி தங்களின் வாழ்க்கையில் மிகுந்த இன்னல்களையே ஜீவன ஸ்தான அமைப்பில் இருந்து வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை விறைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பது, மிதுன லக்கின அன்பர்களுக்கு, உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்க கூடும், எதிர்பார்ப்புகள் அனைத்து இடங்களில் இருந்தும் வரும், மன நிம்மதி இழப்பின் மூலம் உடல் நலம் வெகுவாக பாதிக்கும், மன பயமும் பதட்டமும் தங்களின் செயல்திறனை வெகுவாக பாதிக்கும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், வருமான தடைகள், இழப்புகள், நிம்மதியின்மை, எதிர்பாராத மருத்துவ செலவுகள், மன உளைச்சல் இவற்றால் தீய பழக்க வழக்கங்களுக்கு தாங்கள் ஆர்படும் சூழ்நிலையை தர கூடும், குடும்ப வாழ்க்கையில் தங்களின் பேச்சுக்கு மதிப்பு வெகுவாக குறையும், வீண் வாக்குவாதமும், பிடிவாத குணமும் தங்களின் இல்லற வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், அனைவரிடமும் பகைமை பாராட்டும் சூழ்நிலைக்கு தள்ளபடுவீர்கள், இறை வழிபாட்டில் கவனம் குறையும், எதிர்ப்புகள் அதிகாரிக்கும், சேமிப்பு அனைத்தும் வீண் விறையம் ஆக வாய்ப்பு உண்டு, பொருளாதர சிக்கல்கள் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்ப்படுத்தும், தனிப்பட்ட ஆசைகள் மற்றும் லட்சியங்கள் நிறைவேற அதிக அளவில் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும், யாரிடமும் வீண் வாக்குவாதத்தை கையாள வேண்டாம், ஏனெனில் அது தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும், மனம் சார்ந்த இன்னல்களை அதிகரிக்கும், மேலும் பொருளாதார சிக்கல்களையும் பெரிய அளவில் தர கூடும், குடும்பத்தில் மிகுந்த அனுசரணையாக செல்வது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை தரும், குறிப்பாக வாழ்க்கை துணையுடன் அன்பு பாராட்டுவது தங்களுக்கு மிகுந்த நமைகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

மிதுன லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 4,8,10,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக