சனி, 4 ஆகஸ்ட், 2012

ஒருவருடைய சுய ஜாதகத்தில் பலன் நிர்ணயம் செய்யும் வழி முறைகள் !



ஒருவருடைய ஜாதகத்தில் நடைபெறும் நன்மை தீமை பலன்களை நிர்ணயம் செய்வது லக்கினம் முதற்கொண்டு 12 வீடுகளே ( பாவகங்கள் ) , எனவே ஒருவருடைய ஜாதக அமைப்பில் அனைத்து  திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவைகள், மேற்கண்ட 12   வீடுகளின்   பலன்களையே நிச்சயம் தரும் , மேலும் ஒருவருடைய ஜாதக அமைப்பில் மேற்கண்ட 12 வீடுகளும் ( பாவகங்கள் ) எவ்வித பலனை ( நன்மையா ? தீமையா ? ) தருகிறது என்று துல்லியமாக கண்டறிவது ஜாதக பலனை தெளிவாக துல்லியமாக சொல்ல வழிவகுக்கும்.

 

1) இதற்க்கு முன் நடந்த  திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவை ஜாதகனுக்கு எந்த வீடுகளின் பலனை தந்தது ,
2 ) தற்பொழுது நடக்கும்
திசை, புத்தி, அந்தரம், சூட்சமம்  ஆகியவை ஜாதகனுக்கு எந்த வீடுகளின் பலனை தந்து கொண்டு இருக்கிறது ,
3 ) எதிர் வரும்
திசை, புத்தி, அந்தரம், சூட்சமம்  ஆகியவை ஜாதகனுக்கு எந்த வீடுகளின் பலனை தரும் என்று துல்லியமாக கண்டறிவதும்,

 

ஒருவருடை ஜாதக பலனை துல்லியமாக கணிதம் செய்ய சரியான வழி முறையாகும் , இந்த முறையில்  ஜாதக பலனை நிர்ணயம் செய்த பிறகு,  தற்பொழுது நடக்கும் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவை எந்த வீடுகளின் பலனை தருகிறது , அந்த வீடுகள் ஜாதகருக்கு நன்மையான  பலனை தருகிறதா  , தீமையான பலனை தருகிறத என்று நிர்ணயம் செய்வதும் , மேற்கண்ட வீடுகளுடன் கோட்சார கிரகங்கள் சம்பந்தம் பெறுகிறதா , அவ்வாறு சம்பந்தம் பெரும்பொழுது கோட்சார கிரகங்கள் ஜாதகருக்கு நன்மையை தருகிறதா ? தீமையை தருகிறதா ? என்று கணிதம் செய்வது ஜாதக பலனை துல்லியமாக சொல்ல ஏதுவாக அமையும் .

 

ஆக ஒருவருடைய ஜாதக அமைப்பில் துல்லியமான பலனை நாம் கணிதம் செய்து விட்டோம் எனில் நிச்சயம் ஜாதகருக்கு சிறப்பான வாழ்க்கை அமைத்து தர ஜோதிட சாஸ்திரம் 100 சதவிகிதம் உதவி புரியும் என்பதில் சந்தேகம் இல்லை , ஒருவருக்கு ஜாதக ரீதியாக நடப்பு திசை அமைப்பு நன்மை செய்து கொண்டு இருக்கும் பொழுது செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிமேல் வெற்றி தரும் , எனவே நாம் ஜாதகரை துணிந்து அனைத்து காரியங்களையும்  செய்ய சொல்லி ஆலோசனை வழங்கலாம் , இதனால் ஜாதகர் 100 சதவிகிதம் நன்மையே பெறுவார் என்பது உறுதி .

 

இதுவே மாறி ஒருவருக்கு ஜாதக ரீதியாக நடப்பு திசை அமைப்பு  தீமையான பலனை வழங்கி கொண்டு இருக்கும் பொழுது , எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் தோல்வி பெரும் , இழப்புகள் பலவற்றை  சந்திக்க வேண்டி வரும் , மன நிம்மதி இழப்பு , உறவுகள் , நண்பர்கள் வழியில் இருந்து ஏமாற்றம் போன்ற சூழ்நிலை வரக்கூடும் , எனவே ஜாதகரை  குறிப்பிட்ட காலகட்டங்கள் வரை எச்சரிக்கை செய்து விழிப்புடன் இருக்க சொல்லி  ஆலோசனை வழங்கலாம் , இதனால் ஜாதகர் மற்றும் ஜாதகரை சார்ந்தவர்கள் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு 100 சதவிகிதம்  நன்மை பெறுவார்கள் என்பது உறுதி .

 

ஒருவருடைய ஜாதக ரீதியான பலன்களை தெளிவாக தெரிந்து கொள்ளும் பொழுது , அந்த ஜாதகனுக்கு சரியான சிறப்பான  வாழ்க்கையை  ஜோதிட சாஸ்திரம் நன்கு அறிந்தவர்களால் நிச்சயம் அமைத்து தந்து விட முடியும் , இதனால் ஜோதிட கலையின் மீதும் , ஜோதிடர்கள் மீதும் மக்களுக்கு நல்ல நம்பிக்கை வரும் என்பதில் ஐயமில்லை , இதற்க்கு ஜோதிட கலையை சிறந்த குரு மூலம் முறையாக பயின்று தேர்ச்சி பெறுவது அவசியம் , ஜோதிட கலையை  முறையாக பயின்று அதன் மூலம் மக்களுக்கு வாழ்க்கையில் நல் வழி காட்டும் அன்பர்களுக்கு , இந்த ஜோதிடக்கலை மென்மேலும் சகல செல்வ வளத்தை வாரி வழங்குகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை மேலும் இறை நிலையின் அருளாற்றல் சம்பந்தபட்டவருக்கு எப்பொழுதும் துணை நிற்கிறது , இதை எனது ஜோதிட குரு அவர்களின் ஆசியாலும் , எனது வாழ்க்கை அனுபவத்திலும் கண்ட 100 சதவிகித உண்மையாகும் .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக