வியாழன், 20 அக்டோபர், 2016

சூரியன் திசை தரும் பாதக ஸ்தான பலன்களும், சுய ஜாதக யோக நிலையும் !


ஜாதக பொது பலன்கள் 

லக்கினம் : கன்னி 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 1ம் பாதம் 


சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,7ம் வீடுகள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின வழியில் இருந்து அதிக லாபங்களை, செல்வசெழிப்பையும் வாரி வழங்கும், பரஸ்பர உதவிகள் ஜாதகருக்கு வந்து குவியும், உடலில் உள்ள நோய் தொந்தரவுகள் விரைவில் குணம் அடையும், வருமுன் காக்கும் அறிவு திறன் உண்டாகும், நினைத்த நல்ல எண்ணங்கள் ஈடேறும், பெரியோர் ஆசியுடன் திருமணம் சிறப்பாக நடைபெறும், ஜாதகரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் , தனது ஆசைகள் மற்றும் விருப்பங்கள் ஏதாவது ஒரு வழியில் சிறப்பாக நடைமுறைக்கு வரும், புதிய சிந்தனைகள், புதிய யுக்திகள் மற்றும் புதுபுது இடங்கள் ஜாதகருக்கு வெற்றிகரமான யோக வாழ்க்கையை நல்கும், செல்லும் இடங்களில் எல்லாம் ஜாதகர் அறிய பல விஷயங்களை சாதிக்கும் வல்லமையை பெறுவார், அதிர்ஷ்டம் ஜாதகரை தேடி வரும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நினைத்த எண்ணங்கள் யாவும் சாதிக்கும் யோகம் உண்டாகும், வியாபாரம் செய்வதால் வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களும் உண்டாகும், அதிக வாகன யோகம், விவசாயம் சார்ந்த பண்ணை தொழில்களில் மிதமிஞ்சிய வருமானம், கமிஷன் வியாபாரம் மூலம் அளப்பரிய சொத்து சுக சேர்க்கை, நிறைய சொத்துக்கள், ஜோதிடம் மற்றும் கணிதத்தில் தேர்சசி, கலைகளில் ஆர்வம் மற்றும் தேர்சசி, வாத்திய கருவிகளை கையாளும் வல்லமை, எண்ணத்தின் வலிமையை சுய வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், தன்னம்பிக்கை குறையாத மன நிலை எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக மாறும் வாய்ப்பு, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் அபரிவிதமான சொத்து சுக சேர்க்கை, மக்கள் செல்வாக்கு, வியாபாரம் மற்றும் சுய தொழில் விருத்தி பெரும் யோகம், வியாதியில் இருந்து விரைவில் குணம்பெறும் யோகம், திருமணத்திற்கு பிறகு வரும் அதிர்ஷ்டகரமான யோக வழக்கை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பெரும் சொத்துக்கள் என்ற வகையில் சுப பலன்கள் நடைமுறைக்கு வரும்.

7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் மற்றும் தொழில் முறை கூட்டாளிகள் அமைவர், தெளிவான சிந்தனை உண்டாகும், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் யோகங்கள் மற்றும் ஆதரவு, புதிய வாய்ப்புகள், பொதுமக்கள் ஆதரவு மற்றும் அரசியல் பதவிகள் மூலம் முன்னேற்றம் பெரும் யோகம், வெளியூரில் பிரபல்ய யோகம், மக்கள் ஆதரவு மூலம் தொழில் விருத்தி உண்டாகும் யோகம், வாழ்க்கை துணையின் பூர்ண ஒத்துழைப்பு, சுய கவுரவம் பாதிக்கப்படாமல் முன்னேற்றம் உண்டாகும், தனது வாழ்க்கை துணை ஜாதகருக்கு மிகுந்த யோகங்களையும் மன மகிழ்ச்சியையும் வாரி வழங்குவார், குடும்ப வாழ்க்கை மற்றும் தாம்பத்திய உறவு மேம்படும், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து சுபயோக அதிர்ஷ்டங்களை தம்பதியர் இருவரும் பெறுவார்.

2,4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு  2ம் பாவக வழியில் இருந்து கை நிறைவான வருமானம், இனிமையான குடும்பம், இனிமையான பேச்சு திறன், சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், எழுதுபொருள் மற்றும் நூல்கள் மூலம் லாபம், நீண்ட பயணங்கள் மூலம் லாபம், வெளிநாடு மற்றும் அந்நிய தேசத்தை சார்ந்தவர்கள் மூலம் அதிர்ஷ்டம், புதிய சிந்தனை மூலம் வாழ்க்கையில் திடீர் முன்னேற்றம் பெறுதல், அறிவு பூர்வமான செயல்கள் மூலம் யோக பலன்களை ஜாதகர் நடைமுறைக்கு கொண்டுவரும் வாய்ப்பை பெறுதல், ஆன்மீக வாழ்க்கையில் வெற்றியும், கடவுள் அனுக்கிரகம் மூலம் தமக்கு வரும் அனைத்து சிரமங்களையும் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பும் உண்டாகும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்லும் யோகம், ஆராய்ச்சி மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, உணவு பொருட்கள், நீர்ம பொருட்கள் மூலம் லாபம் பெரும் யோகம், சுயமாக சொத்து சுக சேர்க்கையை பெரும் அமைப்பு, தன்னிறைவான பொருளாதர வசதி வாய்ப்புகளை பெரும் யோகம், மண்ணில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மூலம் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வீடு வண்டி வாகனம் மூலம் சிறப்பான வருமானம் உண்டாகும், புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், கடவுள் அனுக்கிரகத்தால் சகல யோகங்களையும் தன்னிறைவாக பெரும் அமைப்பு, புதிய நபர்கள் மூலம் வெற்றி உண்டாகும் வாய்ப்பு, தனது தாய் வழியில் இருந்து வரும் ஆதரவு, சொத்து சுக சேர்க்கை, ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் பிரபல்யம் பெறுதல், சுக போகங்களுக்கு குறைவில்லாத நிலை என்றவகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

12ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் சகல யோகங்களையும் பெரும் அமைப்பு, பயணங்கள் மூலம் பெரிய சொத்து சுக சேர்க்கை, முதலீடுகள் மூலம் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் அமைப்பு, உல்லாச யோக வாழ்க்கையை பரிபூர்ணமாக பெறுதல், தொழில் மற்றும் இருப்பிடமும் மூலம் சுபயோகங்கள் உண்டாகும் அமைப்பு, ஆன்மீகத்தில் வெற்றி, சுக போக தாம்பத்திய வாழ்க்கை, வாழ்க்கை துணையுடன் இணக்கமான பாசத்தை கையாளும் தன்மை, தாம்பத்திய இன்பம், திருப்தியான மன நிலை, நல்ல உறக்கம், நிம்மதியை ஜாதகரே ஏற்படுத்தி கொள்ளும் யோகம், தன்னிறைவான பொருளாதர வசதியை குறுகிய காலத்தில் பெரும் யோகம், தனிப்பட்ட விருப்பங்களை ஜாதகர் நிறைவேற்றி கொள்ளும் அமைப்பு என மிகுந்த யோகங்களை, விரைய ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் பெறுவார்.

 6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து பதவியில் வெற்றி, திடீர் பதவி உயர்வு, நல்ல வேலைவாய்ப்பை ஜாதகர் பெறுதல், பணியாற்றும் இடத்தில் இருந்து வரும் இன்னல்களை மிக சுலபமாக வெற்றிகொள்ளுதல், உத்தியோகத்தில் ஆர்வம் மற்றும் ஈடுபாடு, அதிகாரிகளின் அரவணைப்பு,  சொந்த முயற்சியில் முன்னேற்றம் பெறுதல், எதிர்ப்பவர்களுக்கு சிம்ம சொப்பனம், எதிரிகளை நண்பர்களாக மாற்றும் கலை அறிந்தவர், தனது உரிமைகளை போராடி பெரும் யோகம் உண்டாகும், நல்ல பணியாளர்கள் மற்றும்  சிறந்த வேலையாட்கள் அமையும் யோகம் அவர்களின் ஆதரவு மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெரும் அமைப்பு என ஜாதகருக்கு சத்ரு ஸ்தான வழியில் இருந்து மிகுந்த லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், குறுகிய கால இடைவெளியில் வெற்றிகள் வந்துகொண்டே இருக்கும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறப்பான ஜீவன முன்னேற்றம் உண்டாகும், இந்த ஜாதகத்தை பெற்றவர்கள் சுய தொழில் செய்வதே சாலச்சிறந்தது, ஏனெனில் குறுகிய முதலீட்டில் அபரிவிதமான லாபங்களை தங்கு தடையின்றி பெறுவார்கள், மேலும் சுய தொழில் செய்வதற்கு ஏற்ற ஜாதக வலிமையை பெற்று இருப்பது வரவேற்க தக்கது, தனிப்பட்ட முயற்சிகள் யாவும் திடீர் வெற்றியை தரும், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவார், ஜாதகரின் ஜீவன  ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடாக அமைவது ஜாதகரை வியாபாரத்தில் பெரிய நிபுணராக மாற்றும், தனது அறிவு திறன் கொண்டு ஜீவன முன்னேற்றத்தை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவார், எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு நிறைவேறும், அரசு கவுரவம், மரியாதை, சமூக அந்தஸ்து, என வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார், திறமை மிக்க பேச்சு, தீர்க்கமான முடிவுகள் மூலம் ஜாதகருக்கு யோகங்கள் உண்டாகும்.

9ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு வெளிநாடுகளில் வியாபர யோகத்தை தரும், பயணங்கள் மூலம் வெற்றியும் செல்லும் இடங்களில் இருந்து சிறப்பு உண்டாகும், புதிய ஆய்வுகள் மூலம் ஜாதகருக்கு மிகுந்த லாபங்கள் உண்டாகும், எஜென்ஜி துறையில் வெற்றியும் அளவில்லா அதிர்ஷ்டமும் உண்டாகும், வருமுன் உணர்ந்து செயல்படும்  தன்மையும், சகோதர வழி ஆதரவும் பரிபூர்ணமாக கிடைக்கும், தெளிவான சிந்தனை, நுண்ணறிவு, உயர் கல்வி மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு என வெற்றிகள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக கிடைக்கும்.

சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

5,11ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து தனது பூர்வீகத்தில் ஜீவனம் செய்வதால் முன்னேற்றம் அற்ற நிலையை தரும், தனது சுய வாழ்க்கையில் அளவுக்கு அதிகமான இன்னல்களை சந்திக்கும் நிலையையும், தமது முயற்சிகளில் மிகுந்த தோல்விகளையும் தரும், குல தெய்வத்தின் சாபம் மூலம் வாழ்க்கையில் அளவில்லா துன்பங்களை சந்திக்கும் நிலையை தரும்,  எதிர்பால் அமைப்பினர் மூலம் துன்பத்திற்கும், சிரமங்களுக்கு  ஆளாக்கும், உதவி செய்ய யாரும் அற்ற நிலையையும், ஜாதகரின் அறிவு திறன் அனைத்தும் பலன்தாராமால் விரைய நிலையை சந்திக்கும் தன்மையை தரும், ஜாதகர் கற்ற கல்வி அதன் மூலம் பெற்ற அறிவு யாவும் பலனின்றி போகும், நன்மைகள் யாவும் ஜாதகருக்கு நடைபெறாமல், துன்ப கடலில் மூழ்கும் சூழ்நிலையை தரும், சமயோசித அறிவு திறனும், புத்திசாலித்தனமும் ஜாதகருக்கு முழுவதும் மழுங்கிவிட வாய்ப்பு உண்டு, ஜாதகத்தில் உள்ள மற்ற யோகங்கள் வலிமை பெற்ற பாவக பலன்கள் யாவும் ஜாதகருக்கு நடைமுறைக்கு வாராது, ஜாதகர் பூர்வீகத்தில்  ஜீவனம் செய்யும் வரை யாதொரு நன்மையையும் பெற இயலாமல், சூழ்நிலை கைதியாக ஜீவனம் செய்ய வேண்டி வரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் தன்னம்பிக்கை வெகுவாக குறையும், வீண் கற்பனையும், மூட நம்பிக்கைகளும் ஜாதகரின் வாழ்க்கையை கேள்வி குறியாகும், காதல் தோல்வி மூலம் வாழ்க்கை மிகப்பெரிய பாதிப்பை பெற்று நிம்மதி அற்ற தன்மையை தரும், அதிர்ஷ்டம் யாவும் ஜாதகருக்கு பின்தங்கி நிற்கும், எதிர்ப்புகள் வீண் கற்பனை, மன பயம் ஆகியவைகள் ஜாதகரை  கடுமையாக பாதிக்கும், சந்தேகமும் விழிப்புணர்வு அற்ற எண்ணங்களும் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், இதனால் உடல் நலம் கெடும், வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்கும், நம்பிக்கை இன்மையால் ஜாதகர் வெகுவான பாதிப்புகளை தனது வாழ்க்கையில் சந்திக்கும் சூழ்நிலையை தரும், அனைத்தும் இருந்த போதிலும் திருப்தி இன்றி வாழும் சூழ்நிலையைத்தரும், வாழ்க்கையில்  பலவற்றை  இழந்து வாடுவதாக கற்பனை செய்துகொண்டு, தனது வாழ்க்கையே தானே கெடுத்து கொண்டு இன்னலுறும் தன்மையை தரும், ஜாதகர் சில விஷயங்களில் மன மாற்றத்தை பின்பற்றுவதே சால சிறந்தது, இல்லை எனில் சுய ஜாதக யோகங்கள் பலன் இன்றி, இன்னல்களில்யே காலம் கடத்தும் சூழ்நிலையை தரும்.

8ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகத்திலேயே மிகவும் மோசமான பாதிப்பை தரும் அமைப்பாகும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, தற்கொலை மன நிலை, யாரும் அற்று தனிமையில் வாடும் நிலை, எதிர்பால் அமைப்பினர் மூலம் வாழ்க்கையில் அளவில்லா துன்பங்களை சந்திக்கும் நிலை, தனது உடல் மற்றும் மன நிலையை தானே பாதிக்க செய்துகொண்டு இன்னல்களை சந்திக்கும் நிலை, உடல் நிலை கோளாறுகள், மருத்துவ செலவினங்கள், வீண் விரையங்கள், விபத்து என ஜாதகர் மிகுந்த துன்பங்களை சந்திக்கும் நிலையை தரும், மேற்கண்ட பாதக ஸ்தான பலன்களை ஏற்று நடத்தும் திசா புத்தி காலங்களில் ஜாதகர் மிகுந்த விழிப்புணர்வுடன் தனது வாழ்க்கையை நடத்த வேண்டும், மேலும் ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் வீடக அமைவது, மிகுந்த மன அழுத்தம் மன போராட்டத்தை தரும், மேலும் எதிர்பால் அமைப்பினரிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது சகல நலன்களையும் தரும், அவயோகம் பெற்ற எதிர்பால் அமைப்பினரை ஜாதகருடன் தொடர்பு படுத்தும் என்பதால், மிகுந்த கவனமுடன் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான யோகங்களை நல்கும்.

சூரியன் திசை தரும் பலன்கள் ( 06/07/2012 முதல் 06/07/2018 வரை )

தற்போழுது நடைபெறும் சூரியன் திசை 8ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது தங்களுக்கு உகந்தது அல்ல, வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனைகளை தங்களுக்கு இந்த சூரியன் திசை வாரி வழங்கும் எனலாம், தங்களின் வாழ்க்கையில் மிக மிக  மோசமான பலன்களை தங்கள் கடந்து சொல்லும் நிலையை தரும், குறிப்பாக கல்வி பாதிக்கும், கவனம் சிதறும், மன நிலையை மேம்படுத்துவது சிரமமான காரியமாக அமையும், பெண்கள் வழியில் இருந்து வரும் மன உளைசல் தங்களின் உடல் மற்றும் மனம் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும், உறக்கமின்மை, நிம்மதி இன்மை தங்களை வெகுவாக பாதிக்க வாய்ப்பு உண்டு, தங்கள் நினைக்கும் எந்த ஒரு காரியமும் நடைமுறைக்கு வாராது, சுய மரியாதை கெடும், வீண் மன  பயமும் மன கிலேசமும் தங்களின் நிம்மதியை கெடுக்கும், சுய ஜாதகத்தில் சிறப்பான யோகங்கள் இருந்த போதிலும் தங்களுக்கு அதனால் யாதொரு நன்மைகளையும் சூரியன் திசையில் தங்கள் பெற இயலாது, எனவே தங்கள் சூரியன் திசை முடியும் வரை அனைத்து விஷயங்களிலும் பொறுமையை கடைபிடிப்பது நன்மைகளை வாரி வழங்கும், மேலும் தங்கள் எடுக்கும்  தவறான முடிவுகளை தவிர்க்க, பெரியோர் மற்றும் பெற்றோர் ஆலோசனையை  பெற்று நடைமுறைப்படுத்துவது சகல நன்மைகளையும் தரும், மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு நன்மைகளை மட்டும் தேடி பெறவேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பது கவனிக்கத்தக்கது.


சூரியன் திசை புதன் புத்தி தரும் பலன்கள் ( 24/04/2016 முதல் 28/02/2017 வரை )

தற்போழுது நடைபெறும் சூரியன் திசையில் புதன் புத்தி தங்களுக்கு மேலும் இன்னல்களை தரும் அமைப்பில் உள்ளது கவனிக்க தக்கது, 5,11ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான  8ம் பாவக தொடர்பை பெற்று பலனை தருவது தங்களின் அவசர முடிவுகள் யாவும் மிகுந்த துன்பத்தை தரும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையையும், தன்னம்பிக்கையில்லாத மன நிலையையும் தரும், சுய அறிவு வேலை செய்யாது, அதிர்ஷ்டம் இன்மையால் தங்களால் சுய  கட்டுபாடுடன் நடக்க இயலாது, வீண் கற்பனையும், சிந்தனையும் தங்களுக்கு மன நிம்மதி வழங்கும், ஆனால் அடுத்தது வரும் கேது புத்தியும், சுக்கிரன் புத்தியும் வலிமை பெற்ற பாக்கிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தங்களின் வழக்கியில் சகல யோகங்களையும் நல்கும், மனதிற்கு இசைந்த வாழ்க்கை துணை, நண்பர்கள் வழியில் ஆதரவு, செய்யும் தொழில் வழியில் இருந்து அபரிவித முன்னேற்றம், இந்நாள் கவலைகள் எல்லாம் சூரியனை கண்ட பனி போல் விலகும் சூழ்நிலை, சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மை என தங்களின் வாழ்க்கையையே புத்துணர்வு மிக்க ராஜயோகங்களை வாரி வழங்கும், தங்கள் தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் புத்தியை மட்டும் சற்று கவனமாக கடந்து விட்டால், எதிர்கால வாழ்க்கை தங்கள் எதிர்பார்க்காத யோக பலன்களை வழங்க காத்துகொண்டு இருக்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக