ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ராகு பகவான் சுய ஜாதகத்தில் பெரும் வலிமையும், தனது திசையில் தரும் பலாபலன்களும் !


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று.

என்ற திருக்குறளுக்கு சரியான எடுத்துகாட்டாக விளங்க, ஒருவர் ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது பெரும் வலிமையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஜாதகர் சகல யோகங்களையும் பெறுவார் என்று தெளிவாக கூறிவிட முடியும், சுய ஜாதகத்தில் சாயகிரகங்கள் வலிமை பெறும் அமர்வதும், தனது திசாபுத்திகளில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், ஜாதகரை மேற்கண்ட குறளுக்கு பொருத்தமான வாழ்க்கையை பிறவியிலே நல்கும், ஜாதகர் பிறப்பில் இருந்தே வாழ்க்கையில் யோக பலாபலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார், சுய ஜாதகத்தில் சாயாகிரகங்கள் வலிமை பெறுவது சம்பத்தப்பட்ட ஜாதகருக்கு வழங்கும் யோக வாழ்க்கை என்பது கற்பனைக்கு கூட எட்டாத வகையில் அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

ஒரவர் ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெரும் பொழுது எப்படி பட்ட யோக பலன்களை தருகின்றதோ, அதற்க்கு நிகரான இன்னல்களையும் சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை அற்று நிற்பதும், தனது திசையில் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்றுநடத்துவதும் ஜாதகருக்கு பாகுபாடு இன்றி கடுமையான இன்னல்களை தரும், சுய ஜாதகத்தில் ராகு வலிமை அற்று நிற்பதும், தனது திசையில் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் எவ்வித இன்னல்களை தரும் என்பதனை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : ரிஷபம் 
ராசி : விருச்சகம் 
நட்சத்திரம் : கேட்டை 4ம் பாதம் 

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் வலிமை பெற்ற அமைப்பாகும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

3,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயில் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் வலிமை அற்ற அமைப்பாகும்.

ஜாதகருக்கு ராகு பகவான் மேலோட்டமாக காணும் பொழுது ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டில் அமர்ந்து இருப்பதை போன்ற தோற்றத்தை  தந்தாலும், பாவக நிலையை கருத்தில் கொண்டு காணும் பொழுது ( கும்பத்தில் ) பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் வலிமையற்றும், தான் அமர்ந்த பாவகத்தை 100% விகித பாதிப்பிற்கு ஆளாக்கி அமர்ந்திருப்பது தெளிவாகும், எனவே மேற்கண்ட ஜாதகருக்கு சாயா கிரகமான ராகு சுய ஜாதகத்தில் தாம் அமர்ந்த நிலையில் கடுமையான பாதிப்பை பிறவியில் இருந்தே வழங்கி கொண்டு இருப்பதும், அமர்ந்த பாவகம் ஜாதகருக்கு பாக்கிய ஸ்தானம்  என்பதால் ஜாதகருக்கு நடக்க வேண்டிய சுப நிகழ்வுகள் யாவும், கடுமையான தடைகளையும், தாமதங்களும் வழங்கி கொண்டு இருந்து இருக்கின்றது, அதாவது ஜாதகருக்கு அடிப்படையில் நல்ல கல்வி அறிவு இல்லை, சுய சிந்தனையும் தனித்திறனும் பலன்தரவில்லை, கால தாமத திருமணம், மற்றவர்களை சார்ந்து வாழும் சூழ்நிலை, சொத்து வசதிகள் இருந்த போதிலும் அதனால் ஜாதகருக்கு யாதொரு பலனும் இல்லை, ஆண் வாரிசு அற்ற சூழ்நிலை, சிறு வயது முதலே ஜாதகர் உடல் ரீதியான தொந்தரவுகளை கடுமையாக சந்தித்துக்கொண்டு இருக்கின்றார்.

மேலும் சுய ஜாதகத்தில் 7ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அமைந்த வாழ்க்கை துணை வழியிலான இன்னல்கள் மற்றும் பொருத்தம் அற்ற வாழ்க்கை துணை வழியிலான சிரமங்களையும் ஜாதகர் எதிர்கொள்ளும் நிலை என ஜாதகரை வாட்டி வதைத்து எடுத்துவிட்டது.

 தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 7ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான இன்னல்களை கடந்த பல வருடமாக  தந்துகொண்டு இருக்கின்றது, வயதான காலத்தில் வாழ்க்கை துணையின் அரவணைப்பு இன்றி தவிக்கும் சூழ்நிலை. வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் இன்னல்கள், திடீர் இழப்புகள்,  எதிர்பாராத மருத்துவ  செலவினங்கள், தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் அற்ற சூழ்நிலை, வாழ்நாளை எண்ணிக்கொண்டு ஜீவிக்கும் தன்மை, ஆதரவு அற்ற சூழ்நிலை, சந்தர்ப்பவாதிகள் மற்றும் சுயநலம் கொண்டோரின் மூலம் வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை என தற்போழுது  நடைபெறும் ராகு திசை 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  மேற்கண்ட பாவக வழியிலான இன்னல்களை தொடர்ந்து வழங்கிகொண்டு இருக்கின்றது.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ராகு பகவான் பாதிக்கப்பட்டும், தனது திசையில்  பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு பெற்றும் இன்னல்களை தந்து கொண்டு இருப்பது ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து இருப்பது ராகு பகவானின் வலிமை அற்ற தன்மையை பறைசாற்றுகிறது, ஜாதகரின் கடுமையான உடல் நல பாதிப்பிற்கு, ராகு பகவானின் ஆதிக்கம் பெற்ற போதை வஸ்துக்கள் காரணமாக அமைந்துஇருப்பது ராகுவின் தாக்கம் ஜாதகரை படுத்திஎடுத்து இருப்பதை தெளிவு படுத்துகிறது, ஜாதகர் ராகு திசையினை பூர்ணம் பெற செய்வது இறையருளின் கருணையில் உள்ளது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696    

2 கருத்துகள்:

  1. ஐயா, செவ்வாய் தசையில் 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட 6,9,12ம் பாவாக வழியிலான இன்னல்களை கடுமையாக தந்து இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளீர்கள். செவ்வாய் தசையில் 10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன்தானே சம்பந்தம் பெறுகின்றது.இதனை தெளிவுபடுத்தினால் நலம்.

    பதிலளிநீக்கு
  2. தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி எழுதும் பொழுது பிழை ஏற்ப்பட்டு விட்டது, செவ்வாய் திசை 10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன்தான் சம்பந்தம் பெறுகின்றது, இருப்பினும் தங்களின் ஆர்வத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு