திங்கள், 21 ஆகஸ்ட், 2017

செவ்வாய் மஹா திசை தரும் ஜீவன ஸ்தான சுபயோகங்கள் !


 வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதும், சுப யோகங்கள் என்பதும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையின் அடிப்படையிலேயே நடைமுறைக்கு வருகின்றது, நமது சுய ஜாதகத்தின் வலிமை நிலை பற்றி ஓர் தெளிவு இல்லாத பொழுது நமது லட்ச்சியங்கள், கனவுகள் மற்றும் தகுதி நிலை பற்றிய விழிப்புஉணர்வு அற்றவர்களாக செயல்படும் தன்மையை தரும், மாறாக நமது சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் தன்மையை பற்றி உணர்ந்து செயலாற்றும் பொழுது நமது உழைப்பு வீணாகாது, நம்பிக்கை குறையாது, நேரவிரையம் ஏற்பட்ட வாய்ப்பில்லை, நமது வாழ்க்கையின் முன்னேற்றத்தை நாமே மிக எளிதாக நிர்ணயம் செய்ய இயலும், மேலும் நமது ஜாதக வலிமை பற்றிய தெளிவு என்பது தடைகளற்ற ஓர் நேர் வழியில் சென்று வெற்றிவாகை சூடும் யோகத்தை தரும் என்பது மறுக்க இயலாத உண்மை.

இதை கருத்தில் கொண்டே, சித்தர்களும், ஞானிகளும் சாஸ்திர வல்லுனர்களும் நமக்கு " ஜோதிட கணிதம் " எனும் பொக்கிஷத்தை விட்டு சென்று இருக்கின்றனர், அதன் பெருமை உணர்ந்து ஜோதிட சாஸ்திரத்தை நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் சகல நலன்களையும் பெறுவதே நாம் செய்த புண்ணியம் நமது முன்னோர்கள் செய்த பாக்கியம், உதாரணமாக கீழ்கண்ட ஜாதகத்தை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை என்ன ? தற்போழுது நடைபெறும் திசை தரும் பலன்கள் என்ன? எதிர்வரும் திசா புத்திகள் தரும் பலாபலன்கள் என்ன ? இதை ஜோதிட சாஸ்திர கணிதம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கடகம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் :  பூராடம் 1ம் பாதம் .

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
3,7ம்  வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெறுவதும்,
6,10ம்  வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
9ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், சுய ஜாதகத்தில்  வலிமை பெற்ற பாவக தொடர்புகள் ஆகும், ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுபயோகன்களை அனுபவிப்பார்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

1,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
4,12 ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுய ஜாதகத்தில்  வலிமை அற்ற பாவக தொடர்புகள் ஆகும், ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னலைகளை அனுபவிப்பார், குறிப்பாக 1,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் மிதம்மிஞ்சிய கடுமையான நெருக்கடிகளை தரும், 1,11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த இன்னல்களை சந்திப்பார்.

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 6பாவகங்கள் வலிமையுடனும், 6பாவகங்கள் வலிமை அற்றும் இருப்பது சுய ஜாதகத்தின் வலிமை நிலையாகும், இனி இந்த ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது ஜாதகரின் தற்போதைய நிலையை சிறப்பாக எடுத்து கூறும்.

செவ்வாய் திசை ( 15/01/2017 முதல் 16/01/2024 வரை ) :

செவ்வாய் திசை ஜாதகருக்கு 3,7ம்  வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று செவ்வாய் திசை முழுவதும் 3,7ம் வீடுகள்  வழியில் தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்குகிறது, 3ம் பாவக  வழியில் இருந்து ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெரும், தன்னம்பிக்கை  மற்றும் தைரியம் அதிகரிக்கும், வெற்றி மேல் வெற்றி உண்டாகும், வியாபாரம் செய்வதற்கு உண்டான நல்ல வாய்ப்புகளும், சகல சௌபாக்கியமும் ஜாதகருக்கு தேடிவரும், செல்வச்செழிப்பில் ஜாதகர் பரிபூர்ண நன்மைகளை பெறுவார், 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல  நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் அமைவர், வெளியூர் வெளிநாடு யோகம் உண்டாகும், தொழில் விருத்தி அபரிவிதமாக அமையும், வாழ்க்கை துணையின் ஆதரவு மற்றும் மக்கள் ஆதரவு மூலம் ஜாதகர் மிகப்பெரிய வெற்றிகளை ஜீவன வழியில் இருந்து தடையின்றி பெறுவார், எனவே ஜாதகருக்கு தற்ப்பொழுது நடைபெறும் செவ்வாய் மஹா திசை ஜாதகருக்கு முழு வீச்சில் சுபயோக பலன்களை ஜீவன ஸ்தான வழியில் இருந்து தருகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் 12 பாகைகளும், இரண்டாம் ராசியான ரிஷபத்தில் 18 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகர் தனது சுய முயற்சியினாலும், வாக்கு வன்மையினாலும் வருமான வாய்ப்புகளையும், அளவில்லா ஜீவன முன்னேற்றத்தை பெறுவார் என்பதை உறுதி செய்கிறது.

செவ்வாய் திசைக்கு அடுத்து வரும் ராகு திசை தரும் பலன்கள் :

 ஜாதகருக்கு செவ்வாய் திசை சுபயோக பலனை தந்த போதிலும், அடுத்து வரும் ராகு திசை 1,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருவது ஜாதகருக்கு நல்லதல்ல, எனவே ராகு திசை ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும் என்பதுடன், அதற்க்கு காரணகர்த்தாவாக ஜாதகரே இருப்பார் என்பது கவனிக்க தக்க விஷயமாகும்.

குறிப்பு :

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை சுப யோகங்களை தருவது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், ஆனால் ராகு திசை சிறப்பான பலனை தருவதற்கு வாய்ப்பு இல்லை என்பதை கருத்தில் கொள்வது ஜாதகருக்கு நன்மையை தரும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட அமைப்பில் பாவக வலிமை நிலை உணர்ந்து செயல்படுவது சம்பந்தப்பட்ட ஜாதகர் அனைவருக்கும் நலன்களை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக