வெள்ளி, 17 நவம்பர், 2017

சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் என்ன ? கூட்டு தொழில் செய்வது எனது ஜாதகத்திற்கு பொருத்தமானதா ?

  

  சுய ஜாதகத்தில் நவகிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் தனிப்பட்ட முறையில் பலாபலன்களை வாரி வழங்கும் வல்லமை பெற்றவை அல்ல, மேலும் சுய ஜாதகத்தில் ஓர் கிரகம் அமர்ந்த இடத்தின் பலாபலனை தரும் என்று கருதுவதும் தவறானது, உதாரணமாக சுய ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, சமம் என்ற  நிலையில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் திசாபுத்திகள் சுபயோக பலனை தரும் என்று கருதுவதும் தவறானது, அதைப்போன்றே நீசம்,பகை என்ற நிலையில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் திசாபுத்திகள் அவயோக பலனை தரும் என்று கருதுவதும் முற்றிலும் தவறானது, நவகிரகங்களின் திசாபுத்திகள் சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டே யோக அவயோகங்களை வழங்குகிறது, குறிப்பாக ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நடைபெறும் திசாபுத்திகள் எதுவென்றாலும் சுபயோக பலாபலன்களையே வாரி வழங்கும், அது பாவ கிரகத்தின் ( சூரியன்,செவ்வாய்,சனி,ராகுகேது, தேய்பிறைசந்திரன், சூரியனுடன் சேர்ந்த புதன் ) திசாபுத்திகள் என்றாலும் சுபயோக பலாபலன்களையே நடைமுறைக்கு கொண்டுவரும், இவர்களை ஏழரை சனி அஷ்டமசனி, குரு சஞ்சாரம் போன்ற விஷயங்கள் யாதொரு இன்னல்களையும் ஏற்படுத்தாது, சுய ஜாதக வலிமையே மேலோங்கி நிற்கும் என்பதால் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் நன்மைகளே நடைமுறைக்கு வரும்.

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதிக்கப்பட்டோ, அல்லது 6,8,12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றோ அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றோ இருப்பின், ஜாதகருக்கு சுபக்கிரகங்களின் ( குரு,சுக்கிரனை,வளர் சந்திரன், புதன் ) திசா புத்திகள் நடைமுறையில் இருப்பினும், ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான பலாபலன்களே நடைமுறைக்கு வரும், என்பதனை கருத்தில் கொள்வது நலம் தரும் அன்பர்களே !

கீழ்கண்ட ஜாதகர் வினவிய கேள்விகளுக்கான பதில்களுடன், மேற்கண்ட கருத்துக்களை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : துலாம்
ராசி : விருச்சிகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 1ம் பாதம்

6ல் உச்சம் பெற்ற சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் என்ன ?

ஜாதகர் தனது ஜாதகத்தில் சுக்கிரன் 6ல் உச்சம் பெற்று அமர்ந்து இருப்பதாக கூறியிருக்கிறார், அடிப்படையில் அதுவே தவறானது ஏனெனில் சுய ஜாதகத்தில் சத்ரு ஸ்தானம் எனும் 6ம் பாவகம் ஜாதகருக்கு மீன ராசியில் 347:45:08 பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 017:03:59 பாகையில் நிறைவு பெறுகிறது அதாவது ஜாதகரின் சத்ரு ஸ்தானம் எனும் 6ம் பாவகம் மீனத்தில் 13பாகைகளும், மேஷத்தில் 17 பாகைகளும் கொண்டிருக்கின்றது, சுக்கிர பகவான்  346:42:15 பாகையில் மீன ராசியில் உள்ள 5ம் பாவகத்தில் அமர்ந்திருப்பதே  உண்மை நிலை என்பதால், ஜாதகருக்கு சுக்கிரன் 5ம் பாவகத்தில் உச்சம் பெற்று அமர்ந்து இருக்கிறார் என்பதே சரியானது, அடுத்து ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் என்னவென்பதை ஆய்வு செய்வோம், ஜாதகருக்கு சுக்கிரன் திசை 6ம் வீடு பாதக ஸ்தானமான  11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை ஜாதகருக்கு வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றார், சுக்கிரன் ஜாதகத்தில் மீனத்தில் உள்ள 5ம் பாவகத்தில் உச்சம் பெற்று அமர்ந்து இருந்தாலும் தனது திசையில் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை  சந்தித்துக்கொண்டு இருக்கின்றார் என்பதே உண்மை நிலை, பாரம்பரிய முறையில் லக்கினாதிபதி திசை ஜாதகருக்கு நன்மையை தரும் என்று கூறும் விஷயம் எல்லாம் இங்கே எடுபடாது என்பதை கருத்தில் கொள்வது நலம், நவகிரகங்கள் தான் ஏற்று நடத்தும் பாவக வழியிலான பலாபலன்களில் யாதொரு சமரசமும் செய்துகொள்வது கிடையாது, தரவேண்டிய பலன்களை தங்குதடையின்றி வாரி வழங்கும், அது நன்மையென்றாலும் சரி தீமையென்றாலும் சரி, மேற்கண்ட ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரை 6ம் பாவக வழியில் இருந்து படுத்தி எடுத்துவிடும், 6ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12 மற்றும் 1ம் வீடுகளில் வியாபித்து நிற்பது ஜாதகருக்கு உடல் நலம் சார்ந்த இன்னல்களை கடுமையாக தரும்,  ஜாதகருக்கு தனது உடல் நலனை தானே இன்னலுக்கு ஆளாக்கிக்கொள்வார், இதனால் ஜாதகருக்கு மனஅழுத்தமும், மனப்போராட்டமும் அதிகரிக்கும், இதன் தாக்கம் ஜாதகருக்கு 200% விகிதம் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது மேலும் கடன் சார்ந்த தொந்தரவுகள், எதிரிகள் வழியிலான இன்னல்களும் ஜாதகரை படுத்தி எடுக்கும்.

கூட்டு தொழில் செய்வது எனது ஜாதகத்திற்கு பொருத்தமானதா ?

கூட்டு தொழில் செய்ய சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7ம் வீடான களத்திர ஸ்தானமும், கால புருஷ தத்துவத்திற்கு 7ம் ராசியான துலாம் ராசியும் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகத்தில் துலாம் ராசி நல்ல வலிமை பெற்று இருந்த போதிலும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ஜாதகருக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கூட்டு தொழில் செய்வதற்கு ஜாதகருக்கு யோகம் இல்லை என்பதை  தெளிவாக காட்டுகிறது, மேலும் ஜாதகரின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியிலும் வியாபித்து நிற்பது ஜாதகரின் கூட்டு தொழில் அம்சத்திற்கு வேட்டு வைக்கும் அமைப்பாகும், ஜாதகருடன் கூட்டு வைப்பவரும் சேர்ந்து நஷ்டமடைவார் என்பதையே இது தெளிவாக காட்டுகிறது.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,2,3,5,4,9,10ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் இருப்பதால் துணிந்து சுய தொழில் செய்வதே நல்லது, ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகரின் தொழில் வல்லமையை தெளிவாக காட்டுகிறது , மேலும் திறன் மிகுந்த நிர்வாக வல்லமை பெற்றவர் என்பதுடன் பல தொழில்களை நிர்வகிக்கும் வல்லமையை பெற்றவர் என்பதை மேற்கண்ட பாவகங்களின் வலிமை நிலை உறுதிப்படுத்துகிறது, எனவே  ஜாதகர் சுய தொழில் செய்து நலம் பெறுவதே நல்லது ஆனால் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை அதற்க்கு சாதகமாக இல்லை என்பது கவலை அளிக்கும் விஷயமாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

இருப்பினும் சுக்கிரன் திசையில் சூரியன்,செவ்வாய்,குரு,புதன் மற்றும் கேது புத்திகள்  வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால் அந்த காலகட்டங்களில் ஜாதகர் தனது முயற்சிகளை விருத்தி செய்து சிறப்பான முன்னேற்றங்களை  பரிபூர்ணமாக பெறலாம், எனவே சுய ஜாதகத்தில் பாவக வலிமையின்  தன்மையை தெளிவாக உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கையில்  நிச்சயம் நாம் மிகப்பெரிய வெற்றிகளை நமக்கு சொந்தமாக்கிக்கொள்ள முடியும் என்பதற்கு மேற்கண்ட ஜாதகம் ஓர் உதாரணம் அன்பர்களே வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக