ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் , இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி பொங்கவும் !



பெரும்பாலான ஜோதிடர்கள்  திருமண பொருத்தம் நிர்ணயம் செய்யும்பொழுது ஜாதக அமைப்பில் நட்சத்திர அமைப்பை கொண்டும் , ராகு கேது கிரகங்களை கொண்டும் , செவ்வாய் பகவானின் தன்மையை கொண்டும் , பொருத்தம் நிர்ணயம் செய்கின்றனர் , மேலும் சிலர்  லக்கினத்திற்கு இரண்டாம் வீடு , களத்திர பாவகம் , பூர்வ புண்ணியம்  போன்ற அமைப்பை வைத்தும் பொருத்தம் நிர்ணயம் செய்பவர்களும் உண்டு .

 
 இந்த அமைப்பை பின்பற்றி பொருத்தம் நிர்ணயம் செய்யும் ஜோதிடர்கள்  பொருத்தம் காணும் ஜாதகங்களில் குடும்ப ஸ்தானத்திலோ அல்லது பூர்வ புண்ணியம், களத்திரம் ,ஆயுள் பாவகத்தில்  சூரியன் , செவ்வாய் ,ராகு , கேது ,சனி கிரகங்கள் அமர்ந்திருந்தால்( சமபந்த பட்ட பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள்  இருக்கிறதா? இல்லையா? என்று கூட தெரியாத நிலையிலும் ) போதும் கண்ணை மூடிக்கொண்டு அவை நன்மை செய்யாது , தோஷம் மட்டும் செய்யும் என்றும் நிர்ணயம் செய்கின்றனர் , மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் பாவகத்தில் மேற்கண்ட கிரகங்கள் அமர்வது மிக  பெரிய தோஷத்தை செய்யும் என்றும் , ஜாதகருக்கோ , ஜாதகிக்கோ திருமணம் நடக்க கால தாமதம் ஆகும் என்றும் தீர்மானம் செய்து விடுகின்றனர் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்த பதிவில் காண்போம்.

 

கடந்த சில தினங்களுக்கு முன் ஜோதிட ஆலோசனைக்காக வந்திருந்த எனது நண்பரின் உறவினர் கேட்ட கேள்வி இது , கடக இலக்கின அமைப்பை சேர்ந்த பெண்ணிற்கு  லக்கினத்திற்கு 2 ல் சனி இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படுமா ? நல்ல குடும்பம் அமையாதா ? குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காதா போன்ற கேள்விகளை முன் வைத்தார் , மேலும் இதற்க்கு முன் சந்தித்த ஜோதிடர்கள் எல்லாம் ஜாதகிக்கு திருமணம் நடக்கவே நடக்காது என்று சொல்லியதாகவும் , ஜாதகிக்கு  லக்கினத்திற்கு 2 சனி ராகு சேர்க்கையும் , 8 ல் கேது என்ற அமர்ந்து இருப்பதை காரணம் காட்டியதாக கூறினார் , மேலும் இதனால் தாங்கள் ( பெற்றோர் ) அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியதாக வருத்தப்பட்டனர் .

 

அந்த ஜாதகியின் சுய ஜாதகத்தை ஆராய்ந்த பொழுது லக்கினம் பாவகம்  கடக ராசியில்  115 .22 பாகையில் ஆராம்பித்து, சிம்ம ராசியில் 145 .26 பாகையில் நிறைவு பெற்று இருந்தது , மேலும் ஜாதகத்தில் ராகு கேது முறையே சிம்மத்தில் 143 .12 பாகையிலும் , கும்பத்தில் 323 .12 பாகையிலும் அமர்ந்திருந்தனர் , சனிபகவான் சிம்மத்தில் 144 .12 அமர்ந்திருந்தார் , எனவே உண்மையில் இந்த ஜாதகத்தில் ராகு சிம்ம ராசியில்  லக்கினத்திற்கு உட்ப்பட்ட143 .12 பாகையில் இருக்கிறார் , மேலும் சனிபகவானும்  சிம்ம ராசியில்  லக்கினத்திற்கு உட்ப்பட்ட144 .12 பாகையில் இருக்கிறார் , கேதுபகவான் கும்பராசியில் களத்திர பாவகத்திர்க்கு உட்ப்பட்ட 323 .12 பாகையில் இருக்கிறார். இதுவே ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை , இதை வைத்து பார்க்கும் பொழுது இதற்க்கு முன் பார்த்த ஜோதிடர்களின் கருத்து மற்று பலன்கள் தவறு என்பது  உறுதியாகிறது .

 

இதற்க்கு அடுத்ததாக இந்த பாவகத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் ஜாதகிக்கு நன்மையை செய்கிறதா? தீமையை செய்கிறதா ? என்பதை கவனிக்க வேண்டும், அப்படி பார்க்கும் பொழுது ராகு கேது கிரககள் லக்கினம் மற்றும் களத்திர பாவக அமைப்பிற்கு 100 சதவிகித நன்மையை மட்டுமே செய்து கொண்டு இருக்கிறது என்பதே முற்றிலும் உண்மை மேலும் ஜாதகியின் குடும்ப பாவகம் மட்டும் 33 சதவிகிதம் பாதிக்க  பட்டு இருக்கிறது ( இரண்டாம் பாவகத்திர்க்கு உண்டான சூரியன் தனது வீட்டிற்கு எட்டில் மறைவு) , இதானாலேயே ஜாதகிக்கு திருமணம் தாமதம் ஆகிறது ஆனால் நிச்சயம் திருமணம் நடக்கும் என்பது உறுதியாகிறது , இதில் சனி பகவானுக்கோ , ராகு பகவானுக்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை காரணம் அவர்கள் இருப்பது லக்கினத்தில் ( பாவக அமைப்பில் பார்க்க வேண்டும்  ) என்பதால் , இதில் இருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் பல ஜோதிடர்கள் , பொது பலனை அடிப்படையாக வைத்து, தனிப்பட்ட ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்வதாலேயே இதுமாதிரியான குழப்பங்கள் ஏற்ப்படுகிறது .

 

மேலும் பல ஜோதிடர்கள் திருமணம் பொருத்தம் காணும் பொழுது, பாவ கிரகங்கள் ( அதாவது சூரியன் , தேய்பிறை சந்திரன் , சூரியனுடன் சேர்ந்த புதன் , செவ்வாய் ,சனி ,ராகு ,கேது ) குடும்பம் ,பூர்வ புண்ணியம் , களத்திரம் , ஆயுள் பாவகங்களில் இருந்தால் அவ்வளவுதான். அந்த  கிரகங்கள் 100 சதவிகிதம்  கெடுதல் தான் செய்யும் என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான அணுகு முறை , மேலும் ஜோதிடத்தை பற்றி அடிப்படை விஷயம் கூட தெரியாதவர்கள் செய்யும் வேலை , உண்மையில் மேற்கண்ட அமைப்பில் கிரகங்கள் இருந்தால் பாவக முறைப்படி அவைகள் குறிப்பிட்ட பாவகத்தில்தான் இருக்கிறதா என்று தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம் .

 

மேலும் அமர்ந்திருக்கும் கிரகங்கள் சம்பந்த பட்ட பாவகத்திர்க்கு நன்மையை செய்கிறதா? தீமையை செய்கிறதா ? என்று தெளிவாக தெரிந்து கொண்டு  பொருத்தம் நிர்ணயம் செய்வது 100 சதவிகிதம் சரியாக இருக்கும் , நம்மை நம்பி வருபவர்களுக்கு ஜாதக ரீதியான சரியான உண்மையான பலனை சொல்ல முடியும் , இதனால் நம்மை நம்பி வருபவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும் , ஜோதிடத்தின் மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்ப்படும், இறை அருள் ஜோதிடர் ஆகிய  நமக்கு பரிபூரண நல்லாசிகள் வழங்கும் .

 

திருமண பொருத்தம் நிர்ணயம் செய்யும்பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

 

1 ) எந்த ஒரு லக்கினம் என்றாலும் சரி , ராசி என்றாலும் சரி , நட்சத்திரம் என்றாலும் சரி , சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும் , களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகமும் , நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்வதால் வாழ்க்கை சிறப்பாக அமையும் .

2 ) நட்சத்திர பொருத்தம் மட்டுமே தம்பதியரின் சிறப்பான  வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில்லை .

3 ) செவ்வாய் தோஷம் என்பதெல்லாம் முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயங்கள் , செவ்வாய் உண்மையில் எவ்வித தோஷத்தையும் செய்வதில்லை .

4 ) சனி களத்திர பாவகத்தில் இருந்தால் ஜாதகருக்கு திருமணம் நடக்க தாமதமாகும் என்று கணிதம் செய்வது முற்றிலும் தவறும் , ( மகர லக்கினத்திற்கு கடகத்தில் அமரும் சனியும் , கும்ப லக்கினத்திற்கு சிம்மத்தில் அமரும் சனியும் ஜாதகருக்கு சரியான பருவத்தில் சிறப்பான திருமண வாழ்க்கையை அமைத்து தந்துவிடுவார் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் )  எந்த ஒரு ஜாதகத்திலும் ஒருபாவகத்தை முழுமையாக ஆளுமை செய்யும் திறன் ராகு , கேது கிரகங்கள் மட்டுமே உண்டு மற்ற கிரகங்களுக்கு இந்த சக்தி கிடையாது .

5 ) பூர்வ புண்ணியத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால் குழந்தை பாக்கியம் இல்லை என பலன் சொல்லுவது மிகப்பெரிய தவறு , மேலும் ராகு, கேது கிரகங்கள் ரிஷபம்,துலாம்.
  மிதுனம் , கன்னி ( புதன் சூரியனுடன் 14 பாகைக்கு மேற்பட்டு இருக்க வேண்டும்) கடகம் ( வளர் பிறை சந்திரனாக இருக்க வேண்டும் ) தனுசு , மீன ராசிகளில் அமர்ந்து சுய ஜாதகத்திற்கு  லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகமாக இருந்தால் சம்பந்த பட்ட ஜாதகருக்கு 100 சதவிகிதம்  நிச்சயம் ஆண் வாரிசு உண்டு .

6 ) எக்காரணத்தை கொண்டும் பெண்ணின் ஜாதகத்திலும், ஆணின் ஜாதகத்திலும் 12 ம் பாவகம் பாதிக்க படாமல் இருப்பது தம்பதியரின் வாழ்க்கையில் எப்பொழுதும் மன நிம்மதியான தாம்பத்தியத்தை கொடுக்கும் , நான்காம் பாவகம் நல்ல நிலையில் இருப்பது விட்டு கொடுக்கும் மனபான்மையையும் , சொத்து சுக சேர்க்கையையும் வாரி வழங்கும் .

 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக