வியாழன், 13 அக்டோபர், 2016

சர்ப்ப தோஷ ஜாதகம் என்பதால், எதிர் வரும் கேது திசை எனக்கு இன்னல்களை வழங்குமா ?



 நவ கிரகங்கள் தனது திசா புத்திகளில் வழங்கும் பலாபலன்கள் பற்றி தெளிவு பெற, லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளின் வலிமை நிலையை தொடர்பு பெற்ற பாவக வழியில் இன்றது உணர்ந்து, திசா புத்திகள் வழங்கும் பலாபலன்களை துல்லியமாக கூறுவது ஒரு ஜோதிடனின் கடமையாகும், அதன் அடிப்படையில் தங்களின் சுய ஜாதக வீடுகளின் வலிமையின் அடிப்படையிலும், தற்பொழுது நடைபெறும் புதன் திசை வழங்கி கொண்டு இருக்கும் பலாபலன்கள் பற்றியும், எதிர்வர இருக்கும் கேது மற்றும் சுக்கிரன் திசைகள் வழங்கும் பலாபலன்கள் பற்றியும் துல்லியமாக கூற " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது, குறிப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் புதன் திசை வழங்கும் பலன்கள் பற்றியும், புதன் திசையில் நடைபெறும் சனி புத்தி வழங்கும் பலன்கள் பற்றியும் தங்களுக்கு விளக்கம் தர விரும்புகிறோம்,


தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் புதன் மற்றும் புதன் திசையில் சனி புத்தி 11/02/2017 தேதி வரை நடைமுறையில் உள்ளது, தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் புதன் திசையும் தங்களுக்கு உகந்த நன்மைகளை பெரிய அளவில் தரவில்லை, புதன் திசையில் சனி புத்தியும் தங்களுக்கு சிறப்பான யோக பலன்களை தரவில்லை என்பதே உண்மை, ஏனெனில் புதன் திசை தங்களுக்கு 4,6ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம்  பாவகத்துடன்  தொடர்பை பெற்று, அதன் பலாபலனை ஏற்று நடத்துவது தங்களின் வாழ்க்கையில், சுக ஸ்தான வழியில் இருந்து வண்டி வாகனம், சொத்து சுகம், வீடு நிலம் மற்றும் தாய் வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும், சத்ரு ஸ்தான அமைப்பில் இருந்து அனைவராலும் இன்னல்கள், துன்பம் மற்றும் மன நிம்மதி இழப்பு, வீண் பொருட்செலவுகள், சம்பாத்தியம் விறையம் ஆகும் தன்மை, அதனால் வரும் மன உளைச்சல், நினைத்தது நடைபெறாமல் தாமதம் ஆகும் சூழ்நிலை என்ற வகையில் இன்னல்களை தரும், மேலும் தங்களின் மன நிம்மதியும் மன சஞ்சலமும் தங்களின் முன்னேற்றத்திற்கு கடுமையாக பாதிப்புகளை வழங்கி இருக்கும், அதிக அளவிலான போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு தங்களின் ஜீவன வாழ்க்கையை நடத்தும் சூழ்நிலைக்கு ஆளாக்கி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 மேலும் தற்பொழுது நடைபெறும் சனி புத்தி தங்களுக்கு 4ம் வீடு விறைய ஸ்தானமான  12ம் பாவகத்துடன் தொடர்பை பெற்று, அதன் பலாபலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு சுக ஸ்தான அமைப்பில் இருந்து வீடு வண்டி வாகன வழியில் இருந்து வீண் இழப்புகள், தாய் வழியில் இருந்து வரும் இன்னகளை, மற்றும் அவர்களது உடல் நிலை பாதிப்பு, மற்றும் மருத்துவ செலவினங்கள், எதிர்பாராத பொருள் இழப்புகள், எடுக்கும் முயற்ச்சிகள் தோல்வி, தன்னம்பிக்கை குறைதல், வெற்றி வாய்ப்பை கடைசி நேரத்தில் இழக்கும் சூழ்நிலை, பல விதங்களில் இருந்து வரும் நிம்மதி இழப்பு, உறக்கமின்மை, அதனால் வரும் உடல் நல பாதிப்பு, சுபகாரியங்களில் வரும் தடைகள், தனிப்பட்ட முயர்ச்சியும் பலன் தாராமல் தோல்வியை தழுவும் சூழ்நிலை என தங்களின் வாழ்க்கையை வெகுவாக பதம் பார்த்து இருக்க வாய்ப்பு உண்டு, இந்த நிலை தங்களுக்கு எதிர் வரும் 11/02/2017 தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்பதால், தாங்கள் 4ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுகொள்ளவேண்டும், அல்லது விழிப்புணர்வுடன் இருந்து வரும் இன்னல்களில் இருந்து தங்களை நீங்களே தற்காத்து கொள்ள வேண்டும், மேலும் இந்த காலகட்டங்களில் தங்களின் குண நலன்களும், மற்றவர்களுடன் தாங்கள் பழகும் விதமும் வெகுவாக பாதிக்கப்படும், எனவே தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் புதன் திசையும் விறைய ஸ்தான பலனை தருகிறது, புதன் திசையில் நடைபெறும் சனி புத்தியும் விறைய ஸ்தான பலனை தருகிறது என்பதால் தாங்கள் விறைய ஸ்தான வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை சந்தித்து கொண்டு இருகின்றீர்கள் என்பது சொல்லி தெரிவதில்லை.

ஆனால் எதிர்வரும் கேது திசையும், அதற்க்கு அடுத்து வரும் சுக்கிரன் திசையும் தங்களுக்கு மிகுந்த யோக பலாபலன்களை வாரி வழங்குவது வரவேற்க தக்கது, தங்களுக்கு எதிர்வரும் கேது தசை 5,8,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் என்று வர்ணிக்க படும் 11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை வாரி வழங்குவது வரவேற்க தக்கது, தங்களின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியுடன் சம்பந்தம் பெற்று 100% விகித யோக பலன்களை வாரி வழங்குவது சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் தங்களுக்கு தொழில் மற்றும் ஜீவன வழியில் இருந்து வாரி வழங்கும், கேது திசை தங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு விலாசத்தை தங்களது வீட்டு வாயிற்படி கதவை தட்டி தங்களுக்கு வாரி வழங்கும், தங்களுக்கு கேது திசை ( 11/02/2017 முதல் 12/02/2024 வரை ) நடைமுறைக்கு வர இருக்கிறது என்பது தங்களுக்கு புத்துணர்ச்சியை வழங்கும் செய்தியாகும், இந்த கேது திசை 7 வருட காலகட்டத்தில் தங்களுக்கு 5ம் பாவக வழியில் இருந்து மிதமிஞ்சிய அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் அதிகரிக்கும், இதனால் தங்களின் ஜீவன முன்னேற்றம் அபரிவிதமாக வெற்றிகளை வாரி வழங்கும், செய்யும் தொழில் வழியில் தங்களின் அறிவு பூர்வமான செய்கையினால் வெற்றிகளை வாரி குவிக்கும் யோகத்தை நல்கும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டமும், புதையலுக்கு நிரகரான சொத்து சுக சேர்க்கையையும் வாரி வழங்கும், பெரும் செல்வமும் சொத்து சுக சேர்க்கையும் தங்களின் வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் யோகத்தை தரக்கூடும், முதலீடுகள் மூலம் அதிர்ஷ்டம் மற்றும் லாட்டரி யோகத்தை வாரி வழங்கும், நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் வாழ்க்கை துணையின் சொத்து மற்றும் பொருளாதார உதவிகளை பெறுவதற்கு உண்டான யோகத்தை தரும், 11 ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், புதுமையான திட்டமிடுதல்கள், புதிய முயற்ச்சிகள் மற்றும் சிந்தனைக்கள் மூலம் வாழ்க்கையில் மிகுந்த நன்மைகளை தாங்கள் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும், எனவே எதிர்வரும் திசை சர்ப்ப கிரகமான கேது திசை என்றாலும் அவர் ஏற்று நடத்தும் பாவக பலன் ஆனது லாபஸ்தானம் என்பதால் மிகுந்த நன்மையையும் யோகமும் உண்டாகும், சர்ப்ப தோஷம் தங்களுக்கு யாதொரு தீமையும் தாராது என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தியாகும்.

கேது திசைக்கு பிறகு சுக்கிரன் தனது திசையை 20 வருட காலம் நடத்த இருக்கின்றது, இந்த சுக்கிரன் திசை தங்களுக்கு வழங்கும் பலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம், சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்த சுக்கிரன் தங்களுக்கு 1,5,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, இதனால் தங்களுக்கு சுக்கிரன் திசை மிகுந்த யோக பலன்களை தான் தொடர்பு பெற்று ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், குறிப்பாக இலக்கின வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனையுடன் செயல்படும் தன்மை, எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு யோகத்தை தரும் அமைப்பு, புதுமையான முயற்ச்சிகள் யாவும் வெற்றி பெரும், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள் தங்களை தேடி வரும், 5 பாவக வழியில் இருந்து தங்களின் குழந்தைகளின் வழியில் இருந்து யோகமும், தங்களின் புத்திசாலித்தனம், சமயோசித அறிவு திறன் மூலம் வெற்றி வாய்ப்புகளை பெரும் யோகம், கற்ற கல்வி வழியில் இருந்து பெரும் அபரிவிதமான முன்னேற்றம், தெய்வீகத்தால் வரும் யோக வாழ்க்கை, குல தெய்வ ஆசியினால் பெரும் சகல சௌபாக்கியங்கள் என தங்களின் முன்னேற்றத்தை உறுதி படுத்தும், 7 பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணையின் ஆதரவு, நண்பர்கள் ஆதரவு, கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு மூலம் மிகப்பெரிய முன்னேற்றங்களை பெரும் யோகத்தை தரும், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள் வந்து சேரும், வெளிநாடு மற்றும் வெளியூர் அமைப்பில் இருந்து வரும் அபரிவிதமான முன்னேற்றம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும்.

8ம் பாவக வழியில் இருந்து தங்களுக்கு வரும் திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார வசதி வாய்ப்புகள் தங்களின் யோக வாழ்க்கையை உறுதி செய்யும், தங்களின் சிந்தனையும் செயல்பாடும் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்கும், அந்நிய நபர்கள் மூலம் எதிர்பாராத வருமான வாய்ப்புகளையும் முதலீடுகள் மூலம் திடீர் அதிர்ஷ்டமும் உண்டாகும், தங்களின் அறிவு திறனும், அதிபுத்திசாலித்தனமும் பிரகாசிக்கும் யோகம் உண்டாகும், செய்யும் காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றியை வாரி வழங்கும், நினைத்த அனைத்து காரியங்களும் தங்களுக்கு தடையின்றி நிறைவேறும், 11ம் பாவக வழியில் இருந்து தங்களின் தன்னபிக்கையும், சுய மரியாதையும் அதிகரிக்கும், அரசு கௌரவமும் மற்றும் பிரபலதன்மையும் அதிகரிக்கும், சுய தொழில் செய்யும் யோகமும் அதன் மூலம் பொருளாதார தன்னிறைவையும் வாரி வழங்கும், தங்களின் லட்சியங்கள் அனைத்தும் பரிபூர்ணமாக நிறைவேறும், பல தொழில் செய்யும் யோகமும், தொழில் நிமித்தமாக பல இடங்களுக்கு சென்று வரும் யோகமும் உண்டாகும், தங்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் முழு பலனையும் அணிபவிக்கும் யோக காலமாக எதிர்வரும் சுக்கிரன் திசை அமையும் என்பதில் சந்தேகம் இல்லை, தங்களது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனையே இனிவரும் கேது திசையும், அதற்க்கு அடுத்து வரும் சுக்கிரன் திசையும் ஏற்று நடத்துவதால் மிகப்பெரிய யோக வாழ்க்கை தர எதிர்காலம் காத்து கொண்டு இருக்கிறது, " வாழ்த்துகள் "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக