ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( மிதுன லக்கினம் )



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். சாயா கிரகங்களான ராகுகேது  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!


மிதுனம் லக்கினம் :

காலபுருஷ தத்துவத்திற்க்கு 3ம் ராசியான மிதுனத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் ராகு பகவானும், ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தில் கேது பகவானும் தனது சஞ்சார காலம் வரை தரும் பலன்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே! ராகு பகவானின் குடும்ப ஸ்தான சஞ்சாரம் தேய்பிறை காலங்களில் மிதம் மிஞ்சிய சுப யோகங்களை 2ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், மிதுன லக்கின அன்பர்களுக்கு சரளமான தனவரவை தரும், பேச்சு திறன் மூலம் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், தெய்வீக அனுகிரகம் மூலம் வாழ்க்கையில் சுப நிகழ்வுகள் நடைபெறும், திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்தவர்களுக்கு, தடைகள் நீங்கி நல்ல வாழ்க்கை துணையுடன் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் யோகம் உண்டாகும், புதிய தொழில் வழியில் இருந்து வருமானம் வரும், குறிப்பாக விவசாயம் மற்றும் உணவு பொருள் சார்ந்த தொழில் செய்து வரும் அன்பர்களுக்கு நல்ல வருமானமும் தனசேர்க்கையும் உண்டாகும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நன்மைகளை பெறுக, மேலும் வண்டி வாகனம், போக்குவரத்து தொழில் சார்ந்து இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் சிறப்பான வளர்ச்சியை வாரி வழங்கும், வரும் வருமானம் கடன்களை நிறைவு செய்து முழு உரிமையாளராக திகழும் யோகத்தை தரும், செழிப்பு மிக்க எதிர்காலத்தை தேய்பிறையில் ராகுவின் சஞ்சாரம், மிதுன லக்கின அன்பர்களுக்கு வாரி வழங்கும், வளர்பிறை காலத்தில் எதிர் மறையான இன்னல்களை மிதுன லக்கின அன்பர்கள் சந்திக்கும் சூழ்நிலையை தரும், வாக்கு வழியிலான தொல்லைகள் அதிகரிக்கும், முறையற்ற தெளிவற்ற வார்த்தைகள் கடுமையான இன்னல்களை தரும், வாக்குவாதம் கடுமையான நிம்மதியிழப்பை தரும், வளர்பிறை காலத்தில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது மிதுன லக்கின அன்பர்களுக்கு சகல நலன்களையும் தரும், குறிப்பாக குடும்பத்தில் வாழ்க்கை துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சுமூக போக்கை கடைபிடிப்பதே சாலசிறந்தது, மேலும் மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையீடு செய்யாமல், தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பதே மிதுன லக்கின அன்பர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் சுக போகங்களை வாரி வழங்கும்.

 கேது பகவானின் ஆயுள் பாவக சஞ்சாரம் வாழ்க்கை துணை வழியிலான பொருள் வரவை அதிக அளவில் வாரி வழங்கும், மேலும் திடீர் அதிர்ஷ்டம் மூலம் பொருளாதார வளர்ச்சியை மிதுன லக்கின அன்பர்கள் அனைவரும் தனது தொழில் வழியில் இருந்து அபரிவிதமாக பெறுவார்கள், நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் வழியில் தன சேர்க்கை உண்டாகும், இதுவரை செய் தொழிலில் இன்னல்களை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு இனிவரும் காலம் வெகு வேகத்தில் தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், எதிர்பால் இனஅமைப்பினர் மூலம் சிறந்த செல்வாக்கை மிதுன லக்கின அன்பர்கள் பெறுவார்கள், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை அவரவர் செய்யும் தொழில் வழியில் இருந்து பெறுவார்கள், மிதுன லக்கின அன்பர்களுக்கு புதிய தொழில் துவக்க இதுவே சரியான நேரமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, புதிய முயற்சிகள் மற்றும் தொழில் சார்ந்த நடவடிக்கைகள் மிக அபரிவிதமான வளர்ச்சியை வாரி வழங்கும், கனவுகளும் நனவாகும் நேரமிது, எனவே மிதுன லக்கின அன்பர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிகளை பெற இறைஅருள் கருணை புரியட்டும், திடீர் செல்வ சேர்க்கையை தரும் என்பதால் அதை முறைப்படுத்துதலும், பாதுகாப்பதும் மிதுன லக்கின அன்பர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள் என்பதை கருத்தில் கொள்க.

  குறிப்பு :

 மிதுன லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மிதுன லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 

9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக