சனி, 18 நவம்பர், 2017

தொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தரும் திசாபுத்தி எது ?


கேள்வி :

தற்போழுது நடைபெறும் ராகு திசை தரும் பலாபலன்கள் என்ன ? அடுத்து வரும் குரு திசை தரும் பலன்கள் என்ன ? எனது ஜாதகத்திற்கு தொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தரும் கிரகங்களின் திசாபுத்தி எவை என்பதை தெளிவுபடுத்த இயலுமா ?


லக்கினம் : மிதுனம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம்

பதில் :

தங்களது சுய ஜாதக வலிமை என்பது மிகவும் அபரிவிதமானது என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஏனெனில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் ஒரு பாவகம் கூட வலிமை இழந்து காணப்படவில்லை என்பது தங்களுக்கு இறைஅருள் வழங்கி உள்ள ஆசிர்வாதம் என்பதை தெளிவுபடுத்த " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது, மேலும் தங்களின் ஜாதகத்தில் உள்ள பாவக தொடர்புகள் மிகவும் நேர்த்தியாகவும், சுபயோகங்கள் நிறைந்தததாகவும் உள்ளது, இனி தங்களின் கேள்விகளுக்கான பதில்களை தங்களின் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தெளிவுபடுத்துகிறோம்.

தற்போழுது நடைபெறும் ராகு திசை தரும் பலாபலன்கள் என்ன ?

நடைமுறையில் உள்ள திசா தரும் பலாபலன்கள் பற்றி நமக்கு தெளிவாக தெரிய வருவது நமது வாழ்க்கைக்கான திட்டமிடுதல்களையும், அதன் வழியிலான நன்மைகளையும் பெறுவதற்கு பேருதவியாக அமையும், எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றிய தெளிவு நமது எதிர்கால வாழ்க்கைக்கான திட்டமிடுதல்களை மிக சிறப்பாக எடுத்துச்செல்ல உதவி புரியும், நமது ஜாதகத்தில் நடைமுறையில் உள்ள திசை சுய ஜாதகத்தில் எந்த பாவக பலன்களை ஏற்று நடத்துகிறது அந்த பாவக வழியில் இருந்து நன்மை தீமை பலன்களை சிறிதும் மாற்றம் இன்றி தரும், இதை அடிப்படையாக கொண்டு பார்க்கும் பொழுது தங்களின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் ராகு திசை ( 05/04/2002 முதல் 05/04/2020 வரை ) தங்களுக்கு 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற பூர்வபுண்ணிய ஸ்தான பலனை முழு அளவில் வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, இது தங்களுக்கு சமயோசித அறிவு திறன், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம், குலதெய்வத்தின் அருளாசி மூலம் சகல வித சம்பத்துக்களையும் பெரும் யோகம், தெய்வீக அனுக்கிரகம், நல்ல குழந்தை  பாக்கியம் மற்றும் சிறந்த வாரிசு யோகம், குழந்தைகள் வழியிலான சுபயோகங்கள், முன் பின் அறிமுகம் இல்லாத அன்பர்கள் வழியிலான உதவிகள், தொழில் துறையில் நல்ல ஞானம், அதன் வழியில் இருந்து பெரும் பொருளாதார வளர்ச்சி, புதிய சிந்தனை மற்றும் புதிய திட்டமிடுதல்கள், மனதில் நினைத்த விஷயங்களை சுவீகரிக்கும் யோகம் என்றவகையில் சிறப்பான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், மேலும் தங்களின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாகவும் சர காற்று தத்துவ அமைப்பிலும் வலிமை பெற்று இருப்பது, தங்களின் வெளிவட்டார பழக்க வழக்கத்தை சிறப்பாக அமைத்து தரும், நல்ல மக்கள் செல்வாக்கு, நல்ல நண்பர்கள் சேர்க்கை, பிரபல்ய யோகம், வெளிநாடுகளில் தங்களின் அறிவு திறன் கொண்டு ஜீவனம் பெரும் அமைப்பு, வாழ்க்கை துணை வழியிலான அறிவார்ந்த உதவிகள், அரசியல் செல்வாக்கு , கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது என்பது தங்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாகும்.

ராகு திசை வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும், 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு துலாம் ராசியில் அமைவதும் தங்களின் வாழ்க்கையில் சகல விதமான செல்வாக்கினையும் தங்களின் அறிவு சார்ந்த அமைப்பிலும், வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் வெளியூர் வெளிநாட்டில் இருந்து அபரிவிதமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ராகு திசை தங்களுக்கு சிறப்பான யோக பலன்களை வழங்கி கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சந்திரன் புத்தி 8ம் பாவக வழியில் இருந்து மிகுந்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது தங்களுக்கு மேலும் நன்மைகளை தரும் அமைப்பாகும், 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 1ம் ராசியாக அமைவது தங்களின் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை உறுதி செய்யும், திடீர் அதிர்ஷ்டம் தங்களின் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றங்களை வாரி வழங்கும்.

அடுத்து வரும் குரு திசை தரும் பலன்கள் என்ன ?

எதிர்வரும் குரு திசை தங்களுக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமை மிக்க சுபயோக பலாபலன்களை ஜீவன ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்குவது தங்களுக்கு சிறப்பான அம்சமாகும், குறிப்பாக தங்களின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்பத்தில் 1பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 2பாகை வரை வியாபித்து நிற்பது, முதலீடுகளில் வரும் அதிக லாபத்தை குறிக்கின்றது, தங்களின் தொழில் ரீதியான முதலீடுகள் மிகுந்த லாபத்தை தரும், தொழில் ரீதியாக மனநிம்மதியும், திருப்திகரமான யோக வாழ்க்கையையும் ஜீவன வழியில் இருந்து பரிபூர்ணமாக வாரி வழங்கும் என்பதால் தாங்கள் தொழில் ரீதியான சிறப்புக்களை எதிர்வரும் குரு திசையில் பரிபூர்ணமாக பெறுவீர்கள் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், வாழ்த்துக்கள்.

தங்களின் ஜாதகத்திற்கு தொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தரும் கிரகங்களின் திசாபுத்திகள்.

சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற ஸ்தானம் 5,11ம் பாவகம் ஆகும், 5,11ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து தாங்கள் 100% விகித நன்மைகளை பரிபூர்ணமாக அனுபவிக்கலாம் என்பதால் 5,11ம் பாவக தொடர்பை ஏற்று நடத்தும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் தங்களுக்கு தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுபயோகங்களை வாரி வழங்கும் இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது தங்களுக்கு, சுக்கிரன்,சந்திரன்,ராகு,சனி,புதன் மற்றும் கேது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் தங்களுக்கு பரிபூர்ண சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும், மேற்கண்ட கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் நடைபெறும் பொழுது தங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிகளை 100% விகிதம் பெற இயலும் என்பதை " ஜோதிடதீபம் " தெளிவாக பதிவு செய்கிறது.

குறிப்பு :

  பெரும்பாலும் மேற்கண்ட ஜாதகம் போன்று ஓர் வலிமையான ஜாதகம் அமைவது அரிதிலும் அரிதானது, ஜாதகர் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் சிறப்பான சுபயோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பதை உறுதிபட சொல்ல முடியும், வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் பலாபலன்களை அனுபவிக்க முடியவில்லை எனில் ஜாதகர் தனது பழக்க வழக்கங்களிலும், எதிர்பால் இணைசேர்க்கை வழிகளிலும் சுய பரிசோதனை செய்துகொள்வது, யோக பலன்களில் ஏற்பட்ட தடைகளுக்கான மூல காரணத்தை தெரிந்துகொள்ள இயலும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக