வெள்ளி, 7 அக்டோபர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - ரிஷப லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "ரிஷப" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                  

ரிஷப லக்கினம் :

5ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் ரிஷப லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியினால் ராஜயோக பலன்களை பெறுவதில் ரிஷப இலக்கின அன்பர்களுக்கு அதிக பங்கு உண்டு எனலாம், லக்கினத்திற்கு பூர்வ புண்ணியத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தங்களுக்கு நிறைவான அறிவுத்திறனை வாரி வழங்குகிறார், சமயோசித புத்திசாலித்தனம், தெளிவான சிந்தனை மற்றும் நல்லறிவு மூலம் தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெறுவீர்கள், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும், சந்தோசம் நிறைந்த வாழ்க்கை தங்களை தேடிவரும், அனைவரும் தங்களுக்கு மிகுந்த உதவிகளை வாரி வழங்குவார்கள், நினைக்கும் காரியங்கள் யாவும் வெற்றியை தரும், தடைபட்ட நற்காரியங்கள் யாவும் தொய்வின்றி நடைபெறும், எதிர்பாராத அதிர்ஷ்டம் தங்களின் வாழ்க்கையில், மிகப்பெரிய திருப்பு முனையை அமைத்து தரும், நல்லோர் சேர்க்கையும், நல்ல நண்பர்கள் உதவியும் தங்களின் எதிர்காலத்தை மிகுந்த பிரகாசமாக மாற்றும், குல தெய்வத்தின் அருளும், கடவுள் அனுகிரகமும் தங்களின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் வாரி வழங்கும், சிரமங்கள் யாவும் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும், குலம் காக்க நல்ல வாரிசு அமையும், குழந்தைகள் வழியில் இருந்து மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அபரிவிதமாக வந்து சேரும், உறவுகளின் உதவி ஆதரவு தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், சகலமும் வெற்றியை தரும்.

 குரு பகவான் தனது 5ம் பார்வையை பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தை வசீகரிப்பது, ரிஷப லக்கின அன்பர்களுக்கு, ஆன்மீக வெற்றியை உறுதி செய்யும், சிறப்பான அறிவு திறன், ஆன்மீக பெரியோர் ஆசிர்வாதம், புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், சமூகத்தில் அந்தஸ்து மற்றும் மரியாதை, தனது சொல்லுக்கு நல்ல மதிப்பு, சிறந்த மனிதர்களின் அறிமுகம், அதன் வழியில் இருந்து வரும் லாபங்கள், புதிய கௌரவ பதவிகள், என சிறப்பான நன்மைகளை வாரி வழங்குவார், மேலும் சுய தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும் காலமாக கருதலாம், இதுவரை ஜீவனம் இன்றி சிரமபட்ட அனைவருக்கும் நல்லதொரு வாய்ப்புகள் வந்து சேரும், தெய்வீகத்தால் நன்மையையும் முன்னேற்றமும் உண்டாகும், ஆசிரிய பணியில் உள்ள அன்பர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் உண்டாகும், சுய தொழில் செய்யும் அன்பர்களுக்கு நல்லதொரு முன்னேற்றமும் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் வந்து சேரும், பொதுநலம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடும் அன்பர்களுக்கு யோகமிகுந்த காலமாக கருதலாம், பொது வாழ்க்கை மற்றும் அரசியலில் உள்ளவர்களுக்கு வெற்றிகள் மற்றும் பதவி தேடி வரும், பொதுமக்கள் ஆதரவு தங்களுக்கு அபரிவிதமாக வந்து சேரும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்தை வசீகரிப்பது, ரிஷப லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், மேலும் தாம்பத்திய வாழ்க்கை சிறக்கும், திருமணம் ஆகாத அன்பர்களுக்கு திருமணம் தடையின்றி சிறப்பாக நடைபெறும், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து வெற்றி நடை போடும் காலநேரம் இதுவாகும், சுய முயர்ச்சியும், தன்னம்பிக்கையும் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை சிறப்பாக நிர்ணயம் செய்யும், மன நிம்மதியும், திருப்திகரமான மன நிறைவும் தங்களின் வாழ்க்கையில் மகிழ்சியை அதிகரிக்கும், தாங்கள் நினைக்கும் அனைத்து நற்காரியங்களும் எவ்வித தடையும் இன்றி நிறைவேறும், முதலீடுகளில் இருந்து நல்ல லாபமும், பெருந்தொகையும் வந்து சேரும், உறவுகள் வழியில் இருந்து உதவிகள் வந்து சேரும், மாற்று மதத்தினர் வழியில் இருந்து அதிர்ஷ்டங்கள் வந்து சேரும், புதிய சொத்துகள் மற்றும் வண்டி வாகனங்கள் வாங்க இதுவே சிறப்பான நேரமாக கருதலாம், மேலும் வெளிநாடுகளில் வேலை மற்றும் கல்வி சார்ந்த முயற்ச்சிகளுக்கு சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், இந்த குரு பெயர்ச்சி மன நிறைவையும், சந்தோசத்தையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை லக்கினம் எனும் 1ம் பாவகத்தை வசீகரிப்பது, ரிஷப லக்கின அன்பர்களுக்கு, உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை நல்குவார், எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும், நல்லறிவும், தெளிவான சிந்தனையும் தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், புதிய திட்டமிடுதல்கள், முயற்ச்சிகள் யாவும் வெற்றியை வாரி வழங்கும், பேச்சு திறமை அதிகரிக்கும், தீர்கமான வாத திறமையும், சிறப்பான நிர்வாகத்திறனும் தங்களின் வருமான வாய்ப்பை உறுதி செய்யும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் விதமாக பல சுப நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும், அனைவரின் ஆதரவும் தங்களுக்கு அறிய பல நிகழ்வுகளை சிறப்பாக சாதிக்க வல்லமையை தரும், குறிப்பாக தன சேர்க்கை அபரிவிதமாக வரும் வாய்ப்பு உண்டாகும், மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் நீங்கும், வீண் மன பயம் தங்களை விட்டு அகலும், புதிய தைரியம் பிறக்கும், எதிர்பவர்கள் மூலமே தங்களுக்கு நன்மைகள் வந்து சேரும், மண் மனை வண்டி வாகன யோகம் உண்டாகும்  தங்களின் வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை தற்பொழுது 5ல் சஞ்சாரம் செய்யும் குருபகவான் வாரி வழங்குவார் என்பது மட்டும் நிச்சயம் வாழ்த்துகள்.

குறிப்பு :

ரிஷப லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 5,9,11,1ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக