ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கும்பம்!



 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

கும்பம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், கும்ப லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், " நிறைகுடம் நீர்தளும்பாது " என்ற பழமொழிக்கு இணங்க தனது செயல்திறன் மூலம் எடுத்துரைக்கும் கும்ப இலக்கின அன்பர்களுக்கு, இதுவரை ஜீவன ஸ்தானத்தில் நின்று இன்னல்களை தந்துகொண்டு இருந்த சனி பகவான், லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யது முழுஅளவில் சுபயோக பலன்களை வாரி வழங்க இருக்கின்றார், ஜாதகரின் லாப ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவது ஜாதகர் தான் செய்த பாக்கியத்தின் வலிமையை அதிர்ஷ்ட ஸ்தான வழியில் இருந்து அனுபவிக்கும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகரின் அறிவுத்திறன் மூலம் நல்ல லாபமும், நிறைந்த தன சேர்க்கையையும் வாரி வழங்கும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் மகர இலக்கின அன்பர்களுக்கு நீண்ட நெடுங்கால வளர்ச்சியை தொழில் வழியில் வாரி வழங்கும், எதிர்ப்புகள் யாவும் குறைந்து ஆதரவும் மக்கள் செல்வாக்கும் பெருகும், இதனால் ஜாதகருக்கு புது நம்பிக்கையும், புதிய எதிர்காலமும் சிறப்பாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது, உயர்கல்வி ஆராய்ச்சி கல்வி ஆகியவற்றில் தேர்ச்சி உண்டாகும், தெய்வீக தரிசனம் செய்ய பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், அறிய பல திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், எதிர்பாராத விதத்தில் அந்நிய மொழி பேசும் நபர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டம் தேடிவரும், தங்களது தூரத்து உறவுகள் வழியில் இருந்து ஆதரவும் அவர்கள் வழியிலான நன்மைகளும் தேடிவரும், தங்களின் வாழ்க்கையில் சனி பகவானின் லாப ஸ்தான சஞ்சாரம் நீடித்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

4ம் பாவகத்தை தனது 6ம் பார்வையினால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு வண்டிவாகன யோகம் மற்றும் வீடு நிலம் சார்ந்த வருமான வாய்ப்புகளை பரிபூர்ணமாக வாரி வழங்குவார், வாக்கை தொழிலாக கொண்டுள்ள அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கு உண்டான செலவினங்கள் அதிகரிக்கும், தாய் வழியிலான சொத்து கும்ப லக்கின அன்பர்களுக்கு தேடிவரும், எதிர்பாராத உதவிகள் குடும்ப நபர்கள் மூலம் கிடைக்க பெறுவீர்கள், நெடுநாள் ஆசைகளான புதிய வீடு மற்றும் புதிய சொகுசு வாகனம் போன்றவை இனிவரும் காலங்களில் தங்களுக்கு அமையும், வங்கிகள் வழியில் இருந்து கடன் தேடிவரும், இதனால் தங்களின் தொழில் வழியிலான வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும், கடன் உதவிகள் கேட்ட இடத்தில் இருந்து தங்களுக்கு கிடைக்கும், தங்களின் சொத்துக்கள் வழியிலான வருமானம் அதிகரிக்கும், வாக்கு வன்மை அதிகரிக்கும், எதிர்பார்த்த நல்ல செய்திகள் தங்களை தேடிவரும், நிதி துறை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்லாதோர் முன்னேற்றங்களையும்  தொடர் வருமான வாய்ப்புகளையும் வாரி வழங்கும், தனது தாயார் உடல் நிலை சார்ந்த அக்கறை தங்களுக்கு வீண் செலவினங்களை தவிர்க்க உதவும், எதிர்பாராத நேரத்தில் தங்களுக்கு வரும் பொருளாதர உதவிகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு தங்களின் பொருளாதார சிக்கல்களில் இருந்து வெளியேற நல்ல வாய்ப்புகள் உண்டாகும், உடல் ஆரயோக்கியம் மேம்படும், சுய முயற்சிகள் நன்கு பலிதம் பெரும் நேரமிது என்பதனை மட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றும் நேரமிது, சுபயோகங்கள் சுக ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ணமாக நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு பூர்வீகம் சார்ந்த வழியில் இன்னல்களையும், தங்களின் குழந்தைகள் வழியிலான பிரச்சனைகளையும் அதிகரிப்பார், தங்களின் சமயோசித புத்திசாலித்தனம் யாவும் வீண் விரையம் ஆகும், தங்களின் திட்டமிடுதல்கள் யாவும் தடைகளையும் தாமதங்களையும் சந்திக்கும் நேரமிது, குலதெய்வ நிந்தனை தங்களின் வாழ்க்கையில் ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்தும், சிந்தனை திறன்  பாதிக்கப்படும், தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனத்தை தேடும் நிலை ஏற்படும், தங்களது சுய முயற்சிகள் யாவும் எதிர்பாராத பின்னடைவை சந்திக்க நேரும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும், நன்மை செய்ய சென்று வீண் அவபெயரை சம்பாதிக்கும் நிலை உருவாகும் என்பதானால் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது தங்களுக்கு நன்மையை தரும், 5ம் பாவக வழியில் இருந்து தாங்கள் அதிக அளவில் இன்னல்களை சந்திக்க வேண்டிவரும் என்பதனால் தங்களின் குல தேவதை வழிபாட்டினை முறையாக செய்து சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்ன்னல்களில் இருந்து விடுபடுங்கள்.

8ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனிபகவான் கும்ப இலக்கின அன்பர்களுக்கு திடீர் என பெரும் செல்வாக்கையும், தன சேர்க்கையும் வாரி வழங்குவார், குறிப்பாக மருத்துவம் மற்றும் நிதி துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு பொற்க்காலம் என்றால் அது மிகையாகாது, உடல் நலம் சார்ந்த இன்னல்களில் இதுவரை போராடிக்கொண்டு இருந்த கும்ப இலக்கின அன்பர்களுக்கு உடனடி நிவர்த்தியும், சுகமும் கிடைக்க பெறுவார்கள், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும், இன்சூரன்ஸ் மற்றும் போனஸ் மூலம் பெரும் தன வரவை பெற வாய்ப்பு அதிகம் உண்டு, கும்ப இலக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத பணவரவு என்பது தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெறுவதற்கு சனிபகவானின் 10ம் பார்வை வழிவகுக்கும், சில அன்பர்களுக்கு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் செல்வ சேர்க்கை உண்டாகும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் வருமானம் உண்டாகும், வெளிநாடுகளில் இருந்து வரும் புதிய பொருட்கள் மூலம் அதித லாபம் உண்டாகும், வெளிநாடு மற்றும் வெளியூர் வழியில் இருந்து பெரும் தன சேர்க்கையை கும்ப இலக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக பெறுவார்கள் என்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும்.

குறிப்பு :

கும்ப லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 11,4,5,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  11,4,5,8ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கும்ப லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக