செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

ஜாதகத்தில் உள்ள யோகங்களும், யோகங்களை வழங்கும் திசா புத்திகளும் !



சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வருகின்றது, சுப யோகங்களை தரும் திசா புத்திகள் எதுவென்பதில் தெளிவு பெறுவது சம்பத்தப்பட்ட ஜாதகருக்கு உறுதியான வெற்றி வாய்ப்புகளை பெறுவதற்க்கு பேருதவியாக அமையும் என்பதில் மாற்று கருத்து என்பது இல்லை, பொதுவாக சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை பற்றிய தெளிவு இல்லாதா பொழுது நமது உழைப்பும் நேரமும் வெகு அளவில் விரையமாகும், கிராமங்களில் சொல்லும் செலவடையான " பாடும் பட்டது போல் வீடும் கெட்டது போல் " என்பதற்க்கு இணையான பலனை தந்து விடும், தனது பிறவிப்பயனை தெளிவாக உணர்ந்துகொள்ள சுய ஜாதகத்தில் லக்கின முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றிய விழிப்புணர்வு நம் அனைவருக்கும் தேவை படுகிறது என்ற விஷயத்துடன் ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம்

மேற்க்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பு :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள், சிறந்த உடல் ஆரோக்கியம், தெய்வீக அனுபவம், இறை அருளின் கருணையை பரிபூர்ணமாக பெரும் யோகம், பல திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், பெரிய மனிதர்கள் ஆதரவு, அரசு ஆதரவு, முக்கிய பதவிகள் கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, தமக்கு சாதகமாக வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ளும் அறிவு திறன், அதி புத்திசாலித்தனம், வருமுன் உணரும் உள்ளுணர்வு திறன், தெய்வீக நம்பிக்கை, சுய ஆளுமை திறன், பெருந்தன்மையான குணம், எதிர்ப்புகளை சமாளிக்கும் வல்லமை, சமூக அந்தஸ்து, நல்லோர் ஆதரவு, எங்கு சென்றாலும் ஜாதகருக்கு கிடைக்கும் நற்ப்பெயர், தன்னம்பிக்கை குறையாத மனநிலை, நிறைந்த நல்லறிவு என்ற வகையில் சுபயோக பலன்களை தரும் மேலும் ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு உபய மீன ராசியில் கடைசி பாகையில் ( 359.41.25 ) ஆரம்பித்து மேஷ ராசி முழுவதும் வியாபித்து இருப்பது, ஜாதகரின் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், நேர்மை, மனஉறுதி, விரைந்து செயலாற்றும் திறன் , எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் யோகம், புகழ் கீர்த்தி என முழு அளவிலான நன்மைகளை  வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகரின் கல்விஅறிவு உலக புகழை பெற்றுத்தரும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சகலவித சௌபாக்கியமும் பெரும் அருகதை உடையவர், ஆராய்ச்சி மனபக்குவம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, வீரியமிக்க செயல்பாடுகள், முற்போக்கு சிந்தனை மற்றும் நேர்மறை எண்ணங்கள் மூலம் சுபயோகங்களை பெரும் அமைப்பு, காரிய சிந்தி, நேர்மையான குணம், உதவி செய்ய ஓடிவரும் மக்கள் செல்வாக்கு, மிதமிஞ்சிய தைரியம், தன்னிலை உணரும் யோகம், சித்தர்கள் ஆசிர்வாதம், பரிபூர்ண லக்ஷ்மி கடாட்சம், அனைவரின் மன நிலையையும் அறியும் யோகம், பெண் தெய்வங்களின் ஆசியை குறுகிய காலத்தில் பெரும் யோகம், விளையாட்டுகளில் ஆர்வம், போட்டி பந்தையங்களில் வெற்றி, எதிர்பாராத அதிர்ஷ்டம் என்ற வகையில் நன்மைகளை தரும், குறிப்பாக ஜாதகரின் தைரியாமான சில முடிவுகள் எதிர்பாராத வெற்றிவாய்ப்புகளை வாரி வழங்கும் .

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் யோகம் மிக்க நல்ல வாழ்க்கை துணையை பெறுவதின் மூலம் இல்லற வாழ்க்கையில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள் அமைவார்கள், வெளிநாடு வெளியூரில் இருந்து வரும் சுபயோக வாய்ப்புகளை ஜாதகர் அனுபவிக்கும் யோகத்தை தரும், எந்த ஓர் சூழ்நிலையிலும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆதரவு பரிபூர்ணமாக அமையும், திடீர் செல்வாக்கின் மூலம் பொருளாதார வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், எதிர்பால் இன சேர்க்கை மூலம் சுபயோகங்கள் உண்டாகும், சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ள அன்பர்கள் ஆதரவு ஜாதகருக்கு தேடி வரும், அரசியல் பதவிகள், அரசு சார்ந்த உதவிகள் ஜாதகருக்கு பெருமளவில் கிடைக்கும், ஜாதாகர் களத்திர ஸ்தான வழியில் இருந்து பெரும் யோகங்களை முழு அளவில் பெறுவார், நல்ல வலிமை மிக்க கூட்டாளி அமைவார் அல்லது வெளியூர் வெளிநாடுகளில் ஜாதகருக்கு பிரபலத்துவம் எதிர்பாராமல் உண்டாகும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல குணமும், நல்ல எண்ணமும் மனதில் உள்ள லட்சியங்களை வெற்றி பெற செய்யும், தனது வாழ்க்கையை சிறப்பாக வாழும் யோகம் பெற்றவர்கள், ஜாதகரின் முன்னோர்கள் மற்றும் ஜாதகர் செய்த புண்ணியத்தின் பலன்களை ஜாதகர் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து அனுபவிப்பர், தெய்வீக அனுகிரகம் ஜாதகரின் வாழ்க்கையில் பல புதுவித மாற்றங்களை  வாரி வழங்கும், கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழியின் பலாபலன்களை ஜாதகர் அனுபவிப்பார், ஜாதகர் வாக்கு பலிதம் பெரும், ஆசிர்வாதம் சகல துன்பங்களையும் நீக்கும், வாக்கு வன்மை அதிகரிக்கும் என்பதால் ஜாதகர் எவரை சபிக்காமல், ஆசிர்வதிப்பது சுபயோக வாழ்க்கையை தரும்.

4ம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் சுகபோக வாழ்க்கையின் தன்மையை நமக்கு சிறப்பாக எடுத்துறைக்கிறது, குறிப்பாக ஜாதகருக்கு நல்ல வீடு, வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, தனது தாய் வழியில் இருந்து பெரும் யோக வாழ்வு, நல்ல குணம், தனது சுய உழைப்பின் மூலம் பொருளாதர முன்னேற்றத்தை பெரும் தனி தன்மை என்ற வகையில் நன்மைகளை தரும், மேலும் ஜாதகரின் சுக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆயுள் ஸ்தானமான விருச்சிக ராசியில் அமைவது, ஜாதகருக்கு இன்சூரன்ஸ், போனஸ், கிரசுவிடி அமைப்பில் இருந்து புதையலுக்கு நிகரான வருமான வாய்ப்பை தரும், மேலும் ஜாதகரின் மனோ வலிமை சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், வடக்கு திசை சார்ந்த மனைகளில் ஜாதகர் குடியிருப்பது, ஜாதகரின் சுக போக வாழ்க்கையை 100 % விகிதம் உறுதி செய்யும், மேலும் இடம் நிலம் வீடு, வண்டி வாகனம்  ஆகிய வழியில் இருந்து வருமான வாய்ப்புகளையும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக வாரி வழங்கும்.

5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் சமயோசித புத்திசாலித்தனத்தை கட்டியம் கூறும், நிறைந்த கல்வி அறிவு ஜாதகரின் வெற்றிகளுக்கு உறுதுணை புரியும், ஜாதகர் செய்யும் அனைத்து காரியங்களிலும் ஜாதகரின் புத்திசாலித்தனம் மிளிரும், எவரும் தீர்வு காணாத விஷயங்களுக்கு ஜாதகரின் தீர்வே இறுதியான நல்ல முடிவை தரும், ஜாதகரின் குல தேவதையின் ஆசி சகல யோகங்களை வாரி வழங்கும், பிரச்சனைகளுக்கான உடனடி தீர்வுகள் காண்பதில் வல்லமை உண்டாகும், சுய ஆளுமையின் மூலம் வாழ்க்கையில் தொடர் வெற்றிகளை ஜாதகர் பெற்றுகொண்டே இருப்பார், கலைத்துறையில் பிரகாசிக்கும் யோகமும், சாஸ்திர ஞானமும் ஜாதகருக்கு பரிபூர்ணதுவத்தை தரும், தெய்வீக அனுபவம் மூலம் விடையறிய கேள்விகளுக்கு பதில் தெரிய வரும், கணிதம் ஜோதிடம், வானவியலில் நல்ல தேர்ச்சி உண்டாகும், நுண்ணறிவு திறன் ஜாதகரின் வாழ்க்கையை சிறப்பிக்க செய்யும்.

6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து குறுகிய கால வெற்றிகளை தொழில் ரீதியாக வாரி வழங்கும், ஜாதகரிடம் மற்றவர்களின் தனத்தை ஆளுமை செய்யும் யோகம் உண்டாகும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் எனலாம், ஜாதகரை தொழில் ரீதியாக எதிர்பவர்களின் கதி மிக மோசமாக அமைந்துவிடும், கடன் வாங்குவது கொடுப்பது ஜாதகருக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றங்களை தரும், சுபயோக வாழ்க்கையை தன்னிறைவாக பெரும் யோகம் உண்டாகும், ஜாதகரின் சத்ரு ஸ்தான தொடர்பு ரிஷப ராசியுடன் என்பதால் ஜாதகரின் பேச்சு திறன் எதிரியையும் மயங்க செய்யும், எதிர்ப்பவர்களையும் மண்டியிட செய்யும், ஜாதகரின் ஜீவன ஸ்தான வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஓர் விஷயமாகும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நல்ல தொழில் அமைப்பு, நல்ல பதவி, செய்யும் தொழில் வழியில் வரும் முன்னேற்றம், தீர்க்கமான வாத திறமை, உயர் பதவி தேடி வரும் யோகம், மேலும் மேலும் ஜீவன ரீதியான நன்மைகளை பெரும் அமைப்பு, லட்சியங்கள் அடைவதின் மூலம் மன திருப்தி, நிறைந்த செல்வாக்கு, சுய கௌரவம், நல்ல அந்தஸ்து என  ஜாதகர் ஜீவன ஸ்தான வழியில் இருந்து முழு நன்மைகளையும் பெறுவார், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் ரிஷபத்தில் அமைவது வாக்கின் வழியிலான தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும், எதிர்பாராத வெற்றிகளை ஜாதகர் ஜீவன ரீதியாக தங்கு தடையின்றி பெறுவார், வாழ்நாள் முழுவதும் ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் என்பது அபரிவிதமாக வந்து கொண்டே இருக்கும், சுய தொழில் செய்யும் எண்ணம் இருப்பின் ஜாதகருக்கு உகந்த தொழில்களாக ஆலோசனை வழங்குதல் ( தனம் சார்ந்த ) ( தொழில் ஆலோசகர் ) வட்டி தொழில், நிதி நிறுவனம் ( வண்டி வாகனம் மற்றும் சொத்துகள் அடிப்படையில் நிதி உதவி செய்தல் ) நல்ல தொழிலாக இருக்கும், அல்லது சேவை துறை சார்ந்த தொழில்கள் மூலம் நிறைவான வருமானத்தை பெறுவார்.

அடுத்த பதிவில் மேலும் ஆய்வு செய்வோம் ......

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக