ஞாயிறு, 26 நவம்பர், 2017

திருமண தடை மற்றும் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தரும் நவகிரக திசாபுத்திகள் !



 சுய ஜாதகத்தில் சிறப்பான யோகங்கள் இருப்பினும், நடைபெறும் திசாபுத்தி அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் யோகங்களை தரும் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் இருந்தும் பயனற்ற நிலையையே தரும், குறிப்பாக ஜாதகர் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் க்கு அலைந்த நிலையை தந்துவிடும், கீழ்கண்ட ஜாதகருக்கு வயது 41 கடந்தும் திருமணம் எனும் பந்தத்தில் இணையாத சூழ்நிலையை தந்து, ஜாதகரையும் ஜாதகரின் பெற்றோரையும் மிகுந்த மனவேதனைக்கு ஆளாக்கிக்கொண்டு இருக்கின்றது, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் 9ம் வீடு என மூன்று வீடுகள் மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, மற்ற 9 வீடுகளும் மிகவும் வலிமையுடன் இருந்தும் ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியிலான யோக பலன்களை சிறிதும் அனுபவிக்க இயலாத சூழ்நிலையில் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றார், சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் வீடுகளில் 12ம் வீடுமட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஒரு வகையில் இன்னல்களை தந்த போதிலும் 2,5,7,8ம் பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை ஏன் ஏற்படுகிறது என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 2ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகருக்கு பெரும்பாலான பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், குறிப்பாக சுய ஜாதகத்தில் 1,2,3,4,5,7,8,10,11 எனும் ஒன்பது பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை மேற்கண்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், 6,9,12ம் எனும் மூன்று பாவகங்கள் மட்டுமே சுய ஜாதகத்தில் வலிமை அற்று காணப்படுகிறது இதில் 6,12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான பாதிப்புகளையும், 9ம் பாவக வழியில் அளவில்லா கடுமையான பாதிப்புகளையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட பாவக வழியிலான நன்மை தீமைகளை ஜாதகர் எந்த காலகட்டத்தில் அனுபவிப்பார் என்பதில் இருக்கிறது ஜாதகரின் முன்னேற்றம் என்பது, ஜெனன காலம் முதல் தற்போழுது  வரை நடைபெற்ற நவகிரக திசை ஜாதகருக்கு தந்த பலாபலன்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

ஜெனன கால கேது திசை 4வருடம் 2மாதம் ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை தடையின்றி வாரி வழங்கியது ஜாதகருக்கு வளரும் சூழ்நிலையில் சிறப்பான யோக பலன்களை  வாரி வழங்கியிருக்கின்றது, ஜாதகர்  மாற்றும் ஜாதகரின் பெற்றோர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து சிறப்பான யோக பலன்களை பெற்று இருக்கின்றனர்.

சுக்கிரன் திசை 20 வருடம் ஜாதகருக்கு 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் ஜாதகருக்கும் ஜாதகரின் தகப்பனாருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கி இருப்பது சிறப்பான யோக பலன்களை தந்து இருக்கின்றது, ஜாதகரின் அடிப்படை கல்வி, உயர்கல்வி மற்றும் பட்டயபடிப்பு பரிபூர்ண சுபயோகங்களை வழங்கி இருக்கின்றது, கல்வி காலம் சிறப்பாக நிறைவு பெற்ற உடன் ஜாதகருக்கு நல்லதோர் தொழில் வாய்ப்பும் அமைந்து நிறைவான வருமானத்தை பெற ஆரம்பித்தார் என்பது ஜாதகருக்கு சுக்கிரன் திசை வழங்கிய சிறப்பு பலன்களாகும்.

சூரியன் திசை 6 வருடம் ஜாதகருக்கு 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான நன்மைகளை 5ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கியது ஜாதகர் தான் கற்ற கல்வி வழியில் இருந்து ராஜயோக பலன்களை பெற்றார் என்பது ஜாதகருக்கு சூரியன்  திசையால் கிடைத்த அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.

சந்திரன் திசை 10 வருடங்கள் ஜாதகருக்கு 2,4ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான யோக பலன்களை வழங்கியது, ஜாதகருக்கு தொழில் ரீதியான சுபயோகங்களை வழங்க ஆரம்பித்தது, அதன் வழியில் ஜாதகர் பெற்ற தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி ஜாதகரின் வாழ்க்கை பாதையை வெகுவாக சீர்குலைக்க ஆரம்பித்தது, குறிப்பாக சந்திரன் திசையில் செவ்வாய் மற்றும் ராகு புத்திகள் ஜாதகருக்கு தவறான எதிர்பாலின சேர்க்கையையும், தீய பழக்க வழக்கங்களை கொண்ட நண்பர்களின் சேர்க்கை ஜாதகரின் வாழ்க்கையை புரட்டிப்போட ஆரம்பித்தது, செவ்வாய் புத்தியில் ஜாதகருக்கு ஏற்பட்ட அவப்பெயர் மற்றும் தவறான பழக்க வழக்கங்கள் ஜாதகரின்  வாழ்க்கையில் திருமணம் எனும் முயற்சிகளில் பிரதிபலித்தது, ஜாதகரின் திருமண முயற்சிகள் அனைத்திற்கும்  வெகுவான தடை தாமதத்தை வழங்க ஆரம்பித்தது தற்போழுது வரை நிறைவடையவில்லை, திருமணத்திற்க்கான பகிர்தன முயற்சிகள் யாவும் ஜாதகருக்கு கடுமையான தோல்வியை மட்டுமே வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 05/05/2016 முதல் 05/05/2023 வரை ) ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் பாதகம் மற்றும் விரைய ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது, ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கான முயற்சிகள் அனைத்திற்கும் நல்லதோர் திண்டுக்கல் பூட்டை பலமாக பூட்டி சாவியை தன்வசம் வைத்துக்கொண்டது என்பதுடன் அடுத்துவரும் ராகு திசையிடம் தன்வசம் உள்ள சாவியை பொறுப்பாக தந்துவிடும் என்பதை நினைக்கும் பொழுது ஜாதகரின் இல்லற வாழ்க்கையை பற்றிய கேள்விக்குறி மிக பெரியதாக நம்முன் நிற்கின்றது.

மேற்கண்ட ஜாதகருக்கு 1,2,3,4,5,7,8,10,11 எனும் ஒன்பது பாவகங்கள் வழியில் இருந்து சுபயோக அமைப்புகள் இருப்பினும், நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல் வலிமையற்ற பாதகம் மற்றும் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு அதிர்ஷ்டம் இருந்தும்  துரதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது, பெரும்பாலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் இருப்பினும், நடைமுறையில், எதிர்காலத்தில் வலிமை பெற்ற பாவக பலனை நவக்கிரக திசாபுத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகரின் பாடு பெரும் தர்மசங்கட நிலைக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், அதற்க்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம்.

ஜாதகருக்கு திருமணம் தாமதமாக காரணம் என்ன ?

1) சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாதக ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாகவும் களத்திர ஸ்தானமாகவும் அமைகிறது, சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டாலும் ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆக அதிக வாய்ப்பு உள்ளது.

2) கடந்த சந்திரன் திசையில், செவ்வாய் புத்தியில் ஜாதகருக்கு ஏற்பட்ட எதிர்பாலின தவறான தொடர்பு ஓர் அவயோக ஜாதகமாகும் ( தரித்திர யோகம் ) இதன் தாக்கத்தை ஜாதகர் தற்போழுது வரை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார் என்பதுடன், செவ்வாய் புத்திக்கு அடுத்து வந்த ராகு புத்தி ஜாதகரின் திருமண முயற்சிக்கான வாய்ப்பை தட்டிப்பறிக்கும் களங்கத்தை ஏற்ப்படுத்தியது.

3) தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசையும் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாதகம் மற்றும் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையை ஜீவனம் மற்றும் களத்திர வழியில் கடுமையான இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, இதுவே ஜாதகரின் திருமண தாமதத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசை எதுவென்றாலும் சரி சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை
எனில் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் பலனேதும் இருக்காது, சுய ஜாதகத்தில் அவயோகங்கள் இருந்தாலும் நடைபெறும் அல்லது எதிர்வரும் திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் ஏற்று நடத்தினால் சுய ஜாதகத்தில் உள்ள அவயோகங்கள் யாவும் ஜாதகருக்கு நடைமுறைக்கு வாராமல், ஏற்று நடத்தும் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் சுபயோக பலன்களையே அனுபவிப்பார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து: